search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்த முறை இந்தியாவுக்குதான் உலக கோப்பை- ஏபிடி வில்லியர்ஸ் கணிப்பு
    X

    இந்த முறை இந்தியாவுக்குதான் உலக கோப்பை- ஏபிடி வில்லியர்ஸ் கணிப்பு

    • இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது.
    • என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.

    உலக கோப்பையையொட்டி எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் உலக கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் 4 அணிகள் எவை என்று கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான உலக கோப்பையாக இருக்கும்.

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 பெரிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 4-வது அணியாக தென்ஆப் பிரிக்கா இணைய வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானும் முன்னேற்றலாம்.

    ஆனால் நான் தென்ஆபிரிக்கா நுழையும் என நம்புகிறேன். திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    ஆசிய கண்டத்தை சாராத 3 அணிகளை நான் தேர்வு செய்துள்ளேன். இது கொஞ்சம் கடினமானதுதான். ஆனாலும் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

    இந்தியா ஆடுகளங்கள் நன்றாக இருக்கும். மோசமான ஆடுகளத்தை உலக கோப்பை தொடரில் பார்க்க முடியாது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×