search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாஞ்சோலை - காக்காச்சி பகுதியில் சாலை நடுவே பழுதான லாரியால் போக்குவரத்து பாதிப்பு
    X

    சாலையில் பழுதாகி நின்ற லாரி.

    மாஞ்சோலை - காக்காச்சி பகுதியில் சாலை நடுவே பழுதான லாரியால் போக்குவரத்து பாதிப்பு

    • மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோ லையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் தேயிலை பொருட்கள் விற்பனை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் தேயிலை பொருட்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று காக்காச்சி அருகே வந்தபோது திடீ ரென பழுதாகி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அரசு பஸ்கள் நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லும் சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அவர்களது அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.

    ஆனால் மற்ற பயன்பாட்டிற்கு பேருந்து வசதி இல்லாததால் நாலு முக்கு, ஊத்து பகுதி மக்கள் அங்கேயே முடங்கினர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் லாரியில் தேயிலை பொருட்கள் ஏற்றி விட்ட தோட்ட மேலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த தேயிலை தோட்ட நிர்வாகம் சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

    Next Story
    ×