என் மலர்

    நீங்கள் தேடியது "aavin milk"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீண்டும் பால் பவுடர் பிராசசிங் செய்வதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    • பால் வினியோகம் நாளை முதல் சீராகும். தாமதம் ஏற்படாது.

    சென்னை:

    அம்பத்தூர் பால் பண்ணையில் நீடித்து வரும் பால் வினியோகம் தாமதத்திற்கான காரணம் குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த வாரத்தில் ஏற்பட்ட எந்திர பழுதின் காரணமாக பால் பவுடர் கலப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அந்த பழுது சரி செய்யப்பட்டது.

    ஆனால் மீண்டும் பால் பவுடர் பிராசசிங் செய்வதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    தினமும் 4 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் பால் இங்கு உற்பத்தி செய்து பாக்கெட்டுகளாக வினியோகிக்கப்படுகிறது. எந்திரம் பழுதானதால் குறித்த நேரத்திற்கு பால் பாக்கெட் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 2 லட்சம் லிட்டர் வரை தான் அந்த நேரத்திற்குள் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையான அளவுக்கு உற்பத்தி செய்வதற்கு கால தாமதம் ஆகிறது.

    அதனால் 3 லட்சம் லிட்டர் பாலை சேலம், மதுரை, வேலுர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று கொண்டு வரப்படுகிறது. அந்த பால் அங்கேயே பிராசசிங் செய்து எடுத்து வரப்படும். நேரடியாக இங்கு கொண்டு வந்து பாக்கெட்டில் அடைக்கப்படும். அதனால் பால் வினியோகம் நாளை முதல் சீராகும். தாமதம் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 3 நாட்களாக அம்பத்தூர் பண்ணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை.
    • பால் பண்ணையில் வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன.

    சென்னை:

    சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் வினியோகத்தில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டு பால் சப்ளை பாதிக்கப்பட்டு வருகிறது.

    வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பால் குறைந்ததாலும் எந்திரம் பழுதின் காரணமாகவும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 3 நாட்களாக அம்பத்தூர் பண்ணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை.

    லாரிகள் தாமதமாக புறப்படுவதால் பால் முகவர்கள் மற்றும் கடைகளுக்கு பால் தாமதமாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக பால் சப்ளை பாதித்தது.

    மாதாந்திர அட்டைதாரர்கள் மற்றும் மொத்த வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் காலை 6.30 மணிவரை வெளியே செல்லவில்லை. பால் பண்ணையில் வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன.

    இதனால் அண்ணா நகர், முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, வடபழனி, திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மாங்காடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகம் செய்யப்பட வேண்டிய சுமார் 3 லட்சம் லிட்டர் பால் சப்ளை முடங்கியது.

    பால் வினியோகம் சீராக இல்லாமல் பல்வேறு பகுதிகளுக்கு தாமதமாக சென்றதால் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் சென்னை அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் வினியோகத்தில் சற்று தாமதமானதின் எதிரொலியாக தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி:

    பால் கொள்முதல் விலையை ரூ.31-ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 11-ந்தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திலும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

    கடந்த வாரம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி மற்றும் சர்க்கரைப்பட்டி பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூரை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களும் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பால் விலையை உயர்த்த வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நடுரோட்டில் பாலை கொட்டி தங்களின் எதிர்ப்பை காட்டினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    இதில் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர். மேலும் அந்த கிராமத்தின் பால்பண்ணை தலைவர்கள் சண்முகம், ஞானபிரகாசம், தமிழ், பாண்டி, சின்னச்சாமி, முருகன், விக்கி, அர்ஜுனன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், ஆவின் பால் வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

    ஆகவே பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக பொது மக்கள் கடைகளில் திருப்பி கேட்டு தகராறு செய்தனர்.
    • எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை. இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு பிரிவினர் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட பல இடங்களில் ஆவின் பால் கொள்முதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் சென்னையில் தாமதமாகி வருகிறது. மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணையில் நீடித்து வரும் பிரச்சினையை சமாளிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

    பால் தட்டுப்பாட்டை சமாளிக்க மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடர், வெண்ணை கொள்முதல் செய்யப்பட்டு அதனை சமன்படுத்திய பால் (பச்சை பாக்கெட் பால்) தரத்திற்கு மாற்றி வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

    பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில் அதனை ஈடு செய்ய ஆவின் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது.

    சென்னையில் அம்பத்தூர் பண்ணையில் இருந்து நேற்று காலையில் வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்தது.

