என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தே பாரத் ரெயிலை ஆர்வமுடன்
    X

    வந்தே பாரத் ரெயிலை பார்க்க வந்த பள்ளி மாணவர்களுக்கு சென்னை கோட்ட மேலாளர் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

    வந்தே பாரத் ரெயிலை ஆர்வமுடன்

    • பார்வையிட்ட பள்ளி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
    • பா.ஜ.க. சார்பில் மலர் தூவி இனிப்பு வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    சென்னை- பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் மோடி கே.எஸ.ஆர்.பெங்களூரு ரெயில் நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

    முதல் நாளான நேற்று அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் நின்று சென்றது. தென்மேற்கு ெரயில்வே எல்லையை முடித்துக் கொண்டு, தென்னக ரெயில்வே எல்லையான ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு மதியம் 2.05 மணிக்கு வந்தே பாரத் ெரயில் வந்தடைந்தது.

    அப்போது சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் சச்சின் புனித் உள்ளிட்ட ெரயில்வே உயர் அதிகாரிகள் வந்தே பாரத் ரெயிலை வரவேற்றனர்.

    அப்போது வந்தே பாரத் ரெயிலை பள்ளி பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். அவர்களுக்கு சென்னை கோட்ட பொது மேலாளர் சச்சின் புனித் இனிப்பு வழங்கினார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் உள்ளிட்ட ரெயில்வே துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மலர் தூவி இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    பார்வையாளரின் பார்வைக்காக வந்தே பாரத் ரெயில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் 10 நிமிடம் நின்று சென்றதால் பார்வையாளர்களும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வந்தே பாரத் ரெயில் முன்பு நின்று தனது செல்போன் மூலம் செல்பி எடுத்தனர்.

    ரெயில் பெட்டிகளில் ஏறி கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×