என் மலர்
நீங்கள் தேடியது "Sapling"
- வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.
- 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, பணியிட மாறுதலில் விடைபெற்று செல்லும் மாவட்ட கலெக்டரை வாழ்த்தி வழியனுப்பும் விழா நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தி ற்கு செயல்வடிவம் கொடுக்க அனுபவம், ஆற்றல் வாய்ந்தவர் கலெக்டராக இருக்க வேண்டும். அப்படிப்ப ட்டவர் தான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இந்த முழு பொறுப்புக்குக் காரணமானவர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.அவர் மாவட்ட கலெக்டராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்டு நிறைவேற்றியவர்.
விளம்பு நிலை மக்களுக்கு செந்தமிழ் நகர் என்ற பெயரில் குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்தார். இதேபோல, வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். இதேபோல, பல்வேறு திட்டங்களை கலெக்டர் செயல்படுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, வருவாய் கோட்டா ட்சியர்கள் பிரபாகர், பூர்ணிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கலெக்டரை பாராட்டி பேசியதுடன் அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை நினைவு பரிசாக ஏராளமானோர் வழங்கினார்.
- நரிக்குடி யூனியனில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்தில் நடப்பாண்டு க்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அ.முக்குளம், வீரசோழன், அழகாபுரி, மினாக்குளம், நல்லுகுறிச்சி, வேளாநேரி, மேலப்பருத்தியூர், கீழக்கொன்றைக்குளம், நாலூர் ஆகிய 9 ஊராட்சிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரையிலான புன்செய் நிலங்களில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் அமைத்து அதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் மானிய விலையில் பவர் டிரில்லர் கருவியும், 100 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டையும் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக ஆழ்துளைக்கி ணறு மற்றும் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த ஊராட்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேசுவரன் தெரிவித்துள்ளார்.
- பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
- நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியினரால் மறக்க முடியாத நாள்களில் பசுமைத் தாயகம் நாள் முதன்மையானது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25-ஆம் நாள் தான் பசுமைத்தாயகம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் காக்கவும், ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தவும் பசுமைத்தாயகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஏராளம்.
பசுமைத்தாயகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நான் மிகவும் விரும்புவது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக மரக்கன்றுகளை நடுவதைத் தான். பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் புவி வெப்பயமாதலின் தீய விளைவுகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பசுமைத் தாயகம் நாளை நடப்பாண்டில் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடப்பட்டதை விட இந்த ஆண்டில் இன்னும் அதிக மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும்.
தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 2 லட்சம் மரக்கன்றுகளாவது நடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
மொத்தம் 443 நாட்களில் 3283 பேர் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்காக 28 ஆயிரத்து 6 மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். அவர்கள் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை மகிழ்வித்து வருகின்றனர்.
பசுமைத் தாயகம் நாளுக்கு இன்னும் 78 நாட்கள் உள்ளன. பா.ம.க.வினர் 10 பேர் இணைந்து ஒரு மரக்கன்று நட்டு வளர்த்தாலும் கூட ஒரு வாரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட முடியும். ஆனால், அவை எங்கு நடப்படும், எவ்வாறு நடப்படும், எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? என்பதற்கு எந்தவகையான உறுதியும் கிடையாது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் அடுத்த பத்தாண்டுகளில் அவற்றுக்குரிய பயனை வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் தான் நடப்பாண்டில் மரக்கன்று நடுவதற்கான இலக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளை நடும் பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பு ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஒன்றியம், நகரம், பேரூர், சிற்றூர்களில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு ஊரிலும் அவை எங்கெங்கு நடப்பட வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும். மரக்கன்றுகள் நடப்பட்ட பிறகு அவற்றை யார், யார் பராமரிப்பது என்பதும் தீர்மானிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும்.
நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் வகைகள், நடப்பட்ட ஊர்கள், அவற்றை பராமரிப்பவர்களின் பெயர், விவரம், முகவரி ஆகியவை பதிவு செய்து மாவட்ட வாரியாக ஆவணம் ஆக்கப்பட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பசுமைத்தாயகம் நாளில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.