    பால் பவுடர் மற்றும் வெண்ணை சரியாக சமன் படுத்தப்படாததால் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 60 ஆயிரம் பாக்கெட்டுகள் கெட்டுப்போனதாக முகவர்கள் தெரிவித்தனர்.

    எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை. இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது. இதை வாங்கி சென்ற பொது மக்கள் வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு கடைகளில் திருப்பி கொடுத்தனர்.

    அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், முகப்பேர், அண்ணாநகர், போரூர், பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வினியோகிக்கப் பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக பொது மக்கள் கடைகளில் திருப்பி கேட்டு தகராறு செய்தனர்.

    இந்நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது. அதி காலை 5 மணி வரை அம்பத்தூர் பண்ணையில் இருந்து பால் வினியோக வாகனங்கள் வெளியே செல்ல வில்லை. பால் அட்டைதாரர் களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சப்ளை செய்யப் பட்டது. ஆனால் கடை களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகள் காலை 6 மணி வரை வெளியே செல்லவில்லை. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். கடைகளுக்கு 7, 8 மணிக்கு மேல் தான் பால் சப்ளை செய்யப்பட்டது. ஆவின் பால் கிடைக்காததால் தனியால் பாலை வாங்கி சென்றனர்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் வினியோகம் தாமதத்தால் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சமன்படுத்தப்பட்ட பாலில் கொழுப்புசத்திற்கு இணையாக ஒரு சதவீதம் பால் பவுடர் கலக்கப்படும். அவ்வாறு கலக்கும் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக முறையாக கலக்கப்படவில்லை. இதனால் பால் கெட்டுப் போகாது. பால் கெட்டுப் போனதாக பொதுமக்கள் கூறியதால் அவர்களுக்கு மாற்று பாக்கெட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைகளுக்கு சப்ளை செய்த பாலில் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது.

    அதனை சரி செய்து பால் பதப்படுத்தி வினியோகம் செய்யும் பணி சீராக்கப்பட்டுள்ளது. எந்தி ரத்தை சரி செய்யும் பணி இரவு வரை நீடித்தது. அதனால் இன்று காலையில் பால் வினியோகம் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. நாளை முதல் பால் வினியோகம் சீராகி விடும். தொழிலாளர்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்பத்தூர் பால் பண்ணையில் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எந்த வகையிலும் வரும் நாட்களில் பால் வினியோகம் பாதிக்காத வகையில் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
    • மக்களின் தேவைக்கேற்ப பால் கொள்முதல் செய்யப்படும்.

    சென்னை:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதாவது பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 -ஆகவும், எருமைப் பால் ரூ.41-ல் இருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டது.

    இந்த விலை உயர்வு போதாது என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். பால் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆவது அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் தமிழக அரசு இதனை ஏற்கவில்லை.

    தமிழகத்தில் ஆவின் நிறுவனத்துக்கு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் சுமார் 28 லட்சம் லிட்டர் பால் வழங்குகிறார்கள். கொள்முதல் விலையை அதிகரிக்காவிட்டால் இனி பால் வழங்கமாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.

    பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தை பால் உற்பத்தியாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கினார்கள். தமிழகத்தின் சில பகுதிகளில் பாலை சாலைகளில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுப்பதற்கு பதில் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்படலாம் என்று அச்சுறுத்தல் எழுந்தது. ஆனால் இன்று காலை ஆவின் பால் வினியோகம் வழக்கம்போல் நடந்தது. எந்த இடத்திலும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    இதுதொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-

    தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் எதிர்க்கட்சிகளில் சிலர் பால் உற்பத்தியாளர்களை போராட்டத்துக்கு தூண்டிவிட்டுள்ளனர். அவர்களை நம்பி சில பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் இன்று எந்த ஒரு இடத்திலும் பால் வினியோகம் தடைபடவில்லை. பால் வினியோகம் பாதிப்பில்லாமல் வழக்கம்போல நடைபெற்றது. நாளையும் அதைத்தொடர்ந்து தினமும் பால் வினியோகம் தங்கு தடையின்றி வினியோகிக்கப்படும்.

    தமிழகத்தில் பால் வினியோகம் சீராக உள்ளது. எந்த வகையிலும் வரும் நாட்களில் பால் வினியோகம் பாதிக்காத வகையில் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். மக்களின் தேவைக்கேற்ப பால் கொள்முதல் செய்யப்படும்.

    பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக உள்ளனர். இந்த விஷயத்தில் முதலமைச்சரின் அறிவுரைக் கேற்ப தகுந்த முடிவை அமல்படுத்துவோம்.

