என் மலர்
நீங்கள் தேடியது "ஜிலேபி"
- மோசமான உணவு வகைகளால் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
- எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, நாக்பூர் எய்ம்ஸ் உள்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளைப் பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்கள் இடம்பெறுகின்றன. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும்.
சமோசா, ஜிலேபி ஆகியவை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் ஆகும். ஆனால் இந்த 2 உணவுகளும் உடலுக்கு தீங்கானது என கூறப்படுகிறது. இதன்மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என கருதப்படுகிறது.
சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பதுபோல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில் இந்த எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என இந்திய இதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே கூறினார்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
இந்நிலையில், சிகரெட் வரிசையில் சமோசா, ஜிலேபிக்கும் எச்சரிக்கை வாசகம் வர உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
எந்த உணவையும் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்ய திட்டமிடப்படவில்லை என்றும், உடல் பருமனைக் குறைக்க எண்ணெய், சர்க்கரை அளவு தொடர்பாகத்தான் எச்சரிக்கை வாசகம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும்.
- எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்கள் இடம்பெறுகின்றன. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும்.
சமோசா, ஜிலேபி ஆகியவை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் ஆகும். ஆனால் இந்த 2 உணவுகளும் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்று கருதப்படுகிறது.
சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில் இந்த எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என்று இந்திய இருதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே கூறினார்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
- எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபியை, கையால் மாவு பிழிந்து சுடுவது ஒருவித சிறப்பான கலை என்று நான் நினைக்கிறேன்
- ஒருவேளை நான் பழமையை விரும்பும் அந்த காலத்து மனிதராக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது
3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி தயாரிக்கும் வீடியோவை தனது X பக்கத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
அதில், "புதிய தொழிட்நுட்பங்களை எப்போதும் ஆதரிப்பவன் நான். ஆனாலும் 3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி தயாரிக்கும் இந்த வீடியோவை பார்க்கையில், எனக்குள் பலவித உணர்வுகள் தோன்றுகின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபியை, கையால் மாவு பிழிந்து சுடுவது ஒருவித சிறப்பான கலை என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், "ஒருவேளை நான் பழமையை விரும்பும் அந்த காலத்து மனிதராக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
I'm a tech buff.
— anand mahindra (@anandmahindra) February 21, 2024
But I confess that seeing jalebis being made using a 3D printer nozzle left me with mixed feelings.
They're my favourite & seeing the batter squeezed out by hand is, to me, an art form.
I guess I'm more old-fashioned than I thought…pic.twitter.com/RYDwVdGc3P
- எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
- புகார் கொடுத்த குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.
உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கனௌர். பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார். கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்கச் சென்ற இடத்தில் தனது மொபைல் போனை குமார் தவறவிட்டுள்ளார். எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
இதன் காரணமாக காவல் நிலையம் விரைந்த குமார் தனது மொபைல்போன் காணாமல் போனதை கூறி, அதனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். மொபைல் போனை பறிக்கொடுத்த குமார் மனவேதனையில் கூறிய புகாரை முழுமையாக கேட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரி, இறுதியில் புகார் கொடுக்க குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.
மொபைல் பறிக்கொடுத்த குமாரிடம் அதனை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுவதற்கு பதில் போலீஸ் அதிகாரி- முதலில் கடைக்குச் சென்று சூடான பாதுஷா அல்லது ஜிலேபி ஆகியவற்றில் ஒரு கிலோ வாங்கி வருமாறு கூறினார். இனிப்பு வாங்காமல் போலீசார் புகாரை பதிய மாட்டார்கள் என்று உணர்ந்தவராக மொபைலை பறிக்கொடுத்த குமார் இனிப்பு கடைக்கு சென்று ஜிலேபி வாங்கி வந்தார்.
குமார் வாங்கி வந்த ஜிலேபியை பெற்றுக் கொண்ட போலீசார், அதன்பிறகு மொபைல் போன் காணாமல் போனதை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இதே மாதத்தில் காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது உருளைக் கிழங்குகளை லஞ்சமாக பெற்றதற்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று மோடி கிண்டலடித்தார்.
அரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்றய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பாதியிலேயே பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.
தற்போது பாஜக தனது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இனிப்பு பலகாரமான ஜிலேபி டிரண்ட் ஆகி வருகிறது. பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜிலேபியை குறிப்பிட்டு அவர்கள் தேர்ந்தெடுக்க காங்கிரசை வெறுப்பேற்றும் அரசியல் காரணங்களும் உண்டு.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரியானாவில் பிரதியேகமாக தயாரிக்கப்படும் மாதுராம் ஜிலேபி குறித்து பேசியிருந்தார். பிரசித்தி பெற்ற மாதுராம் ஜிலேபிகளை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதால் அரியானாவில் வேலைவாய்ப்பு உயரும் என்ற திட்டத்தைத் தேர்தல் பிரசாரங்களில் ராகுல் முன்வைத்திருந்தார்.
மற்ற ஜிலேபிகளை விட சற்று அதிக நாட்கள் நீடிக்கக்கூடிய இந்த மாதுராம் ஜிலேபிகளின் தயாரிப்பை அதிகப்படுத்தும்போது நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 50,000 வரை மாதுராம் கிளைகளில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியும் என்று அவர் பேசினார். இதைக் கிண்டல் செய்த பாஜக தலைவர்கள், எங்களுக்கும் மாதுராம் ஜிலேபிகள் பிடிக்கும், ஆனால் ராகுல் காந்தி இதுபற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என்று கூறியிருந்தனர்.
பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியா கூட்டணி வருடத்துக்கு ஒரு பிரதமர் என பிரித்து 5 வருடங்கள் ஆட்சி செய்யும் கனவில் உள்ளது, பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று கிண்டலடித்திருந்தார்.
தற்போது காங்கிரசை வீழ்த்தி பாஜக வென்றுள்ளதால் அம்மாநிலத்தில் ஜிலேபிகளை பாஜவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். அசாமில் பாஜக ஊழியர் ஒருவர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்று ஜிலேபி பெட்டிகளை டெலிவரி செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.






