search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI world cup 2023"

    • ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக தெலுங்கு நடிகை தெரிவித்தார்.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் விளையாடியதன் மூலம் இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பிரதமர் மோடி உள்பட விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கண்டு களித்தனர். உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னர் சச்சின் 2011 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசளித்தார்.


    2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அது என்னவென்றால் உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக அவர் தெரிவித்தார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்தனர்.


    ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபட்டது.


    ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது.


    அதன் விவரம் வருமாறு:

    1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

    ஒரு உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக அதிக ரன் திரட்டிய கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை ரோகித் தகர்த்தார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த கிறிஸ் கெய்ல் (85) சாதனையை ரோகித் (86) முறியடித்தார்.


    இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.

    உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது. மேலும், குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார்.
    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

    அகமதாபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கைப்பற்றியது.

    இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4-வது கேப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.


    அதுபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.


    அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் 2018-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் செய்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றார்.


    இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.


    கிரிக்கெட்டில் இதுபோன்ற சுவாரஸ்மான விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.

    • அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர்.
    • ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் உள்ளன. இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஒவ்வொரு அணியும், சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருப்பார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

    குல்தீப் யாதவுடன் ஐ.பி.எல். போட்டியில் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது.

    குல்தீப் யாதவ் எங்களுக்கு (இந்திய அணி) ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். அவரை பெரும்பாலான அணிகள் சவாலாக கருதுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினர்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்.

    இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, "குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாங்கள் நிறைய விஷயங்களை யோசித்தே குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்தோம்.

    உலகக்கோப்பைக்கு முன்னதாக குல்தீப் யாதவை அதிகம் வெளிப்படுத்த விரும்பாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருக்கிறோம்.

    அதனால்தான் அவரை அதிகம் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இரண்டு ஆட்டங்களுக்கு வெளியே அமர்ந்து 3-வது ஆட்டத்தில் விளையாடுவது எங்களுக்கு சிறந்த முடிவாகும்" என்றார்.

    • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
    • உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் முன்னேறும் என்று நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, கொஞ்சம் முழு வலிமை கொண்ட அணியை உலகக்கோப்பைக்கு பெறுவார்கள்.

    ஆடம் ஜம்பா உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர். அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முழு திறமையை காட்டி உள்ளார். தற்போது அவருக்கு 50 ஓவர் உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தனது அனுபவத்தை, எதிரணி பேட்டிங் வரிசைக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். பயமின்றி விளையாட வேண்டும். டேவிட் வார்னர், முன் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். அவர் எப்போதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை கொண்டவர். அவர் நன்றாக விளையா டினால் எதிரணியினர் பயப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டில் 2-வது தடவையாக உலக கோப்பையை பெற்றோம்.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியா திணறி வருகிறது. இதனால் இந்த உலகக் கோப்பயை வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். 'சுவர்' என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டனான அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிவடைகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக் கோப்பையை வென்றால் மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    உலகக் கோப்பையை இந்திய கைப்பற்றாவிட்டால் அவரத ஒப்பந்தம் நீட்டிக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர் வரை டிராவிட் பயிற்சியாளராக நீடிக்கப்படலாம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் ஆதிக்கம் உள்ளது.

    கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உலகக் கோப்பை அணியில் உள்ளனர்.

    குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேரும் (ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் 2 வீரர்களும் (விராட் கோலி, முகமது சிராஜ்), டெல்லி கேப்பிடல்சில் 2 பேரும் (அக்ஷர் படேல், குல்தீப் யாதவ்), லக்னோ (கே.எல்.ராகுல்), சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜடேஜா) அணிகளில் தலா ஒருவரும் உலகக் கோப்பைக்கு தேர்வாகி உள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லை.

    • அணித் தேர்வின் ஆலோசனையில் நிறைய வீரர்கள் குறித்து பரிசீலித்தோம்.
    • தற்போது பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

    உலகக் கோப்பை அணியை அறிவித்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீரர்கள் அணியில் தங்களது இடத்திற்கு போராடுவது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல. சவால்கள் அதிகரிக்கும் போது அணித் தேர்வும் கடினமாகி விடுகிறது. ஆனால் யார் பார்மில் இருக்கிறார்? எதிரணி எது? இது போன்ற சூழலில் சிறப்பாக செயல்படும் வீரர் யார்? எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். இப்படி நடக்கும் போது நாம் விளையாடும் அணியில் சிலரை தவற விடுகிறோம். இது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான். அணியின் நன்மைக்காக இப்படி கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டியுள்ளது.

