search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic affected"

    • பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருமாள்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டு களை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து பராமரிப்பும் இல்லாததால் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டும், குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்கள் சிதறி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்படை ந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது களக்காடு பகுதியில் பெய்து வரும் மழையினால் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இதன் வழியாகவே பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பெருமாள்குளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை வலியுறுத்தி பெருமாள்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காட்வின் டைட்டஸ் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளார்.

    • 50-க்கும் மேற்பட்ட மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன.
    • கடலூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப்பட்டி னம் 4 வழி சாலை பணிகள் திருபுவனை பகுதியில் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் விருத்தாசலத்தில் இருந்து மக்கா சோளம் ஏற்றி வந்த லாரி திருபுவனை-கடலூர் சாலையில் திரும்பும் போது லாரி சாலையோர பள்ளத்தில் சாய்ந்து நின்றது.

    இதனால் லாரியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. அதனை பொதுமக்கள் வாரி சென்றனர்.

    அதைத் தொடர்ந்து திருவாண்டார்கோவிலில் உள்ள கோழி தீவன தொழிற்ச்சாலையின் ஊழியர்கள் அந்த பகுதிக்கு வந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் இன்னொரு லாரியில் கோழி தீவன மூட்டைகளை மாற்றி எடுத்துச் சென்றனர்.

    இதனால் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருபுவனை- கடலூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • கேத்தி பகுதியில் பெரிய மரம் வேருடன் பெயா்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி குன்னூா், கூடலூா், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊட்டி-குன்னூா் ெரயில் பாதையில் கேத்தி பகுதியில் பெரிய மரம் வேருடன் பெயா்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் ெரயில்வே துறையினா் விரைந்து வந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

    இப்பகுதியில் அபாய நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    குன்னூர் அடுத்துள்ள ஏலநள்ளி கிராமத்துக்கு செல்லக்கூடிய சாலையில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனடியாக குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அவர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான சூறாவளி காற்றும் சாரல் மழையும் பெய்து வருவதால் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    • மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோ லையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் தேயிலை பொருட்கள் விற்பனை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் தேயிலை பொருட்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று காக்காச்சி அருகே வந்தபோது திடீ ரென பழுதாகி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அரசு பஸ்கள் நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லும் சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அவர்களது அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.

    ஆனால் மற்ற பயன்பாட்டிற்கு பேருந்து வசதி இல்லாததால் நாலு முக்கு, ஊத்து பகுதி மக்கள் அங்கேயே முடங்கினர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் லாரியில் தேயிலை பொருட்கள் ஏற்றி விட்ட தோட்ட மேலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த தேயிலை தோட்ட நிர்வாகம் சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

    • இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலை யில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    இதேபோல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூர்-பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

    இதனையடுத்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பர்கூர் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது.
    • 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    கூடலூர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வெப்பத்தை தணிக்கும் வகையில் மாலை நேரத்தில் அடிக்கடி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், கூடலூர் நகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர்.

    இந்தநிலையில் கூடலூரில் இருந்து மலப்புரத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடு காணி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் தமிழ்நாடு-கேரளா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன
    • தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் நத்தத்தில் இருந்து சேர்வீடு கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக 4 வழிச்சாலையில் சுரங்க ப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் இந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன. இதனிடையே சுற்றுப்பாதை யில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், எதிர்கால த்தில் தண்ணீர் தேங்காத வாறு வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக இங்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
    • சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த உருவையாறு பேட் பகுதியில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. இந்தப் பகுதிக்கு திருக்காஞ்சி மற்றும் உருவையாறு பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக இங்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் வில்லியனூர் கொம்யூன் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தற்போது வீடுகளில் நேரடியாக மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஆழ்குழாய் கிணறு போடப்பட்டுள்ளதால் அதன் மூலமாக விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    உப்பு கலந்த குடிநீர் வருவதால் விரைவில் இந்த பகுதியில் வேளாண் துறை அமைச்சரிடம் பேசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆறுமுகநேரியில் திடீர் சாலை மறியல் போராட்டங்களால் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த 2 மாதங்களில் அரசியல் கட்சி அல்லாத பல்வேறு தரப்பினரால் நடத்தப்படும் திடீர் சாலை மறியல் போரா ட்டங்களால் திருச்செந்தூர் - தூத்து க்குடி சாலையில் கடுமை யான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே இந்த வழியில் மிகுந்த போக்கு வரத்து நெருக்கடி உள்ள சூழ்நிலையில் இப்படி யான போராட்டங்க ளால் பயணிகளும் பொது மக்களும் பெரிதும் சிரமத் துக்கு ஆளாகி வரு கின்றனர்.

    இதனிடையே நேற்று மாலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மேலும் மற்றொரு ' திடீர்' சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 2 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள தாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலகுமரேசன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சதி திட்டம் தீட்டியதாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் உள்ளிட்ட தனி ப்படையினர் ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த சாந்தன் மகன் ராஜேஷ் (28) என்பவரை மதுரையில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

    இதனை கண்டித்தும் ராஜேஷ் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்ப தாக கூறியும் அவரது மனைவி, தாய், அக்காள், அண்ணன் மற்றும் உறவினர்கள் திரண்டு ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டு 4 சாலை களிலும் வெகு தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. உடனே அங்கு ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீ சார் விரைந்து வந்தனர். அவர்களிடம் போராட்ட குழுவினர் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

    ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    இப்படியான திடீர் சாலை மறியல் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சாலையோரம் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுகிறது.
    • குன்னூர் பகுதியில் பரவலாக பெய்து வருகிறது.

    ஊட்டி

    ஊட்டியில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலையோரம் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுகிறது. இதனால் காற்று வீசும்போது மரங்கள் விழுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஊட்டி அருகே சோலூர் டன்சான்டேல் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். 3 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. ஊட்டி-மஞ்சூர் சாலையில் மரம் விழுந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். ஊட்டியில் மழை குறைந்தது. குன்னூர் பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. எனவே, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட மலைப்பாதையில் வரும் வாகனங்கள் மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று மழை குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

    • ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • ஊட்டி-குன்னூர் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

    ஊட்டி,

    நீலகிரியில் வடகிழக்கு பருவமழையையொட்டி ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    குன்னூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்சச் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.இதனால் ஊட்டி-குன்னூர் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • திருவாண்டார் கோவில் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து அதில் வாகனங்கள் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

    திருவாண்டார் கோவில் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து அதில் வாகனங்கள் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருபுவனை வழியாக கடலூர் செல்லும் முக்கிய சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், புதுவையில் இருந்து வருகின்ற வாகனங்கள் கடலூர் சாலை வழியாக திரும்ப முடியாமல் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கின்றன.

    மேலும் புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் அந்த வழியாக விழுப்புரம் செல்ல முடியாமல் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. மேம்பாலம் அருகில் குறுகிய சாலை பகுதியில் சினிமா தியேட்டர், வணிககடைகள், ஓட்டல்கள் மிக நெருக்கமாக அமைந்த கட்டிடங்கள் இருப்பதால், குறுகிய சாலை வழியாக தற்போது வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு சாலையினை அகலப்படுத்தி வாகனங்கள் சென்றுவர வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்வழியாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வதற்கு இடையூறாக இந்த பகுதி இருப்பதால், நேரத்திற்கு வேலைக்கு செல்வோரின் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

    திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய லாரிகள் மற்றும் வாகனங்கள் இந்த பகுதியில் திரும்ப முடியாமல் திணறி வருகின்றன.

    சாலையின் இரு புறமும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக இப்பகுதி விளங்கி வருகின்றது. திருபுவனை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தினை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×