search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
    • பாராளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

    ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டியதாக 20 பேர் சுட்டுகொன்றபோது அதிமுக, திமுக வேடிக்கை தான் பார்த்தது.

    ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட் கொடுத்து தேர்தலை சந்திக்கிறது தி.முக. முதன் முதலில் இசுலாமிய பயங்கரவாதிகள் என சட்டசபையில் பேசியவர் கருணாநிதி இவர்களா இசுலாமிய காவலர்கள்.

    இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லை, பணம் செல்லவில்லை என்று அர்த்தமா?

    இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தி விட்டு தரமற்ற பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. மேலும் அதில் பயணிக்கும் எங்கள் பெண்களையே அவதூறாக பேசுகிறார்கள் இதுதான் திமுகவின் பெண்ணிய உரிமையா?

    பின்னர் அவர் அளித்த பேட்டியளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:

    ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். இப்போது ஏதோ ஒரு இடத்தில் தான் பிடித்திருக்கிறார்கள். காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் எங்கள் தம்பி அண்ணாமலை அவர்தான் இதற்கு பதில் கொடுக்க வேண்டும்.

    நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் பணநாயகமாகி விட்டது. அதனால்தான் எந்த கட்சியுடனும் கூட்டணி சேரவில்லை.

    தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் பெண்கள் குறித்து பேசிய பேச்சை அவர்களின் குடும்ப பெண்களே சகித்துக் கொள்ளவார்களா? கதிர் ஆனந்த் எதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

    பாராளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். அப்படி என்றால் தமிழில் ஆட்சி மொழியாகும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா?

    தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையை கொடுமையாக பார்க்கிறேன். இதுவரை காசு கொடுப்பவர்களின் பணத்தைப் பிடித்தும் என்று ஏதாவது ஒன்றை காட்ட முடியுமா?

    ரம்ஜான் நேரம் என்பதால் ஆடு, மாடு விற்பனை செய்யும் பணத்தை எப்படி விவசாயிகள் எடுத்துச் செல்வார்கள் ?

    ஊழல் இல்லாத அரசு என கூறும் பாஜக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து 150 கோடி கொடுத்தது அது ஊழல் இல்லையா?

    கேட்டால் அதில் நாங்கள் தவறான தகவலை பரப்புகிறோம் என்கிறார்கள் இவர்கள் செய்வதை தானே நாங்கள் பரப்புகிறோம். இமெயில் இன்ஸ்டாகிராம் எல்லாம் வரும் காலத்தில் தடை செய்ய வாய்ப்பிருக்கு?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதி ர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

    ஆனால் அன்று சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. இதை அடுத்து இன்று காலை சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) வழக்கை வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

    முன்னதாக சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
    • அதே நேரத்தில் சீமானை போலீசார் கைது செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது போலீசார் பரபரப்பாக விசாரணை நடத்தி வருவதால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்த பிறகு விஜயலட்சுமி அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் சீமான் மீது விஜயலட்சுமி அளித்து உள்ள புதிய புகார் பூதாகரமாகி இருக்கிறது.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதன் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தி விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். இதை தொடர்ந்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜய லட்சுமி மாஜிஸ்தி ரேட்டு முன்னிலையிலும் வாக்கு மூலம் அளித்தார். இப்படி சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் போலீசார் கோர்ட்டு மற்றும் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

    விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து சீமான் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் பரபரப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் சீமான் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கொங்குமண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி நிகழ்ச்சி களில் பங்கேற்றுள்ள அவர் தற்போது கோவையில் உள்ளார்.

    இதை தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதன்படி சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு கோவை விரைந்தனர். அங்கு சீமானை சந்தித்து சம்மனை நேரில் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே நேரத்தில் சீமானை போலீசார் கைது செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் சீமான் தங்கி இருக்கும் இடத்துக்கே போலீசார் விரைந்து சென்று முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது என சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையின் பூர்வீக குடிகளின் வாழ்விடங்களை இடித்துத் தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு. இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு.

    சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம். இறந்துபோன கோவில் யானைகளுக்குக் கோவில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு! இல்லை! இல்லை! மனுநீதி அரசு.

    கோவையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத தி.மு.க. அரசு, கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத்துடிப்பது வெட்கக்கேடானது.

    அரசின் பெயரில் கடன் வாங்கும் ரூ.90 ஆயிரம் கோடியில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்தரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    அரசு நிலங்கள் பெருமளவில் கொள்ளைபோக வழிவகுக்கும் வகையில் திமுக அரசால் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வுத்தரவு கண்டனத்திற்குரியது என சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்தவர்களே பட்டா பரிமாற்றம் மூலம் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு நிலங்கள் பெருமளவில் கொள்ளைபோக வழிவகுக்கும் வகையில் திமுக அரசால் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ்வுத்தரவு வன்மையான கண்டனத்திற்குரியது.

    தமிழக அரசு

    மலைப்பகுதி, யானை மற்றும் புலி வழித்தடங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இதேபோன்ற ஆக்கிரமிப்பு சிக்கல் வந்தால், அது வனத்துறை மூலம் கையாளப்படும் என்று அதன் மற்றொரு வழிகாட்டல் உத்தரவு சுட்டுகிறது. இது முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் தனியார் பெருமுதலாளிகள் தங்களின் வணிகத் தேவைக்காக ஆக்கிரமித்து, அபகரிக்கவே உதவும். எனவே, அரசு நிலங்களை அபகரிக்கவும், காடுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொள்ளை போகவும் வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழிசை மணிமண்டபம் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தமிழிசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை செயல்படாத நிலைக்கு தள்ளியுள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

    கடந்த 2013-ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசால் தமிழிசையின் வரலாற்றைப் போற்றும் விதமாக அதை வளர்த்தெடுத்த தமிழிசை மூவருக்குச் சீர்காழியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அந்த மணிமண்டபம் தற்போது பழுதடைந்து, இயங்கா நிலையில் உள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாகத் தமிழ், தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வின் தற்போதைய ஆட்சிக்காலத்தில், முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழைப் போற்றும் மணிமண்டபத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் கூடத் தரப்படாமையால் மணிமண்டபம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் பெருந்துயரம்.

    ஆகவே, சீர்காழியில் அமைந்துள்ள தமிழிசை மணிமண்டபம் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×