என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலையங்கள்"

    • கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம்.
    • படிப்படியாக பல ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    சென்னை:

    நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரெயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால் கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படுகின்றன.

    இந்த நிலையில் 10 நிமிடம் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் நிலையங்களில் ரெயில் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய நிலையங்கள் தவிர, கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம். இது குறித்து ரெயில்வே தலைமை எந்திரவியல் பொறியாளரே முடிவு எடுக்க வேண்டும். அதுபோல ஒவ்வொரு ரெயிலுக்கும் அடையாளம் காணப்பட்ட ரெயில் நிலைய இடங்களில் விவரங்களை தொகுத்து 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    குறிப்பிட்ட நிலையங்களில் ரெயில்கள் நிற்கும்போது, ரெயில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில், 'சுத்தமான ரெயில் நிலையம்' திட்டத்தை இந்திய ரெயில்வே கடந்த 2003-ல் அறிமுகம் செய்தது. படிப்படியாக பல ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. கழிப்பறையை முழுமையாக சுத்தம் செய்வது கிருமி நாசினி தெளிப்பது, குப்பையை அகற்றுவது உள்பட எந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு செயல்முறைகள் இதில் அடங்கும்.

    • ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள்.
    • ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களும் ரீல்ஸ்களுக்கான இடங்களாக மாறி இருக்கிறது.

    குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    விதிகளின்படி ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுப்பது அனுமதிக்கப்படுவதில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால், சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.

    எனவே, ரெயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள். அவ்வாறு ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும். இதை தீவிரமாக கடைபிடிக்க ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்க தண்டவாளப் பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ரூ.1,100 கோடி செலவில் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
    • கர்னிமாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

    பிகானேர்:

    இந்தியா முழுவதும் 103 ரெயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகளுடன் ரூ.1,100 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.

    இந்த ரெயில் நிலையங்களில் நுழைவு வாசல் மற்றும் வெளியேறும் வாசல் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. வாகனம் நிறுத்தும் வசதி, மின் தூக்கி, பயணிகள் காத்திருக்கும் பகுதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், போளூர், குளித்துறை ஆகிய 9 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் சீரமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த 103 ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதற்காக இன்று காலை அவர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள தார் பாலைவனம் மண்டலத்தில் இருக்கும் பிகானேர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    முதலில் அவர் பாகிஸ்தான் எல்லைக்கு மிக மிக அருகில் உள்ள நல் விமானப்படை தளத்துக்கு சென்றார். இந்த விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அங்கு அவர் விமானப்படை வீரர்களை சந்தித்து பேசினார்.


    இதையடுத்து 10.30 மணிக்கு கர்னிமாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பிறகு பிகானேர்-மும்பை இடையிலான ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    அதன்பிறகு நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டுள்ள 103 ரெயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.


    இதையடுத்து பிகானேரில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.26 ஆயிரம் கோடி புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு அந்த மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 



    • தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது. இதனால் நாள்தோறும் மின்சார ரெயில்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இது ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. புதிய சார்ஜிங் மையம் பொறுத்தவரையில் சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'பயணிகள் வசதிக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரெயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது' என்றனர்.

    • அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    சேலம்:

    அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 60 ெரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் சந்திப்பு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    சின்னசேலம்

    மேலும் சேலம் கோட்–டத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, போத்தனூர், ஊட்டி, குன்னூர், கரூர், ெபாம்மிடி, சின்னசேலம், திருப்பத்தூர், சாமல்பட்டி, மொரப்பூர் ஆகிய 14 ரெயில் நிலையங்களும் சேலம் சந்திப்புடன் இணைந்து மேம்படுத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திருச்சி:

    நாடு முழுவதும் குறைவான கட்டணத்துடன் நிறைவான பயணத்தை அளிப்பதில் ரெயிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அனைத்து தரப்பினருக்கும் ரெயில் சேவை வசதியாக உள்ளது.

