என் மலர்

    நீங்கள் தேடியது "Samosa"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த சமோசா செய்வது மிகவும் சுலபம்.
    • குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 3 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி தழை- 1/2 கப்

    எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    சிறிதளவு மைதாவை தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய் தூள், சீரக பொடி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.

    பிசைந்து வைத்த மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி அதை முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி ஓரங்களில் மைதா பசையை தடவி மூடிவிடவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சுவையான வெங்காய சமோசா ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சமோசா - 3

    அப்பளம் - 4

    தயிர் - 3 மேஜைக்கரண்டி

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    புதினா சட்னி - 2 தேக்கரண்டி

    புளி சட்னி - 2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி

    ஓமப் பொடி - 1 கப்

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.

    அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.

    தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

    துண்டுகளாக உடைத்த சமோசாவை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நன்றாக கலந்த தயிரை ஊற்றவும்.

    அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும்.

    மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.

    அடுத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.

    கடைசியாக அதன் மேல் ஓமப் பொடியை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று உருளைக்கிழங்கு சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    வெங்காயம் - 2

    சீரகம் - ஒரு தேக்கரண்டி

    மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும்.

    உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.

    அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.

    இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.

    ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமோசாக்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று மாட்டு இறைச்சி வைத்து சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)

    உருளைக்கிழங்கு - 4

    பச்சை மிளகாய் - 3

    பெரிய வெங்காயம் - 2

    கறிமசாலா - 1 தேக்கரண்டி

    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

    மிளகாய் பொடி - தேவையான அளவு

    நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    கருவாப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு, விழுது - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்

    மைதா மாவு - 1 கப்

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை நன்றாக கழுவி சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    மைதா மாவில் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.

    உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி போட்டு கிளறி விடவும்.

    கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

    மாலை சப்பாத்தி போல் திரட்டி இரண்டாக வெட்டி கோன் வடிவில் செய்து அதன் உள்ளே சிறிது பீப் மசாலாவை வைத்து ஓரங்களில் நன்றா ஒட்டி விடவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீப் சமோசா ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளுக்கு திடீரென ஸ்நாக்ஸ் செய்ய விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இதை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    அப்பளம் - 10,

    காய்கறி பொரியல் - 50 கிராம்,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்யவும்.

    இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டி விடவும்.

    இதே போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான அப்பளம் சமோசா ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாலைநேரத்தில் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 100 கிராம்

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    முட்டை - 2

    சீரகம் - 1/4 தேக்கரண்டி

    கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    மிளகுத்தூள் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் வைத்திருக்கவும்.

    * கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * சிறிதளவு கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும், மிளகுப்பொடி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறிய பின்னர் முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறவும். மசாலா பச்சை வாசனை போய் முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * பிசைந்த சப்பாத்தி மாவினை, மிகவும் மெல்லிய சின்ன வட்ட சப்பாத்தியாக தேய்த்து முக்கோண வடிவில் செய்து நடுவில் முட்டை மசாலாவை வைத்து கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.

    * இவ்வாறாக எல்லாவற்றையும் செய்யவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான முட்டை சமோசா ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிக்கனில் பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம்.
    • மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கன் சமோசா செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )

    கொத்தமல்லி தழை - சிரிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    மைதா - 3 கப்

    உப்பு - தேவையான அளவு

    பச்சை மிளகாய் - 4

    கரம் மசாலா - 1 ஸ்பூன்

    வேகவைத்த பட்டாணி - ½ கப்

    பெரிய வெங்காயம் - 1

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.

    * பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    * மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :


    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சீஸ் சமோசா தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்துக்கள் நிறைந்த சோள தோசை
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்
    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
    மட்டன் கீமா - 250 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    புதினா  இலை - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 3 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 பெரியது
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடரை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1 மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

    கீமாவில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றும் வரை வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

    மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

    வட்டங்களை கோன் வடிவமாக செய்து அதில் மட்டன் கீமா கலவையை வைத்து மூடவும். அனைத்து மாவிலும் இவ்வாறு செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - ஒரு கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
    சர்க்கரை - அரை கப்
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
    எண்ணெய் - தேவையான அளவு 



    செய்முறை :

    மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.

    இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

    பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).  

    இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).

    பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.

    இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  

    சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - 200 கிராம்
    மைதா மாவு - 200 கிராம்
    வெங்காயம் - 2
    கேரட் துருவல் - கால் கப்
    உருளைக்கிழங்கு - 2
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.

    அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.