என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் அதிபர்"
- ஆசிப் அலி சர்தாரி அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் அதிபராக ஆசிஃப் அலி சர்தாரி உள்ளார். இவரின் இளைய மகள் ஆசீபா பராளுமன்றத்தின் என்.ஏ.207 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் முறையாக அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி ஏன்.ஏ.-207 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், தனது மகளை நிறுத்தியுள்ளார். நேற்று சிந்து மாகாணம் நவாப்ஷா பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரிடம் வேட்புமனுவை அளித்தார்.
ஆசிபா பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசீர் பூட்டோ- சர்தாரி தம்பதியின் இளைய மகள் ஆவார். ஆசிபாவின் சகோதரர் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் நாட்டின் மந்திரியாக இருந்துள்ளார்.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் நாவஸ் ஷெரீப் கட்சி ஆட்சி அமைக்க பிலாவல் பூட்டோ ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால், மந்திரிசபையில் இடம் பெற மறுத்துவிட்டார். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.
சர்தாரி தனது மகள் ஆசிபாவை பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணி என அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாட்டின் பாரம்பரியப்படி மனைவிதான் முதல் பெண்மணியாக அறிவிக்கப்படுவார். ஆனால், பெனாசீர் பூட்டோ இல்லாததால் தனது மகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.
- துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார்.
- பாகிஸ்தான் அதிபர் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி துபாயில் விமானத்தில் இருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடந்த புதன்கிழமை துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார். இதில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இன்னும் நான்கு வாரங்கள் சிகிச்சையில் இருப்பர். மேலும் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தின. அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் விமானங்கள், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது விரட்டி அடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களால் இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-
இந்தியாவை நாம் அணுகுகிற முறையில் இருந்தே நாம் அமைதியை நேசிப்பவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அடிப்படைவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது.
ஆனால் இந்தியாவோ, இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது.
பாகிஸ்தான், கடுமையான உள்நாட்டு பிரச்சினைகளை எதிர்கொண்டது. அதைக் கடந்து ஸ்திரத்தன்மை நோக்கி நகர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். #ArifAlvi
பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி (வயது 69) வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் பதிவான 430 வாக்குகளில் டாக்டர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார். இதையடுத்து புதிய அதிபர் பதவி ஏற்புக்கான நடைமுறைகள் தொடங்கின.

இதற்கிடையே தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு அதிபர் மாளிகையில் நேற்று பிரிவுபசார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மம்னூன் உசேன், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த திருப்தியுடன் விடைபெறுவதாக கூறினார். தனது பதவிக்காலத்தில் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். #PakistanPresident #DrArifAlvi






