search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distribution ceremony for"

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    கோபி,ஆக.26-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுச்சூழல் அணி யின் மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தலைமை தாங்கினார் .வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. கே.செல்வன் முன்னிலை வகித்தார்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ- மாணவி களுக்கு மரக்கன்று களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில்வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், தி.மு.க. சுற்று ச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், பழ செல்வக்குமார், நாராயணமூர்த்தி,, உசிலம்பட்டி அருண், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவகுமார், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் , திமுக. சுற்றுச்சூழல் அணி யின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×