    ரெயில் பயணிகளின் வசதிக்காக முக்கிய ரெயில் நிலைய சந்திப்புகள் மற்றும் ரெயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையின் பேரில் இங்கு உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

    குறிப்பாக இந்த உணவகங்களில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை, சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை, தேங்காய் சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த உணவுப் பொருட்களின் விலை கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்பட இருக்கிறது. விலைவாசி உயர்வு, சமையல் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இவற்றின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வழக்கமாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ. 15-க்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் விலை உயராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவை நீங்கலாக மீதமுள்ள உணவுப் பொருட்களின் விலையை ரெயில்வே நிர்வாகம் கடந்த ஜனவரி 16-ந்தேதி உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி சட்னி சாம்பாருடன் 2 இட்லிகள் ரூ.13-ல் இருந்து ரூ.20 ஆகவும், மசால் தோசை ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், மெதுவடை, மசால் வடை, ரவை உப்புமா, ஆனியன் தோசை, ஊத்தப்பம், வெங்காய பக்கோடா ஆகியவற்றின் விலை ரூ.17-ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

    மேலும் வெஜிடபிள் சாண்ட்விச் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தக்காளி சாதம் ரூ.14-ல் இருந்து ரூ.20 ஆகவும், பொங்கல் ரூ.16-ல் இருந்து ரூ.25 ஆகவும், புளிசாதம் ரூ.21-ல் இருந்து ரூ.35 ஆகவும், தயிர் சாதம் ரூ.18-ல் இருந்து ரூ.30 ஆகவும், எலுமிச்சை சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.30 ஆகவும், தேங்காய் சாதம் ரூ.19-ல் இருந்து ரூ.25 ஆகவும், சாம்பார் சாதம் ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும் சைவ குருமாவுடன் இரண்டு பரோட்டாக்கள் அல்லது நான்கு சப்பாத்திகள் ரூ.29-ல் இருந்து ரூ.45 ஆகவும் விலை உயர்கிறது.

    இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரெயில் நிலைய கேட்டரிங் ஸ்டால்களில் உணவு வகைகளின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆனால் விலைப்பட்டியல் இதுவரை தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து ரெயில் நிலையங்களுக்கு வந்து சேரவில்லை. எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல் வரும். வந்தவுடன் புதிய விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்றார்.

    நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அன்றாடம் ரெயில் சேவையினை அதிகம் பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்த உணவுப்பொருட்களின் விலை உயர்வு சற்றே சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    • தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    • பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் நெரிசல் குறையும்.

    சென்னை:

    சென்னை கோட்டத்தில் மொத்தம் 160 ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இதில் சில ரெயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக ரெயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் உள்ளன.

    ஆனால் இவற்றில் சில ரெயில் நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரெயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டது.

    ஏற்கனவே எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல், கடற்கரை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, பூங்கா, ஆவடி, பெருமாள்பூர், கோட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், பேசின்பிரிட்ஜ், திருவள்ளூர், வில்லிவாக்கம், கோடம்பாக்கம், பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய 19 ரெயில் நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் மற்றும் யு.டி.எஸ். செயலி ஆகியவை பயணிகள் டிக்கெட் எடுப்பதை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் நெரிசல் குறையும்.

    முக்கியமான ரெயில் நிலையங்களில் நடைமேடையின் ஒரு பக்கத்தில் டிக்கெட் கவுண்டர்கள் இருக்கும் நிலையில் நடைமேடையின் மறுபக்கத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் அமைக்கப்படும்.

    மேலும் இது சிக்கன நடவடிக்கையாகவும் உள்ளது. எழும்பூர், கடற்கரை, மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களால் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நிலையான அல்லது நடமாடும் உணவகம் மூலம் பயணிகளுக்கு கேட்டரிங் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • கேட்டரிங் சேவைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அடிக்கடி மற்றும் அறிவிக்கப்படாத ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    புதுடெல்லியில் நேற்று ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்களை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய ரெயில்வேயில் தினமும் சுமார் 1.8 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். அவர்களுக்கு ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் போதிய உணவு வசதிகளை வழங்குவதற்கும், அவை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே கேட்டரிங் சேவைகள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை மேற்கொள்வது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளில் கேட்டரிங் வணிகத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களும் தொடங்கப்பட்டுள்ளது.

    நிலையான அல்லது நடமாடும் உணவகம் மூலம் பயணிகளுக்கு கேட்டரிங் சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. 473 ஜோடி ரெயில்களில் பேன்ட்ரி கார்கள் அல்லது சிறிய பேண்ட்ரிகள் மற்றும் 706 ஜோடி ரெயில்களில் ரெயில்-பக்க விற்பனை வசதியுடன் உள்ளது.

    இந்திய ரெயில்வேயின் ஜன் ஆஹார்ஸ் விற்பனை நிலையங்கள், உணவு பிளாசாக்கள் மற்றும் சிற்றுண்டி அறைகள் உள்பட 9,342 சிறிய மற்றும் 582 முக்கிய நிலையான அலகுகள் உள்ளன.

