search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால் முறிவு"

    • சதீஷ்வரன் (வயது14). இவர் செவ்வாய்ப்பேட்டை நகரவை ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர் பள்ளி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கருமந்துறை பகுடுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சதீஷ்வரன் (வயது14). இவர் செவ்வாய்ப்பேட்டை நகரவை ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் பள்ளி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் சதீஷ்வரன் இரவு துணிகளை துவைத்து மாடியில் காயவைத்துள்ளார். அதை எடுப்பதற்காக இன்று காலை 2-வது மாடிக்கு சென்று கீழே இறங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மாணவனுக்கு கால் முறிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு சக மாணவர்கள் பார்த்து மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. . இவர் இன்று காலை 8 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள முத்துக்கருப்பன் என்பவரது வீட்டின் சந்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது தொடர் மழை காரணமாக முத்துக் கருப்பனின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.

    இது குறித்து கால் முறிவு ஏற்பட்ட பெரியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

    • திருநாவலூர் அருகே பார்சல் லாரி மற்றொரு லாரி மீது மோதி டிரைவர் கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (வயது 35) இவர் தனியார் பார்சல் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சேலத்தில் இருந்து சென்னை நோக்கி லாரியில் பார்சல் ஏற்றிக்கொண்டு வந்தார். அ ப்போது உளுந்தூ ர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடப்பட்டிருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பார்சல் லாரி மோதியது. பார்சல் லாரி வேகமாக வருவதைப் பார்த்த தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இதனால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் பார்சல் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோஜ்க்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×