என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured leg"

    • நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
    • புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஷாஹாபூரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பதிலாக மருத்துவர்கள் தவறாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    பெற்றோரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அதிகாரி உறுதியளித்தார். மேலும், விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.

    அவர் ஜூன் 15ம் தேதி அன்று ஷாஹாபூரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    காயமடைந்த காலுக்குப் பதிலாக மகனின் அந்தரங்கப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

    பின்னர், அவர்களது தவறை உணர்ந்த மருத்துவர்கள், காயமடைந்த காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்" என்றனர்.

    மேலும் இதுகுறித்து சஹாப்பூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார்.
    • பாகிஸ்தான் அதிபர் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    பாகிஸ்தான் அதிபர் சர்தாரி துபாயில் விமானத்தில் இருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடந்த புதன்கிழமை துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார். இதில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இன்னும் நான்கு வாரங்கள் சிகிச்சையில் இருப்பர். மேலும் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.

    ×