search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parcel lorry"

    • திருநாவலூர் அருகே பார்சல் லாரி மற்றொரு லாரி மீது மோதி டிரைவர் கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (வயது 35) இவர் தனியார் பார்சல் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சேலத்தில் இருந்து சென்னை நோக்கி லாரியில் பார்சல் ஏற்றிக்கொண்டு வந்தார். அ ப்போது உளுந்தூ ர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடப்பட்டிருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பார்சல் லாரி மோதியது. பார்சல் லாரி வேகமாக வருவதைப் பார்த்த தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இதனால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் பார்சல் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோஜ்க்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×