    ரெயில்களின் கேட்டரிங் சேவைகளை பிரித்து, உணவு தயாரித்தல் மற்றும் உணவு விநியோகம் ஆகியவற்றுக்கு இடையே முதன்மையான வேறுபாட்டை உருவாக்குவதன் மூலம் ரெயில் பயணிகளுக்கு தரமான உணவை வழங்கும் நோக்கத்துடன், இந்திய ரயில்வே ஒரு கேட்டரிங் கொள்கையைக் கொண்டுள்ளது.

    கேட்டரிங் சேவைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அடிக்கடி மற்றும் அறிவிக்கப்படாத ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கம்லாபதி, குஜராத்தில் காந்திநகர் மற்றும் கர்நாடகாவில் சர் எம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய மூன்று ரெயில் நிலையங்கள் இதுவரை நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த மூன்று நிலையங்களில் இருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், இந்திய ரெயில்வேயில் அமிர்த் பாரத் நிலைய திட்டம் ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் நீண்ட கால அணுகுமுறையுடன் தொடர்ச்சியான அடிப்படையில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,275 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள சில ரெயில் நிறுத்தங்களில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வருகிற புதன்கிழமை முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து பாலக்காடு செல்லும் போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து நெல்லை செல்லும் போது கீழக்கடையம் ரெயில் நிலையத்திலும் வரும் புதன்கிழமை முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    வண்டி எண்: 16791/16792 நெல்லை-பாலக்காடு-நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக் கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை என 7 ரெயில் நிலை யங்களில் நின்று சென்றது. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் அந்த ரெயில் தனது இயக்கத்தை தொடங்கிய போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி தவிர அனைத்து ரெயில் நிறுத்தங்களும், கல்லிடைக்குறிச்சி நிறுத்தமும் நீக்கப்பட்டது.

    இந்நிலையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று தற்போது கூடுதல் நிறுத்தங்கள் அளிக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், 2 ஆண்டுக்கும் மேலான தொடர் கோரிக் கையை ஏற்று கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாவூர்சத்திரம் மற்றும் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வர்த்தகம் சார்ந்து கேரளாவிற்கு நிறைய பேர் பயணிப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    • சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது
    • கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி :

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ரெயில் நிலையம் மாவட்ட மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரியால் இயங்கும் சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது. இந்த வசதி ஊனமுற்றோர், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய் பட்டவர் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உதவியாக இருந்து வந்தது. இது மட்டுமில்லாமல் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எடுத்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    பின்னர் ரெயில்வே துறை இந்த சேவையை கொரோனா காலகட்டத்தில் திடீரென நிறுத்தி விட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட மக்கள் சார்பில் நான் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து வந்தேன்.

    இந்த கோரிக்கையின் பயனாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிக்காக ஒப்பந்தபுள்ளி கோரும் பணிகள் நடந்து வருவதா கவும் வெகு விரைவில் இந்த வசதி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வரும் என்றும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடிதத்தில் தெரி வித்துள்ளார். இந்த வசதி வந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு இந்த வசதி வரும் போது அதன் கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள் உள்ளது.
    • நடைமேடைகள் நீளத்தை அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும்.

    தென்காசி:

    தென்காசியில் 540 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள், 507 மீட்டர் நீளம் கொண்ட ஒரு நடைமேடை, கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் 405 மீட்டர் நீளம் கொண்ட ஒற்றை நடைமேடை, பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீட்டர் நீளம் கொண்ட 2 நடை மேடைகளும், அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகளும் உள்ளது.

    நெல்லையில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 சரக்கு லைன், ஒரு வி.ஐ.பி. லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் நிறுத்துவதற்கு 540 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடை தேவை. தென்காசி மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் மட்டுமே தென்காசி - நெல்லை ரெயில் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. மற்ற நிலையங்களில் இல்லை.

    இந்த மொத்த ரெயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும்.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

    தற்போது நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில், அதிகபட்சமாக நெல்லை - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 பெட்டிகளுடனும், செங்கோட்டை - தாம்பரம் ரெயில் 17 பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம், நெல்லை - தென்காசி வழித்தடங்களில் உள்ள முக்கிய ரெயில்வே கிராசிங் நிலையங்களான சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540 மீட்டர் வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். எனவே நடைமேடைகளை கூடுதலாக 135 மீட்டர் நீளம் அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும். ஒரு நடைமேடையை நீட்டிப்பதற்கு தோராயமாக ரூ.15 லட்சம் வரை செலவாகும். எனவே தெற்கு ரெயில்வே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.

    ×