    அணித் தேர்வின் ஆலோசனையில் நிறைய வீரர்கள் குறித்து பரிசீலித்தோம். இறுதியில் 15 பேர் கொண்ட மிகச்சிறந்த அணியை தேர்வு செய்திருப்பதாக நம்புகிறோம். எங்களது கன கச்சிதமான அணிச்சேர்க்கை இது தான். அணித் தேர்வு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முழுமையான ஒரு வீரர். பேட்டிங்கும் செய்கிறார். பந்தும் வீசுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது அருமையான பேட்டிங்கை பார்த்து இருப்பீர்கள். அத்துடன் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பந்து வீச்சிலும் முத்திரை பதிக்கிறார். உலகக்கோப்பை போட்டியில் அவரது 'பார்ம்' நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

    தற்போது பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை நீங்கள் பார்த்தாலே ஏன் அணியில் ஆல்-ரவுண்டர் தேவை என்பது புரிந்திருக்கும். அந்த ஆட்டத்தில் நாம் 266 ரன்கள் எடுத்திருந்தோம். இன்னும் பேட்டிங் தெரிந்த பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கூடுதலாக 15 ரன் கிடைத்திருக்கும். இந்த 15 ரன் வித்தியாசம் என்பது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கக்கூடியது. எனவே பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் குறித்து பல முறை பேசி இருக்கிறேன். இதனால் அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு 4 ஆல்-ரவுண்டர்கள் (பாண்ட்யா, ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர்) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி சில சமயம் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்கள் விட்டுக்கொடுக்கும் போது, அவர்கள் தங்களது 10 ஓவர்களை முழுமையாக வீச முடியாத நிலை உருவாகும். அப்போது ஆல்-ரவுண்டர்கள் கைகொடுப்பார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அணியில் ஆல்-ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • ‘சந்திரயான்-2’ தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
    • அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது.

    மும்பை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி நேற்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன்மூலம் இந்தியா புதிய உலக சாதனை படைத்தது.

    'சந்திரயான்-3' வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'சந்திரயான்-3' வெற்றி தொடர்பாக 5 முறை ஐ.பி.எல். கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட டுவீட் வைரலாகி உள்ளது.

    'சந்திரயான்-2' தோல்வியால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அரை இறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்னில் தோற்றது. 'சந்திரயான்-3' வெற்றியால் தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுமா? என்று மும்பை இந்தியன்ஸ் அந்த போஸ்டில் தெரிவித்து உள்ளது. இந்த டுவீட் வைரலாகி உள்ளது.

    இந்திய அணி ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலான அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் இந்தியா 1983-ம் ஆண்டு முதல் முறையாக கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் இந்தியா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. முன்னதாக 2007-ல் அறிமுக 20 ஓவர் உலகக் கோப்பை அவர் பெற்றுக் கொடுத்தார்.

    தற்போது 13-வது உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? என்பதே ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறும் இந்தப்போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    • இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது.
    • என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.

    உலக கோப்பையையொட்டி எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் உலக கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் 4 அணிகள் எவை என்று கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான உலக கோப்பையாக இருக்கும்.

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 பெரிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 4-வது அணியாக தென்ஆப் பிரிக்கா இணைய வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானும் முன்னேற்றலாம்.

    ஆனால் நான் தென்ஆபிரிக்கா நுழையும் என நம்புகிறேன். திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    ஆசிய கண்டத்தை சாராத 3 அணிகளை நான் தேர்வு செய்துள்ளேன். இது கொஞ்சம் கடினமானதுதான். ஆனாலும் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

    இந்தியா ஆடுகளங்கள் நன்றாக இருக்கும். மோசமான ஆடுகளத்தை உலக கோப்பை தொடரில் பார்க்க முடியாது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார்.
    • துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

    மும்பை:

    ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டிக்கான இந்தியாவின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செயல்படுகிறார். மும்பையில் நேற்று நடந்த இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் 4-வது வரிசை நீண்டகாலமாகவே பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. யுவராஜ்சிங்குக்கு பிறகு அந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேனும் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார். கணிசமான ரன்களும் குவித்தார். துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால், 4-5 ஆண்டுகளாக இது தான் நடக்கிறது. அந்த வரிசையில் ஆடிய நிறைய வீரர்கள் காயமடைந்து இருப்பதும், பிறகு அந்த இடத்திற்கு புதிய வீரர்கள் வந்து ஆடுவதும் வாடிக்கையாகி விட்டது. இருப்பினும் எந்த வீரரும் அந்த வரிசையில் கச்சிதமாக பொருந்தவில்லை. சரியான வீரர்களை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.

    கடந்த 4-5 ஆண்டுகளாக வீரர்கள் அதிக அளவில் காயமடைவது நமது நீண்டகால திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீரர்கள் காயமடையும் போதோ அல்லது அணித் தேர்வில் இருந்து ஒதுங்கி இருக்கும் போதோ புதிய வீரர்களை கொண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளை செய்து பார்க்கிறோம். அதனால் தான் 4-வது பேட்டிங் வரிசையை பற்றி பேச வேண்டி இருக்கிறது. நான் கேப்டனாக இல்லாத போது கூட இந்த வரிசையில் நிறைய வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்திருக்கிறார்கள்.

