search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Rail"

    • சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே, இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

    சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

    இந்த புதிய சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஒரு பயணி "மலர்கள் கேட்டேன்" பாடலைப் பாடி மகிழ, அவரது தோழி நாட்டியக் குறிப்புகளுடன் அசைவுகள் கொடுக்கும் வீடியோ ஒன்றை தென்னிந்திய ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பேருந்து, ரெயில், மெட்ரோவில் பயணம் செய்யும் போது கூட சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்கவும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலில் கர்நாடக இசை பாடல் பாடுவது பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காதா? இதே போல கிராமிய, கானா பாடல்களை பாட ரெயில்வே நிர்வாகம் அனுமதிக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை-பெங்களூர்- மைசூர் வழித்தடத்தில் ரெயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் 2-வது வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் மைசூரை அடையும். ஆனால், இப்போது அறிமுகப்ப டுத்தப்படும் வந்தே பாரத் ரெயில் காலையில் மைசூரில் இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் இந்த வந்தே பாரத் ரெயில் மாண்டியா, எஸ்எம்விடி பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மைசூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் காலை 7.45 மணிக்கு பெங்களூர் வரும். மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இரவு 11.20 மணிக்கு மைசூர் செல்லும்.

    சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
    • சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    அந்த வகையில் சென்னை- நாகர்கோவில் இடையே இரு மார்க்கங்களிலும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இன்றும் நாளையும் (13 மற்றும் 14-ந்தேதி) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    நாகர்கோவிலில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 11.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

    • கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.
    • சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    திருப்பூர்:

    இந்திய ெரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வந்தே பாரத் ெரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தொடக்கம் முதலே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் தான். இருப்பினும் அதன் பெரும்பகுதி கர்நாடகாவில் தான் செல்கிறது. எனவே முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- கோவை வந்தே பாரத் தான். இதனை கடந்த ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.இந்தியாவில் இயக்கப்படும் பல வந்தே பாரத் ெரயில்கள் காலியாகவும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் நிலையில், சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் இந்த 199 நாட்களும் ஹவுஸ்புல்லாகவே இருந்துள்ளது.

    இந்த ெரயிலை முதல் நாள் பிரதமர் மோடி நேரில் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது முதலே இந்த ெரயில் டிக்கெட்கள் வெயிடிங் லிஸ்டிலேயே இருந்துள்ளது. அதிலும் கோவை - சென்னை மார்க்கத்தில் வந்தே பாரத் ெரயில்களின் டிக்கெட்டுகள் பல நாட்கள் முன்பாகவே விற்று தீர்ந்துவிடுகிறது. இதனால் கோவை - சென்னை வந்தே பாரத்தில் பயணிக்க விரும்புவோர் முன்கூட்டியே நிச்சயம் புக் செய்தாக வேண்டும்.

    சென்னை -கோவை வந்தே பாரத்தில் 56 இருக்கைகளை கொண்ட முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் க்ளாஸ் இருக்கைக்கான டிக்கெட் ரூ. 2,310ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 450 சீட்களை கொண்ட வழக்கமான சேர் காருக்கு டிக்கெட் ரூ.1,215ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வந்தே பாரத்தில் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கும். ஆனால், இது சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் முன்பதிவை குறைக்கவில்லை.

    எப்போதும் இருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்கள் இதற்கு சாட்சியாகும். ஒரு சில வந்தே பாரத் ெரயில்களில் டிக்கெட் விற்பனை குறைவாக உள்ளதாக புகார் இருக்கும் நிலையில் சென்னை -கோவை வந்தே பாரத் நல்ல வரவேற்புடன் புதிய சாதனை படைத்து வருகிறது.

