என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்ட் ட்ரம்ப்"

    • என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
    • அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்

    அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    அதன்படி, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரியை 25%-லிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக டிரம்ப் கூறிவந்தவாறே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

    மேலும் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமானங்கள் உட்பட சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும், வர்த்தகத் தடைகளை நீக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

    "பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.

    அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு
    • அமெரிக்கா 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை

    அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.

    பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு என்று அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை, இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் காணவில்லை என்று வாஷிங்டன் (அமெரிக்கா) கூறியுள்ளது. 

    • காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
    • உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைய சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.

    இதன்மூலம் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாமிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேருகின்றன.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    • நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் வரியை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
    • கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் வரிகள் விதிக்கப்பட்டன.

    அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரி தொடர்பான வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது. நேற்று நீதிமன்றம் மூன்று வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்த போதிலும், டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான முக்கிய வழக்கில் முடிவெடுக்கவில்லை.

    மேலும் உச்ச நீதிமன்றம் தற்போது நான்கு வார கால விடுமுறைக்கு செல்வதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அல்லது தீர்ப்பு பிப்ரவரி 20 வரை வெளிவர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற விசாரணையின்போது 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி நாடு தழுவிய அளவில் வரிகளை விதிப்பது அதிபரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்பிற்கு எதிராக அமைந்தால், அவர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு அவர் சந்திக்கும் மிகப்பெரிய சட்டப்பூர்வ தோல்வியாக இது இருக்கும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் (சுமார் ₹10 லட்சம் கோடிக்கும் மேல்) வரியை இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க அரசு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தும் திட்டங்களை எதிர்த்தால் ஐரோப்பிய நாடுகள் மீது மேலும் வரிகளை விதிக்கும் அவரது தற்போதைய அச்சுறுத்தலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள இந்த வழக்கு, ஏப்ரல் 2-ம் தேதி டிரம்ப் அறிவித்த 'விடுதலை நாள்' (Liberation Day) வரிகள் தொடர்பானது. இது பெரும்பாலான இறக்குமதிகள் மீது 10 முதல் 50 சதவீதம் வரை வரி விதித்தது. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் இந்த வரிகள் விதிக்கப்பட்டன.  

    • போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஈரானியப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு தரப்பில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 135 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்காத 9 குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஈரான் அரசு கடந்த பல நாட்களாக இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபடுவோர் 'கடவுளின் எதிரிகள்' எனக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம் என ஈரானிய அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.

    இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். மேலும், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க ராணுவத் தலையீடு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், 

    ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்! கொலைகாரர்கள் மற்றும் சித்திரவதை செய்பவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள்.

    போராட்டக்காரர்களின் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • 56 இன்ச் மார்பு இருந்தால், துணிச்சலாகச் செயல்பட்டு, பயங்கரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்
    • டிரம்பால் முடிந்தால் உங்களாலும் (மோடி) முடியும்

    டிரம்பால் மற்றொரு நாட்டின் அதிபரையே பிடித்து வர முடியும்போது, பிரதமர் மோடியால் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளிகளை கொண்டுவர முடியாது என ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். 

    மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, 

    "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து, அவரது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றதாக கேள்விப்பட்டோம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைதுசெய்ய முடிந்தால், நீங்களும் (பிரதமர் மோடி) பாகிஸ்தானுக்கு சென்று 26/11 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்.

    மோடி அவர்களே, நாங்கள் உங்களிடம் கேட்கிறோம், மசூத் அசார் ஆகட்டும் அல்லது லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த கொடூரமான ஒரு அரக்கனாக இருக்கட்டும், 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வர ஏன் இந்திய ராணுவத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது? டிரம்பால் முடிந்தால் உங்களாலும் முடியும். டிரம்புக்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல நீங்கள். அப்கி பார் டிரம்ப் சர்க்கார் " எனப் பேசியுள்ளார்.

     

    • மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
    • மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே

    அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

    2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

    குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.

    நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

    சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×