திருச்செந்தூரில் கடல் சீற்றம்: கடலில் குளித்த 2 பெண்களுக்கு கால் முறிவு

இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கம் போல பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
திருச்செந்தூரில் கடல் சீற்றம்: கடலில் குளித்த 2 பெண்களுக்கு கால் முறிவு
Published on

திருச்செந்தூர்:

வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரிலும் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. எனினும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கம் போல் ஏராளமானவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினர்.

அப்போது அங்கு புனித நீராடிய காரைக்குடியை சேர்ந்த சிவகாமி (வயது50), சென்னையை சேர்ந்த கீர்த்தனா (40) என்ற 2 பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து 2 பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக கடலுக்குள் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com