    முதலில் சென்னை- கோவை வந்தே பாரத் 6 மணி நேரம் 10 நிமிடங்களில் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதிவேகமாக ெரயில்கள் செல்லும் வகையில் டிராக் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலையில் வந்தே பாரத் பயண நேரம் மேலும் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இப்போது சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் திருப்பூர், ஈரோடு. சேலம் வழியாக 11.50க்கு சென்னை சென்றடையும். அதேபோல சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்குக் கிளம்பும் வந்தே பாரத் இரவு 8.15 மணிக்கு மீண்டும் கோவை வந்தடையும். இந்த ெரயில் திருப்பூர் மற்றும் சேலத்தில் இரண்டு நிமிடங்களும் ஈரோட்டில் 3 நிமிடங்களும் நிறுத்தப்படுகிறது.

    சென்னை - ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதித்ததும், அதைத் தொடர்ந்து அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் வேகத்தை அதிகரித்ததும் பயண நேரத்தை குறைக்க உதவி இருக்கிறது. சென்னை- கோவை இடையே பகல் நேரத்தில் ஏற்கனவே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் நிலையில், அதையும் தாண்டி வந்தே பாரத்திற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

    மேலும் நாட்டில் இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் ெரயில்களில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். ஆனால், சென்னை -கோவை ரூட்டில் 8 பெட்டிகள் மட்டும் இருக்கிறது. இந்த ரூட்டில் டிக்கெட் தேவை அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் ஒரு ரூட்டில் 6 மாதங்கள் ெரயில் இயங்கிய பிறகே தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் தற்போதைய சூழலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    • வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.
    • தர்மர் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

    பரமக்குடி

    அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் பரமக்கு டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் நாடு முழுவதும் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தொடங்கியுள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரெயில்களையும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரெயில்க ளையும் இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தியா வின் புண்ணிய தலங்களில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் ராமேசுவரம் விளங்கி வருகிறது.

    நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு ராமேசு வரத்திற்கு தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லை. அகலப் பாதை மாற்றத்தால் ராமே சுவரம்-கோயம்புத்தூர், ராமேசுவரம்-பாலக்காடு, ராமேசுவரம்-மதுரை மற்றும் சில பிரபலமான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இங்கு வரும் பக்தர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் வியாபாரிகள், தொழி லாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா கின்றனர். ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை ரெயில்வே நிர்வாகம் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    மேலும் இடைநிறுத்தப் பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இது குறித்து ரெயில்வே முதன்மை நிர்வாக இயக்குனர் தேவேந்திர குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.
    • 2 முனைகளிலும் என்ஜின்கள் உள்ளன. இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் ஏ.சி. வசதி இல்லாத சாதாரண பெட்டிகளை கொண்ட வந்தே சாதாரண் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்ட வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    வந்தே சாதாரண் ரெயிலின் முதல் ரெயிலுக்கான பெட்டிகளே ஐ.சி.எப். ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.

    பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    வந்தே சாதாரண் ரெயிலில் சுமார் 1800 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரெயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஏ.சி. இல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் ரெயிலின் அதே பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வந்தே சாதாரண் ரெயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    அழகான இருக்கைகள், படுக்கை வசதிகளுடன் நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் உட்புறம் தற்போதைய ரெயில்களின் பொதுப்பெட்டிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் விசிறிகள், சுவிட்சுகள் நவீன வடிவமைப்பை கொண்டவை. ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் போன் சார்ஜர் வசதிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் உள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடியது. 2 முனைகளிலும் என்ஜின்கள் உள்ளன. இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.

    • 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
    • புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை 'ஐ.சி.எப்.' நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக விரைவு ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    இந்நிலையில் பயணிகள் வசதிக்காக புதிதாக தூங்கும் வசதியுடன் கூடிய 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக பெங்களூருவில் உள்ள 'பி.இ.எம்.எல்.' தொழிற்சாலையில் இதற்கான மாடல் வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரத்தில் இந்த மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகிறது. மாதிரி வடிவம் அந்த ரெயில் ஒப்புதலானவுடன், 'வந்தே பாரத் சிலீப்பர்' புதிய ரெயில்கள் தயாரிக்கப்படும்.

