என் மலர்
நீங்கள் தேடியது "slug 228231"
- குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
- கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள கொடிக் கம்பத்திலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.
நாகர்கோவில்:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அரசு அலுவலகங்கள் வணிக நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் இன்று தேசிய கொடி ஏற்றினார்.
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்டத் துணைத் தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் உள்ள எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாகர்கோவில் நகரில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி இன்று ஏற்றப்பட்டது.
மேலும் நிர்வாகிகளும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மீனாட்சிபுரம், வடசேரி, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் முன்பும், கொடியேற்றப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், கார்களிலும் தேசிய கொடி கட்டப்பட்டி ருந்தது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா நிர்வாகிகள், முக்கிய சந்திப்புகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். பொது மக்கள் பலரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி இருந்தனர். ராஜாக்க மங்கலம், தக்கலை, கிள்ளியூர், மேல்புறம், குருந்தன்கோடு, தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட முக்கியமான இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் இன்று லட்சக்கணக்கான வீடுகளில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள கொடிக் கம்பத்திலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.
- அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன.
- பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த 4 பேரூராட்சிகளும் அருகிலுள்ள கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகின்றன.
சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்கள், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, புத்திர–கவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் காரிப்பட்டி ஆகிய ஊருக்குள் செல்வதில்லை. சேலம்-சென்னை புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.
இதனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில், இப்பகுதியைச் சேர்ந்த பயணி–களை ஏற்ற மறுக்கின்றனர். இதனால், குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வாழப்பாடி வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து 3 ஆண்டுக்கு முன் அமைதிக்குழு கூட்டி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சேலம்-–ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுப்பதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால், சேலம்– ஆத்தூர் வழித்தடத்திலுள்ள பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதை தடுக்கவும், இந்த வழித்தடத்திலுள்ள அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்–செல்வதற்கும், வருவாய்த்துறை, போக்கு–வரத்துத்துறை, காவல்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
- 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது கேள்வி குறியாக உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பழமையானது ஆகும். 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது கேள்வி குறியாக உள்ளது.
தேவகோட்டையில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாமல் குழந்தைகளை அதிக கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவலநிலையில் பெற்றோர் உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை, அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். மாணவிகள் நகரில் இருந்து கிராமங்களுக்கு சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கப் படுகின்றனர். மாவட்ட கல்வி அலுவலகம் தேவகோட்டை நகரில் இருந்தும், நகருக்கு மேல்நிலைப்பள்ளி இல்லாதது கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளுக்கு துணையாக செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் அரசு மேல்நிலைப் பள்ளி கொண்டு வரவில்லை என்று தெரிகிறது.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் அறிக்கையில் தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவரப்படும் என உறுதி அளித்தார்.
ஆனால் வருடம் ஆகியும் மேல்நிலைப்பள்ளி இதுவரை வரவில்லை. நகரில் உள்ள மக்கள் குழந்தைகளின் மேல்நிலை படிப்பு அதிக கட்டணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முடிவு காணப்படும் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மேல்நிலைப்பள்ளி வருமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
- சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த பகுதி நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணையொட்டிய பகுதிகளில் வருவதால் சாயகழிவு நீர் தேங்கிய காரணத்தால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூர், காங்கேயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை குடிநீர் கேட்டு புஞ்சை பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை -ஊத்துக்குளி மெயின் ரோட்டில் ஆலமரம் 4 ரோடு சந்திப்பில் அரசு டவுன் பஸ்சினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஆக வில்லை. இதனால் காலையில் திருப்பூர் பனியன் நிறுவனத்திக்கு வேலைக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லும் வேன்கள் அதிகளவில் வந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக பெருந்துறை தாசில்தார் குமரேசன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக லாரி தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விரைவில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமரேசன் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மயானத்தை சுற்றியுள்ள நபா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
- வீடுகளை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்டோா் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.
தாராபுரம்,
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மேற்கு தெருவில் ஆதிதிராவிடா்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை ஆதிதிராவிட மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனா். இந்த மயானத்துக்கு செல்லும் பாதை மற்றும் மயானத்துக்கு சொந்தமான நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இறந்த உடல்களை மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் செய்யமுடியாமல் பாதையை மறித்து மயானத்தை சுற்றியுள்ள நபா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மயானத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறை அதிகாரிகள் மயானம் மற்றும் அதற்கான பாதையை அளவீடு செய்து எல்லை கற்களை கடந்த மாா்ச் 21-ந்தேதி நட்டுச் சென்றனா். இருப்பினும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்டோா் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா். ஆனால் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜலஜா இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலக நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து ஒரு மணி நேரம் கழித்து வந்த வட்டாட்சியா் ஜலஜா, பொதுமக்களிடம் இருந்து மனுவை பெற்றாா். மயானப் பகுதியை நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.