என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏபி டி வில்லியர்ஸ்"
- 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.
ஜோகன்ஸ்பர்க்:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவித்தது.
அதே நேரத்தில் விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எஞ்சிய 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய அவரது நண்பருமான டிவில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.
விராட்கோலியும், அனுஷ்கா சர்மாவும் 2-வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும், இதனால் தான் விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிவில்லியர்ஸ் அதை மறுத்து இருந்தார். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்றும், விராட் கோலி குறித்து தவறான தகவலை பகிர்ந்து விட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் 2-வது குழந்தை குறித்த தகவல் தொடர்பாக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு டிவில்லியர்ஸ் மீண்டும் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:-
எனது நண்பர் விராட் கோலி இன்னும் அணியில் இடம்பெறாத நிலையில் உள்ளார். அவருக்கு தகுதியான தனியுரிமையை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.
எனது முந்தைய தகவலில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இதற்காக விராட் கோலி குடும்பத்தினரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர்ந்து கொண்டது சரியல்ல.
அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். எனவே தான் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை. வேறு எதையும் நான் உறுப்படுத்தப் போவதில்லை. அவர் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை நன்றாக இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
- விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
- விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர் என டி வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இரண்டு டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணத்தை மேற்கோள்காட்டி இந்திய அணியில் இருந்து விலகினார். இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தெரிவித்திருந்தார். பிசிசிஐ-யும் இது குறித்து முழு அறிக்கை வெளியிட்டு விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையே விராட் கோலியின் விலகலுக்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.
விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். அதனால்தான் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இதன் காரணமாகவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
எஞ்சிய 3 டெஸ்டிலும் கோலி விளையாடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
விராட் கோலி- அனுஷ்கா சர்மா (கோப்புப்படம்)
இந்த நிலையில் விராட் கோலி குறித்து தவறான தகவல் பகிர்ந்து விட்டேன் என்று டி வில்லியர்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
எனது யூடியூப் சேனலில் நான் கூறியது போல் குடும்பம் முதன்மையானது. அதே நேரத்தில் நான் ஒரு பயங்கரமான தவறு செய்து விட்டேன். விராட் கோலி குறித்து உண்மையில்லாத தவறான தகவலை பகிர்ந்து கொண்டேன்.
அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும். இந்த இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவர் வலிமையாகவும், சிறப்பாகவும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
- 2018-ல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
- 2021-ல் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் நீங்கா இடம் பெற்றவர்களில் ஏபி டி வில்லியர்ஸ் ஒருவர் என்றால் மிகையாகாது.
2004-ல் தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என முத்திரை பதித்து 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் மூன்று வருடங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடினார். டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில விளையாடி 20,014 ரன்கள் குவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு ஓய்வு பெறும்போது அவருக்கு வயது 34. கூடுதலாக இரண்டு மூன்று வருடங்கள் விளையாடியிருக்கலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்தனர். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டும் அதை விரும்பியது. ஆனால், சர்வதேச போட்டியில் விளையாடவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் விஸ்டன் கிரிக்கெட் உடன் உரையாடும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
என்னுடைய இளைய மகள் தற்செயலாக என்னுடைய கண் மீது காலால் உதைத்துவிட்டான். இதனால் வலது கண்ணில் என்னுடைய பார்வையை இழக்க ஆரம்பித்தேன். நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது மருத்துவர்கள் இந்த பார்வையுடன் எப்படி சர்வதேச கிரிக்கெட் விளையாடினீர்கள்? என்று கேட்டனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு வருடங்கள் சிறப்பாக செயல்பட என்னுடைய இடது கண் சிறப்பாக வேலை செய்தது. தன்னுடைய பார்வை எப்படி இருக்கிறது என்பதை பரிசோதிக்க அடிக்கடி ஸ்கோர் போர்டை பார்ப்பேன்.
இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதனால் வங்காள தேசம் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதன்முறையாக விளையாடினார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டி வில்லியர்ஸ் இல்லாமல் தென்ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்றது. இதற்கு தென்ஆப்பிரிக்காவின் தோல்வியே முக்கிய காரணம்.
இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவீர்களா? உலகக்கோப்பை வரை விளையாடியிருக்கலாமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி வில்லியர்ஸ் ‘‘உலகக்கோப்பை மட்டுமே என்னை கிரிக்கெட்டராக வரையறுக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவீர்களா? என்பது பதில் அளிப்பதற்கான கடினமான கேள்வி. மீண்டும் அணிக்கு திரும்பினால், நண்பர்களுடன் இணைந்து உயர்ந்த லெவல் கிரிக்கெட்டை நாட்டிற்காக விளையாடலாம். இதை தவற விடுவது சற்று கடினமாக இருக்கிறது.
ஆனால், ஏராளமான விஷங்களை நான் மிஸ் செய்யவில்லை. 90 சதவிகிதம் விஷயங்களை நான் மிஸ் செய்யவில்லை. சர்வதேச போட்டியில் இருந்து நீண்ட தூரம் சென்று விட்டேன். உலகக்கோப்பை என்னை ஒரு கிரிக்கெட்டராகவும், மனிதராகவும் வரையறுக்க முடியாது’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்