ஆவின் பச்சை கவர் பால் தட்டுப்பாடு- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
ஆவின் பச்சை கவர் பால் தட்டுப்பாடு- அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆரஞ்சு கவர் பால் விலை உயர்த்தப்பட்டது தான். பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும்.

வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு கவர் பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com