    இவ்வாறு அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

    இதற்கிடையே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் கூறுகையில், 'பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தாவிட்டால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூன்றடுக்கு முறையில் குழப்பம் ஏற்பட்டுவிடும்' என்று கூறினார்.

    ஆனால் இதை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் பால் கொள் முதல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இன்று (வெள்ளிக் கிழமை) தமிழகம் முழுவதும் சுமார் 29 லட்சம் லிட்டர் பால் வினியோகம் சீராக நடை பெற்றது' என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலமடையில் ஆவின் பால் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்த வேண்டும் என்று மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மதுரை மாவட்டம் முழுவதிலும் கடந்த 11-ந்தேதி ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விரைவில் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்தநிலையில் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் வருகிற 17-ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர்.

    இதற்கிடையே பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து குறிப்பிட்டபடி மதுரை மாவட்டத்தில் இன்று (17-ந்தேதி) ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகத்தை நிறுத்தம் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பால் பணியாளர் சங்கம் கலந்து கொள்ளவில்லை.

    மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் அங்கத்தினராக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பால் தேவை 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1.60 லட்சம் லிட்டர் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து தற்போது 1.36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு உற்பத்தியா ளர்கள் நலச்சங்கம் முழு அளவில் பால் விநியோக நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக சங்கங்களின் கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே பால் வியாபாரிகள், ஆவினுக்கான பால் விநியோகத்தை நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் பால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தவிர மதுரையில் உற்பத்தியாளர்களிடம் பேசுவதற்காக, ஆவின் சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் உசிலம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பாக உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் சங்க பணியாளர்கள், உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கமாவட்டத்தலைவர் பெரிய கருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் இன்பம் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.
    • பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    தமிழக அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதாவது, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது.

    இந்த விலை உயர்வு 'யானைப்பசிக்கு சோளப்பொறி' போன்றதாக உள்ளது என்றும், விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம்.

    குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.

    பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1-ந் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.

    தற்போது தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது.

    இதில் 2½ லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது.

    இந்த போராட்டம் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.

    தொடர்ந்து 5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும்.

    தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பால் உபரி என்பது இல்லை. இதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் எங்கிருந்தும் பால் வாங்க முடியாது.

    ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு முழுமையாக காப்பாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்கள் கூடுதல் விலை கொடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு பாலை கொடுத்து விடுவோம்.

    பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். கேரளாவில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் 70 காசு வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் ரூ.15 கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த கொள்முதல் விலைப்பட்டியலை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம்.

    தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் போராட்ட அறிவிப்பால் ஆவின் நிறுவனத்தின் பால் வினியோகிப்பதில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி கூறியதாவது:-

    ஆவின் பால் தட்டுப்பாடு செயற்கையான முறை என்பதுடன் தவறான கையாளுகின்றதால் மிகப்பெரிய அளவில் ஆவின் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30 லட்சம் ஆவின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு எல்லா துறைகளிலும் உரிய முறையில் செயல்படாத காரணத்தினால் திறமையான அதிகாரிகள் பணிய மறுத்த காரணத்தினால் தனக்கு வேண்டியவர்களை பணியில் அமருவதால் ஒவ்வொரு துறையும் செயல் இழந்துள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்திருப்பது எவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் முறையாக செயல்படவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்துகிறார். அதற்கு எடப்பாடி பொறுமையாக இருக்கிறார். யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஆணவ தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள்.

    அப்படி நடக்கும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு சில இடங்களில் காவல்துறையும் உறுதுணையாக இருக்கும். இதனால் மென்மேலும் தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கும். அப்படி சட்டம் ஒழுங்கு பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆளும் கட்சியினர். முதலமைச்சருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். இதில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்படும்.

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அளவில் ஒன்றிய அளவில் சார்பு அணிகள் ஆலோசனை நடத்தி எப்படி தேர்தலில் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கி பம்பரம் போல் செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரும்பாலும் ஆவின் பால் தான் வீடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆவின் பால் நிறுவனம் மூலம் 14.50 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் கடைகளில் விரைவாக விற்று வருகின்றன.

    பெரும்பாலும் ஆவின் பால் தான் வீடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவின் பாலை விரும்புவதால் தட்டுப்பாடாகவே இருந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட போதிலும் தனியார் பாலை விட விலை குறைவாக இருப்பதால் தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யக்கூடிய சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அங்கு பணியாற்றும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பாததால் பால் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டது.

    சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. பால் அட்டைதாரர்களுக்கு 2 லட்சம் லிட்டரும், வினியோகஸ்தர்களுக்கு 3.50 லட்சம் லிட்டரும் வினியோகிக்கப்படுகிறது.

    தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஆவின் பால் லாரி, வேன்களில் ஏற்றி அனுப்புவதில் நேற்று தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 3, 4 மணிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய வாகனங்கள் காலை 6, 7 மணிக்கு மேல் புறப்பட்டதால் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பால் வினியோகஸ்தர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், கோவிலம்பாக்கம், பாலவாக்கம், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால் 2 மணிநேரம் தாமதமாக வினியோகிக்கப்பட்டது. இன்று 2-வது நாளாக பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    பால் அட்டைதாரர்களுக்கு அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகிக்கப்பட்டாலும் கடைகளுக்கு வழங்கக்கூடிய வினியோகஸ்தர்களுக்கு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், ஆவின் முகவர்களுக்கு குறித்த நேரத்திற்கு பால் போகாததால் பொதுமக்கள் தனியார் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதேபோல அம்பத்தூர் பால் பண்ணையிலும் தொழிலாளர்கள் பிரச்சினை ஏற்பட்டதால் மத்திய சென்னை பகுதியில் பால் வினியோகம் தாமதம் ஆனதாக தெரிகிறது. தெற்கு மற்றும் மத்திய சென்னை பகுதியில் ஆவின் பால் சப்ளையில் இன்று பாதிப்பு ஏற்பட்டதை சரிசெய்யும் வகையில் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சோழிங்கநல்லூர் பண்ணையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் குறைந்த அளவில் பணியில் ஈடுபட்டதால் நேற்று சப்ளை சற்று தாமதம் ஆனது. அவற்றை இன்று சரி செய்து விட்டோம். அங்கு பணி செய்யக்கூடிய 65 தொழிலாளர்களில் 60 பேர் வேலை செய்தனர். பால் அட்டைதாரர்களுக்கு அதிகாலை 2 மணிக்கு லாரிகள் புறப்பட்டு சென்றன. வினியோகஸ்தர்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் காலை 5.30 மணி, 6 மணி வரை சென்றன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. பால் பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவையான அளவு சப்ளை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
    • நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக ஆவின் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்து பேசி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலும் சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நெல்லை ரெட்டியார்பட்டியில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தான் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட ஆவினில் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆவின் முகவர்களுக்கு பாதி அளவே பால் சப்ளை செய்யப்படுவதாகவும், கடந்த சில தினங்களாக அனைத்து அளவு பாக்கெட்டுகளும் தட்டுப்பாட்டில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இங்கிருந்து தினமும் கடைகளுக்கு ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளும், வீடுகளுக்கு பச்சை நிற பாக்கெட்டுகளும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த தட்டுப்பாட்டை போக்குவதற்காக நாளை முதல் 'கவ் மில்க்' என்ற பெயரில் புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாக்கெட் 500 மில்லி அதிகபட்ச விலையாக ரூ.22.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆவின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 36 ஆயிரம் லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் லிட்டர் பால் என மொத்தம் 76 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 85 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் தேவைப்படுகிறது.

    தற்போது கொள்முதல் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை நிர்ணயித்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றனர். ஆவினில் இருந்து லிட்டர் ரூ.33 முதல் 38 வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ.40 முதல் 42 வரை கொள்முதல் செய்வதால் பால் உற்பத்தியாளர்கள் அவர்களை நாடி செல்கின்றனர். இதனால் ஆவினில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    வழக்கமாக பச்சை நிற பாக்கெட்டு ஒன்று விற்பனை செய்வதன் மூலம் ஆவினுக்கு ரூ.2 நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்யவே கவ் மில்க் என்ற பெயரில் புதிதாக பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்மூலம் தட்டுப்பாடு தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் பால் ஏஜெண்ட்டுகள் கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பச்சை நிற பாக்கெட்டுகளில் கொழுப்பு 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனை லிட்டர் ரூ.46-க்கு விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது தட்டுப்பாட்டினால் கவ் மில்க் என்பதை 3.5 சதவீதம் கொழுப்புடன் அறிமுகப்படுத்தி லிட்டர் ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனால் வீடுகளில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவோர், டீக்கடைக்காரர்கள் ஆவின் பால் வாங்குவதை நிறுத்தி வருகின்றனர். பேட் அளவு அதிகமாக இருந்தால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து டீ போட்டு கொள்ள முடியும். ஆனால் கவ் மில்க்கில் பேட் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அதில் குறைந்த அளவே தண்ணீர் சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.