search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
    X

    சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதை காணலாம்.

    நத்தம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

    • இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன
    • தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் நத்தத்தில் இருந்து சேர்வீடு கிராமத்திற்கு செல்லும் மக்களின் வசதிக்காக 4 வழிச்சாலையில் சுரங்க ப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் இந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்வழியாக செல்ல வேண்டிய இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீ தொலைவுக்கு சுற்றுப்பாதை யில் இயக்கப்பட்டன. இதனிடையே சுற்றுப்பாதை யில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், எதிர்கால த்தில் தண்ணீர் தேங்காத வாறு வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×