search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "21 பேர் பலி"

    மெக்சிகோ நாட்டில் டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் அதில் பயணித்த 21 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.

    வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகினர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பயணிகள் பஸ் டிராக்டர் டிரெய்லருடன் மோதிய விபத்தில் 21 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். #ByPolls #DMK #MKStalin
    சென்னை:

    தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

    பெரம்பூர் - ஆர்.டி.சேகர், சோளிங்கர் - அசோகன், சாத்தூர் - சீனிவாசன், விளாத்திக்குளம் - ஜெயகுமார், பரமக்குடி - சம்பத்குமார், திருப்போரூர் - செந்தில் என்ற இதயவர்மன், பூந்தமல்லி - கிருஷ்ணசாமி, நிலக்கோட்டை - சவுந்தரபாண்டியன், திருவாரூர்- பூண்டி கலைவாணன், ஆம்பூர் - விஸ்வநாதன், குடியாத்தம் - காத்தவராயன், ஓசூர் - சத்யா, பாப்பிரெட்டிப்பட்டி - மணி, ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன், பெரியகுளம் - கே.எஸ்.சரவணகுமார், தஞ்சாவூர் - நீலமேகம், அரூர் - கிருஷ்ணகுமார் மானாமதுரை - கரு காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், இடைத்தேர்தலை சந்திக்கும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுக வேட்பாளராக கே.வெங்கடேசன் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். #ByPolls #DMK #MKStalin
    21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். #MKStalin #DMK

    சென்னை:

    தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

    இதில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து அண்ணா அறிவாலயத்தில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொருவரையும், தனித்தனியாக அழைத்து அவர்களிடம் நேர்காணல் நடத்தினார். கட்சியில் எவ்வளவு காலம் பணியாற்றி இருக்கிறீர்கள்? இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா? தேர்தல் செலவு செய்ய பணம் உள்ளதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டார்.

    ஒவ்வொரு தொகுதியிலும் விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கருத்துக்கள் கேட்டார்.

     


    திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திகுளம், ஓசூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடந்தது.

    பரமக்குடி தொகுதிக்கு சம்பத்குமார், பாலு, சீதா ராணி, ஜெயமுருகன், தமிழ ரசி, வி.நக்கீரன், தங்கராஜ், பூமிநாதன், இசைவீரன், குமரகுரு, முருகேசன், கதிரவன், செல்வி, சஞ்சய் ஆகியோர் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.

    சாத்தூர் தொகுதிக்கு மல்லி ஆறுமுகம், கடற்கரை ராஜ், சீனிவாசன், விளாத்திக்குளம் தொகுதிக்கு சோ.ரவி, நவீன், கலைச்செல்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்பட 20 பேர் வந்திருந்தனர்.

    ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு மாடசாமி, சண்முகையா, சுசிந்தா, பூங்குமார், ராஜேந்திரன், காசிவிஸ்வநாதன், அனந்த், ஆறுமுக பெருமாள், இளையராஜா, பெரியகுளம் தொகுதிக்கு ஜீவா, பிச்சை, கணேசன், நாகலிங்கம், முத்துசாமி, காமராஜ், சரவணகுமார் உள்ளிட்ட 14 பேர் வந்திருந்தனர்.

    பெரம்பூர் தொகுதி நேர்காணலில் ஜெயராமன், கமலக்கண்ணன், என்.வி.என். சோமு மகள் டாக்டர் கனிமொழி, தமிழ்வளன், தேவ ஜவஹர், ஆர்.டி.சேகர், மலர் விழி, இரா.கருணாநிதி, யுவராஜ், நரேந்திரன், ஆனந்த், முருகன், லோகநாதன், நெடுமாறன், ரவி ஆகிய 15 பேர் வந்திருந்தனர்.