    'வந்தே பாரத்' படுக்கை வசதியுடன் கூடிய புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள 'பெல்' திட்டாக் தொழிற்சாலையில் இந்த ரெயில் பெட்டிக்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது. ஐ.சி.எப். கூட்டு முயற்சியுடன் 80 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

    சென்னை ஐ.சி.எப். நிறுவனத்தில் இதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ஐ.சி.எப். நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இந்த புதிய ரெயிலில் ஏ.சி. 2-வது வகுப்பு, ஏ.சி. 3-வது வகுப்பு, பெட்டிகள் அமைக்கப்படுகிறது. 10 புதிய ரெயில்கள் ரூ.675 கோடியில் தயாரிக்கப்படுகிறது.

    ஏ.சி.3-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் அழகிய உயர்தர வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அகலமான ஜன்னல், மின்விளக்கு வசதியுடன் சிறப்பாக உலகதரத்துடன் தயாரிக்கப்படுகிறது.

    மேல் படுக்கைக்கு பயணிகள் எளிதில் செல்ல 6 படி ஏணிகள் அமைக்கப்படும். இது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் வீதம் உருவாக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர்.
    • மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலை கடந்த 24-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நிலையில், மறுநாள்(25-ந்தேதி) சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை வந்தடைந்தது.

    இந்நிலையில் இன்று ரெயில்வே கால அட்டவணைப்படி நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. ஏற்கனவே இந்த ரெயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் பொங்கல் வரையிலும் விற்றுத்தீர்ந்து விட்ட நிலையில் இன்று காலை நெல்லையில் இருந்து பயணிகளுடன் தனது பயணத்தை வந்தே பாரத் முதல் முறையாக தொடங்கியது.

    இந்த ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர். இதேபோல் மதுரையில் இருந்து எக்சிகியூட்டிவ் பெட்டியில் 10 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 97 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். முதல் நாளான இன்று மொத்தமாக எக்சிகியூட்டிவ் பெட்டியில் 52 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 487 பேரும் என மொத்தம் 539 பேருடன் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது. அதிலும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதற்கிடையே இரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைவதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் ரெயிலுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மதுரை

    தென் தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர். அவர்கள் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். ரெயில் மதுரைக்கு வந்தபோது மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மேயர் இந்திராணி, மாநில பா.ஜ.க. பொதுச் செய லாளர் ராமசீனிவாசன், பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சுப்பாநாகுலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை பாலமுருகன், ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஓம்சக்தி தனலட்சுமி, தமிழிசை சவுந்தரராஜன் நற்பணி இயக்க நிர்வாகிகள் நாச்சியப்பன், கருப்பையா, ரெயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக பா.ஜ.க. வினர் ரெயிலில் பயணம் செய்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வந்தே பாரத் ரெயில்களை திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் என 2 புதிய ரெயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.
    • ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கல்வீசும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. வந்தே பாரத் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது கல்வீச்சில் சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கடந்த மாதம் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் நாகர்கோவில் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது வடக்கஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.

    இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில்கள் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருச்சூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் குட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
    • சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை ஐ.சி.எப்-ல் தற்போது வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. இங்கு இதுவரை 33 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

    தெற்கு ரெயில்வேயில் சென்னை சென்ட்ரல்-மைசூர், சென்னை சென்ட்ரல்-கோவை, காசர்கோடு-திருவனந்தபுரம் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த 3 வந்தே பாரத் ரெயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை-திருப்பதி, சென்னை எழும்பூர்-நெல்லை இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையில் 31, 32, 33-வது வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 31-வது வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சாம்பல் நிறம் கொண்ட இந்த ரெயில் சமீபத்தில்தான் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயில் மங்களூரு-பாலக்காடு அல்லது சென்னை-மங்களூரு இடையே இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை நவம்பரில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகின்றன. இதேபோல தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பாதைகளின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    சென்னை-விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த பாதை மேம்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் குறைந்தபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட வேண்டும். எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் வேகத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இப்பணி விரைவில் முடிந்து விடும். இந்த பணி முடிந்த பிறகு சென்னை எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவை வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவை ரெயில்வே வாரியம் எடுக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×