    இந்திய அணியில் எனக்கு உள்பட யாருக்கும் தானாகவே இடம் கிடைத்து விடாது. இதே போல் யாருக்கும் இடம் உறுதி என்று கூறிவிட முடியாது. தாங்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகிறோம் என்பது சில வீரர்களுக்கு தெரியும். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

    ஸ்ரேயாஸ் அய்யரும், லோகேஷ் ராகுலும் கடந்த 4 மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெரிய அளவில் காயமடைந்து ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள். நானும் ஒரு முறை காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருக்கிறேன். காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்புவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். அவர்கள் எந்த அளவுக்கு காயத்தில் இருந்து மீண்டு தயாராக இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    இன்னும் சில தினங்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய விவாதங்கள் இருக்கும். ஆனால் யாருக்கும் அணியில் தானாகவே இடம் கிடைத்து விடாது. ஒவ்வொரு இடத்திற்கும் கடும் போட்டி இருக்கிறது. நிறைய வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு எது சரியான அணி கலவையாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம்.

    உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தரமான அணிக்கு எதிராக நமது சில பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன்.

    50 ஓவர் உலகக்கோப்பையை நான் வென்றதில்லை. அதை கையில் ஏந்த வேண்டும் என்பதே எனது கனவாகும். அதற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். அதை வெல்வதை விட மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இருக்க முடியாது. உலகக் கோப்பையை தட்டில் வைத்து தந்து விட மாட்டார்கள். உண்மையிலேயே இதற்காக மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை நாங்கள் எல்லோரும் இதற்காகத்தான் போராடி வருகிறோம்.

    ஒவ்வொருவரும் களத்திற்கு சென்று வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். ஏனெனில் நம்மிடம் சிறந்த அணி உள்ளது என்பதை அறிவோம். நமது வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களால் இதை செய்ய முடியும் என்ற உள்ளுணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கிறது.

    அணியை வழிநடத்தினாலும் முதலில் நான் ஒரு பேட்டர். அதன் பிறகு தான் கேப்டன். அதனால் அணியில் எனது பங்களிப்பு பேட்டிங்கில் தான் அதிகம் உள்ளது. கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட வேண்டியது தான். அதே நேரத்தில் நான் நிறைய ரன்கள் குவித்து அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறோம். சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்துகிறோம். இது உலகக் கோப்பை ஆண்டு. ஒவ்வொரு வீரரும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும். எந்த வீரரும் முக்கியமான போட்டிகளை தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை.

    இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவரை நான் இரு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். முதிர்ச்சியான வீரர் போல் செயல்பட்டு வருகிறார். நான் அவரிடம் பேசும் போது, அவர் தனது பேட்டிங்கை நன்கு புரிந்து வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். பந்தை எங்கு அடிக்க வேண்டும், எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. இந்தியாவுக்கு ஆடிய கடந்த சில ஆட்டகளில் அதை நிரூபித்து காட்டி விட்டார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது.
    • இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு பாகிஸ்தான் அணிக்கு 60 சதவிகித வாய்ப்புகள் உள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பவர் 19-ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

    அக்டோபர் 11 ஆம் தேதி இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

    இந்த நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது. இது பாக், அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இருக்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது. இது பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இருக்காது.

    முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இருவரும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஜஸ்ப்ரித் பும்ரா பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அவர் தகுதியற்றவராக இருக்கிறார். இன்னும், தனது உடல் தகுதிக்கான பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறார். ஆகையால், அவருக்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம்பெறும் வாய்ப்பு குறைவு தான்.

    பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் பேட்டிங் பலம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால், எங்களிடம் ஆபத்தான் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இப்போதைக்கு பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு இருப்பதாக நான் கூறுவேன்.

    இந்தியா குறைவான ஸ்கோர் எடுத்தால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியாவை இதுவரையில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை. இதுவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 7 போட்டியிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.

    • இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.
    • 3-வது ஆட்டத்தில் பரம எதிரியாக பாகிஸ்தானை அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.


    அகமதாபாத்தில் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 11-ந் தேதி எதிர்கொள்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம எதிரியாக பாகிஸ்தானை அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.


    இந்திய அணி மோதும் விவரம்:-

    இந்தியா - ஆஸ்திரேலியா அக்டோபர் 8 - சென்னை

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அக்டோபர் 11 - டெல்லி

    இந்தியா - பாகிஸ்தான் அக்டோபர் 15 - அகமதாபாத்

    இந்தியா - வங்களாதேசம் அக்டோபர் 19 - புனே

    இந்தியா - நியூசிலாந்து அக்டோபர் 22 - தர்மசாலா

    இந்தியா - இங்கிலாந்துஅக்டோபர் 29 - லக்னோ

    இந்தியா - குவாலிபையர்-2நவம்பர் 2 - மும்பை

    இந்தியா - தென் ஆப்பிரிக்காநவம்பர் 5 - கொல்கத்தா

    இந்தியா - குவாலிபையர்-1நவம்பர் 11 - பெங்களூரு

    ×