search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget 2024"

    • மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள்.
    • மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம்.

    இந்தியாவில் வரும் ஏப்ரல்-மே மாத வாக்கில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்."

    "இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்."

    "ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி," என்று குறிப்பிட்டுள்ளார். 



    • எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும்.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது."

    "வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும்," என்று தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
    • வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் பாதையை வகுக்கும் வகையில் எங்கள் ஆட்சி உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் இது. ஐந்து முக்கிய அம்சங்களை கொள்கையாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது."

    "பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2-இல் இருந்து 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளது."

    "ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், மேற்கூரை சோலார் மின் தகடுகள் திட்டம், நடுத்தர வயதினருக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்களும் பங்களிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

    "ரயில்வேக்கு மூன்று பிரதான பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 40 ஆயிரம் ரயில்வே பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. கடந்த பத்து ஆண்டுகால பொருளாதார செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் 12 விதமான முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார். 

    • நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமனின் 6-வது பட்ஜெட் இது
    • பா.ஜ.க.வின் 10-ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்

    2024 ஜூன் 16 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் 543 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் வெளியிடப்படும்.

    நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தனது உரையில், 10 ஆண்டு கால பா.ஜ.க. அரசின் பொருளாதார சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

    தற்போது அரசின் செலவு - ரூ.44.90 லட்சம் கோடி, வரி வருவாய் மதிப்பீடு - ரூ.27.56 லட்சம் கோடி, நிதி பற்றாக்குறை - 5.8 சதவீதம் என உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

    * வரும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும்.

    * வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வழிவகை செய்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

    * நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

    * பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது

    * ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

    * அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

    * தொழில் தொடங்க, வட்டியில்லா கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நிதியம் அமைக்கப்படும்

    * பால் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம் கொண்டு வரப்பட உள்ளது

    • 2024-25க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
    • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்ததாவது:

    மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

    வருமான வரி உச்ச வரம்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகளே தற்போது தொடரும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    பொருளாதார ரீதியாக மத்திய தரம் என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்பார்ப்பு தனி நபர் வருமானவரியில் சலுகைகள்தான்.

    ஆனால், கடந்த முறை கொண்டு வரப்பட்ட "ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்" எனும் இரண்டு திட்டங்கள் தொடர்ந்து நடைபெறப்படும் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

    • 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
    • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் சிறப்பம்சங்கள்:

    விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்த பல புதுமைகளும் மாற்றங்களும் அவசியப்படுகிறது.

    விக்சித் பாரத் என்பது இந்தியா, அடுத்து வரும் தசாப்தங்களில் பொருளாதார ரீதியாக, சமூக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உலகிலேயே முன்னிலையில் இருப்பதற்கு 75-வது குடியரசு தினத்திற்கான கருப்பொருள். இதில் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புகள் அடங்கும்.

    ஒவ்வொரு கால எல்லையில் விக்சித் பாரத் திட்டத்திற்கு மாநிலங்கள் தங்கள் இலக்குகளை எட்டுவதற்கு, ரூ.75 ஆயிரம் கோடிக்கான 50-வருட வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
    • முழு பட்ஜெட் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாக்கல் செய்யப்படும்

    வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மருத்துவ துறை குறித்து நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

    எங்கள் அரசு பல மருத்துவ கல்லூரிகளை திறக்க உள்ளது. தற்போது உள்ள கல்லூரிகளும் மேம்படுத்தப்படும். இதற்கென ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் ஆலோசனைகள் பெறப்படும். இதன் மூலம் எதிர்கால இந்தியாவிற்கு தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா
    • புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல முக்கிய அம்சங்களை குறித்து உறுப்பினர்களிடையே தெரிவித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

    வீடுகளில் சூரிய மின் தகடுகள் பதிக்கப்பட்டும் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

    அங்கன்வாடிகளுக்கு போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மீன்வளத்துறைக்காக தனி துறை அமைக்கப்பட்டதில் 2013-14லிருந்து கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது.

    இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிக்கும் வேலையை தொடங்கி வைத்தார்.
    • மத்திய பட்ஜெட்டுக்கு முன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும்போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

    மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.

    ×