என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » madurai adheenam
நீங்கள் தேடியது "madurai adheenam"
சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியுள்ளது. இதனை வரவேற்பதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளார். #Sabarimala #SabarimalaVerdict #MaduraiAdheenam
மதுரை:
சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து மதுரை ஆதீனம் இன்று ‘‘மாலை மலர்’’ நிருபரிடம் கூறியதாவது:-
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கடந்த 1½ ஆண்டுக்கு முன்பே இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறோம்.
இந்த தீர்ப்பின் மூலம் பெண்கள் ஆண்களுக்கு சமம். பெண்கள் கடவுளாக வழிபடக்கூடியவர்கள். ஆண்களும், பெண்களும் சம உரிமை பெற்றவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நியாயமான தீர்ப்பை வரவேற்கிறேன். நல்ல தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளை மனதார பாராட்டுகிறேன்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இந்தியாவில் உள்ள பெண்கள் சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதன் மூலம் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
33 சதவீத உரிமைகள் சலுகைகள், பெண்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் நாடு முழுவதும் நிச்சயம் நிறைவேறும். இந்த தீர்ப்புக்கு கேரள அரசும், தேவசம் போர்டும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #Sabarimala #SabarimalaVerdict #MaduraiAdheenam
சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து மதுரை ஆதீனம் இன்று ‘‘மாலை மலர்’’ நிருபரிடம் கூறியதாவது:-
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கடந்த 1½ ஆண்டுக்கு முன்பே இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறோம்.
இந்த தீர்ப்பின் மூலம் பெண்கள் ஆண்களுக்கு சமம். பெண்கள் கடவுளாக வழிபடக்கூடியவர்கள். ஆண்களும், பெண்களும் சம உரிமை பெற்றவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.
எனவே பெண்களை அனைவரும் மதிக்க வேண்டும். பெண்கள்தான் இந்த சமுதாயத்தை படைக்கிறார்கள் என்ற உண்மை உறுதியாகி உள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் கடந்த 1½ ஆண்டு காலமாக ஆராய்ந்து, அறிந்து பல கட்டமாக விசாரணை செய்து, கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு கருத்தையும் கேட்டு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இந்தியாவில் உள்ள பெண்கள் சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதன் மூலம் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
33 சதவீத உரிமைகள் சலுகைகள், பெண்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் நாடு முழுவதும் நிச்சயம் நிறைவேறும். இந்த தீர்ப்புக்கு கேரள அரசும், தேவசம் போர்டும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #Sabarimala #SabarimalaVerdict #MaduraiAdheenam
திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார். #MaduraiAdheenam
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கட்சி தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி மதுரை ஆதீனம் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
‘சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார்’ என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAdheenam
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கட்சி தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி மதுரை ஆதீனம் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி அரசியலுக்கு முழுமையாக வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர் போன்று எல்லா நடிகர்களாலும் வரமுடியாது என்றும் கூறினார்.
‘சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார்’ என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAdheenam
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பினராக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
மதுரை ஆதீனமடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்தநிலையில் மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இதுதொடர்பான வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் என்னையும் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரிய மனுவை மதுரை சப்-கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கில் என்னை ஒரு தரப்பினராக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மதுரை ஆதீன இளைய மடாதிபதி தொடர்பாக மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை ஆதீனமடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்தநிலையில் மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இதுதொடர்பான வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் என்னையும் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரிய மனுவை மதுரை சப்-கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கில் என்னை ஒரு தரப்பினராக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மதுரை ஆதீன இளைய மடாதிபதி தொடர்பாக மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. #MaduraiAdheenam #Nithyananda
மதுரை:
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்கி மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ஆதீனத்தையும், சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் நித்யானந்தா செயல்படுகிறார். அவர் மதுரை ஆதீனத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை. #MaduraiAdheenam #Nithyananda
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்கி மதுரை ஆதீனம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஜெகதல பிரதாபன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ஆதீனத்தையும், சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் நித்யானந்தா செயல்படுகிறார். அவர் மதுரை ஆதீனத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை இல்லை. #MaduraiAdheenam #Nithyananda
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X