    இன்று 21 சட்டசபை தொகுதிக்கு நேர்காணல் நடைபெற்றதால் அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அந்தந்த தொகுதிக்கும் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமின்றி அவர்களின் ஆதரவாளர்களும் திரளாக வந்ததால் அண்ணா அறிவாலயம் களை கட்டியது. #MKStalin #DMK

    சிவகங்கையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தர வேண்டும். கூடுதல் பணிக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ப் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதையொட்டி ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விளக்க கூட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட அளவில் கண்டன ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநிலப் பொதுச்செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் முக்கிய விதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு தங்களின் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் வழங்கினர்.
    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என 21 பேர் குற்றாலத்தில் இன்னும் 2 நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளனர். #MLAsDisqualificationCase #18MLAs #TTVDhinakaran
    தென்காசி:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

    அவர்கள் அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை ஆகஸ்டு 22-ந்தேதி சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்” என்று கூறி இருந்தனர்.

    இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களிடமும் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பிறகு 19 எம்.எல்.ஏ.க்களின் செயல், தானாக முன் வந்து அ.தி.மு.க.வின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறியதற்கு சமம். எனவே 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ஆகஸ்டு 24-ந்தேதி பரிந்துரை செய்தார்.

    இதற்கிடையே 19 எம்.எல்.ஏ.க்களில் எஸ்.டி.கே.ஜக்கையன் மட்டும் செப்டம்பர் 17-ந்தேதி சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி அறிவித்தார்.

    இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட கருத்தை தீர்ப்பாக வழங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்திய நாராயணன் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி முதல் இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் விசாரணை முடிவடைந்தது.

    தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் நீதிபதி சத்திய நாராயணன் ஒத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இந்த வாரம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

    இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் சாதகமாக தீர்ப்பு வந்தால், தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அனைத்து தரப்பினரும் இந்த தீர்ப்பின் முடிவை ஆவலுடன் எதிர் பார்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தொடர்ந்து தங்கள் அணியில் பாதுகாப்பாக வைக்க தினகரன் அணி மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்று அழைத்து சென்றனர். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கிமுத்துவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), பழனியப்பன் (பாப்பிரெட்டி பட்டி), கதிர்காமு (பெரிய குளம்), ஏழுமலை (பூந்தமல்லி), முருகன் (அரூர்), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), பார்த்திபன் (சோழிங்கர்), கோதண்டபாணி (திருப் போரூர்), சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), ரெங்கசாமி (தஞ்சாவூர்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), சுப்பிரமணியன் (சாத்தூர்), ஜெயந்தி பத்ம நாபன் (குடியாத்தம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகிய 15 பேர் நேற்று இரவே பழைய குற்றாலத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்று தங்கினர்.

    அவர்களுடன் பிரபு எம்.எல்.ஏ.வும் தங்கினார். இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல். ஏ.க்களான முத்தையா (பரமக்குடி), தங்கதுரை (நிலக்கோட்டை) ஆகியோரும், எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் குற்றாலம் சொகுசு விடுதிக்கு வந்தனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் (பெரம்பூர்) இன்று பிற்பகல் குற்றாலம் சொகுசு விடுதிக்கு வருகிறார். இதனால் குற்றாலத்தில் 21 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    இன்று காலை குற்றாலத்தில் தங்கியுள்ள தங்க தமிழ்செல்வன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் பழைய குற்றாலம் ரோட்டில் நடைபயிற்சி சென்றனர். பின்பு விடுதிக்கு சென்று தங்கினர்.

    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடிய காட்சி.

    சிறிது நேரத்திற்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும், பதவியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்களும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு பாபநாசத்திற்கு சென்றனர். அங்கு அனைவரும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்கள். பின்னர் அங்கிருந்து மீண்டும் குற்றாலம் சொகுசு விடுதிக்கு திரும்பினார்கள். இன்னும் 2 நாட்களுக்கு அவர்கள் குற்றாலத்தில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளனர்.

    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் குற்றாலத்தில் தங்கி இருப்பதை தொடர்ந்து அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் சென்று குவிந்துள்ளனர்.

    அந்த தனியார் விடுதிக்கு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளார்கள். #MLAsDisqualificationCase #18MLAs #TTVDhinakaran
    மலேசியாவில் விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியாகினர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Malaysia #LiqourDeath
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது.

    ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் சாராயத்தை குடிக்கின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாராயம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.



    உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    போலீசார் நடத்திய விசாரணையில், சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள். மற்றவர்கள் வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியானது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Malaysia #LiqourDeath
    ×