எனவே, பசுமைத்தாயகம் நாளில் மண்ணுக்கு மரக்கன்றுகளை பரிசளிப்ப தற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கும்படி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
- நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு வனத்துறையின் பெரம்பலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தேக்கு, கொய்யா, புங்கன், மகாகனி, வேம்பு, சவுக்கு மற்றும் பல இன மரக்கன்றுகள் வழங்கப்படும். நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இலவச மரக்கன்றுகள் தேவைப்படும் பெரம்பலூர், பேரளி, குன்னம், மாத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8838543275, சிறுவாச்சூர், ஆலத்தூர், செட்டிகுளம், காரை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9003771622, ரஞ்சன்குடி, லெப்பைக்குடிகாடு, அகரம்சீகூர், வி.களத்தூர், குரும்பலூர், புதுவேலூர், நக்கசேலம், டி.களத்தூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9965659632, லாடபுரம், எசனை, மேலப்புலியூர், ஆலம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9655476094 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கண்காட்சியில் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் இடம் பெற்றன.
- நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை அருகே குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி துவங்கி வைத்தார். கண்காட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் மாற்று பொருள்கள் இடம் பெற்றன.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் புவி தினம் பற்றியும் மனிதர்களின் செயலால் பூமிக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தலைமை ஆசிரியை செல்லம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். தேசிய பசுமை படை ஆசிரியர் காட்சன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் சண்முகநாதன் ஆசிரியை தமிழ்ச்செல்வி பெற்றோர் கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதைபோல் வடக்காலத்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தின விழா அனுசரிக்கப்பட்டது. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை ஆசிரியை பத்மாவதி தேசிய பசுமைப்படை ஆசிரியை ருபான்சியா ஆசிரியர் செந்தில் வேலன் ஆசிரியை சுமதி ராணி பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மஞ்ச–ப்பையும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
- உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி.
- பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார்.
பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நகராட்சி பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசுகையில்:-
பிளாஸ்டிக் கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், காடுகள் அழிப்பினாலும் பூமியில் மண், நீர், காற்று பாதிக்கப்படுகிறது.
இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.
எனவே, பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும் என்றார்.
இதில் நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
திருமங்கலம்
1970 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந்தேதி அன்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி பகுதியில் நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணைச்சேர்மன் ஆதவன் அதியமான் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் மகளிர் சுய உதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், சரவண பிரபு, கவுன்சிலர்கள் சின்னசாமி, திருக்குமார், வீரக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 40 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
- தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
நிழல் தரும் மரக்கன்றுகளை இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் வழங்கினார்.
மரக்கன்றுகளை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் எம்.ராம்குமார், வாகீஸ்வரன் ஆகியோர் நடவு செய்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், தலைமை காவலர் பாலமுருகன், மகளிர் காவலர் சண்முகப்பிரியா, அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், இயற்கை ஆர்வலர் ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் சுமார் 40 ஆண்டுகளாக மரக்கன்று களை உற்பத்தி செய்து பொது இடங்களில் நட்டு பராமரித்து வருகிறார்.
- சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர்.
- மரங்களை நன்றாக வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வனநாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வீரராசு, பொருளாளர் கனகராஜ், துணைத்தலைவர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், சக்திவேல், ஆசிரியர்கள் முருகானந்தம், மாணிக்கம் மற்றும் சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர். பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-
மரங்களை வளர்த்து நன்றாக காய்க்கும் நிலைக்கு கொண்டு வரும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.
மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மாணவர்களிடையே மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இப்பணியை செய்வதாகவும், இப்பணி தன் வாழ்நாளில் நிறைவான பணியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
- கரூரில் அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து அய்யர்மலை பகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டது
- சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி பிச்சை மரக் கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
குளித்தலை:
குளித்தலை அருகே சத் தியமங்கலம் ஊராட்சிக்குட் பட்ட அய்யர்மலை பகுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் 70-வது பிறந்த–நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெ–ரும் இயக்கம் தொடங்கப் பட்டது.இதனை கரூரில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழி–காட்டுதலின்படி அய்யர் மலை பகுதியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி பிச்சை மரக் கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். விழாவில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நீல–கண்டன், மேலாளர் சுரேஷ்,குமாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், சமூக ஆர்வ–லர் குமார் மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை வனச்சரக அலுவலர் செல்வகுமார், வனவர் கோபாலகிருஷ்ணன் மற் றும் வனத்துறையினர், சுகாதாரத்துறை சார்பாக டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவத்துறையினர் மற்றும் 500-க்கும் மேற் பட்ட பொதுமக்கள் மரக்கன்று–களை நட்டு வைத்தனர்.