என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர்"

    • ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது.
    • திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி 21-ந் தேதி திருச்சி மாநாட்டில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். யாரை சேர்ப்பது, யாருடன் செல்வது என்ற எந்தவித குழப்பமும் இன்றி நாங்கள் தனியாக பயணிக்க உள்ளோம்.

    பொங்கலுக்கு ரூ.6800 கோடி இனாம் கொடுத்து உள்ளார்கள். இது ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட காசுதான். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நடுரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களும், துப்புரவு பணியாளர்கள் என எல்லோரும் வீதியில் நிற்கிறார்கள். ஆனால் நல்லாட்சி நடப்பதாக கூறுகிறார்கள்.

    போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் பேருந்துகளில் இலவச பயணம் எதற்கு? மத்திய- மாநில அரசுகள் கடன் வாங்கி அரசை 3 நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் இருக் கும் அரசு இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    எங்கள் கொள்கைக்கு யாரும் போட்டி இல்லை. திராவிடம் என்பது எந்த மொழிச் சொல் என்று யாருக்கும் தெரியாது. மாநில உரிமையில் இருந்து கல்வி பறிக்கப்பட்டது தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான்.

    இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். தமிழ் தேசியம் எழுச்சி பெற்றுள்ளது. குரு மூர்த்திக்கு பிறந்தவன் என்று ஒருவன் என்னைப் பற்றி குறிப்பிடுகிறான். இதுதான் பெரியார் சொல்லி கொடுத்த பண்பாடா? பெரியாரை சீமான் எதிர்த்து பேசி விட்டார். அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தேர்தல் காலத்தில் ஒருத்தனாவது பேச முடியுமா? பெரியாரை நாங்கள் போற்றுகிறார். எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று உங்களால் கேட்க முடியுமா? எந்த தலைவனுக்கு இங்கு ஓட்டு உள்ளது.

    எனக்கு விழுந்த ஓட்டு எனது கொள்கைக்காக விழுந்த ஓட்டாகும். பணம் கொடுக்காமல் எனக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது.

    பெரியாரை நாங்கள் பேசும் முன்னே திருமாவளவன் கடுமையாக பேசி உள்ளார். அண்ணா, கலைஞருமே பெரியாரைப் பற்றி பேசி உள்ளார்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோர் எனது ரோல் மாடல் என்று விஜய் கூறி இருப்பது பற்றி கேட்கிறீர்கள். அது தம்பியின் விருப்பம். அவர்களை ஏற்றுக்கொண்டது எப்படி? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நான் எல்லா இடத்திலும் உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து பேசுகிறேன். ஆனால் விஜய் உங்களையெல்லாம் சந்திக்கவே மாட்டார்.

    ஆனால் அவரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். இதுவும் ஒரு கொடுமைதானே.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
    • எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. நிறுவன தலைவரான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தார். அவரை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர்.

    அப்போது வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. இந்த கேக்கையும் எடப்பாடி பழனிசாமி வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன. இவற்றையும் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், பாலகங்கா, ஆதிராஜாராம், புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ்.மலர் மன்னன், எம்.ஜி.சக்திவேல்,

    அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் டி.சி. கோவிந்தசாமி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் காரப்பாக்கம் லியோ சுந்தரம், தேனாம்பேட்டை முன்னாள் கவுன்சிலர் சின்னையன், கழக மாணவர் அணி துணை செயலாளர் வக்கீல் பழனி, வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், வி.எஸ்.வேல்ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் சைதை சொ.கடும்பாடி, சைதை சி.எம்.சாமி, எம்.என்.இளங்கோ, ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.
    • பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

    எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.

    * பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பில்லை.

    * பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.

    * யாருடன் கூட்டணி என்பது பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு குறித்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

    * எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக...
    • பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில்...

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக மக்களின் நெஞ்சங்களில்

    பொன்மனச் செம்மலாக,

    ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,

    பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என கூறியுள்ளார். 



    • எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
    • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

    தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,

    மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்

    என்றும் எங்கள் வாத்தியார் MGR

    அவர்களின் பிறந்தநாள்!

    தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க,

    அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம்,

    திரை ஆளுமையாக தத்துவங்களையும்,

    முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும்

    அள்ளித் தந்த பொன்மனச் செம்மல்,

    இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில்,

    புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!

    வாழ்க புரட்சித்தலைவர் நாமம்!

    வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறப்பட்டுள்ளது. 



    • எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்ற உள்ளார்.
    • ஆங்காங்கே எம்.ஜி.ஆர். படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 17-ந்தேதி அன்று எம்.ஜி.ஆர். உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்.ஜி.ஆர். படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • அண்ணா படத்திற்கு செங்கோட்டையன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்குமண்டல அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக அவர் கோபியில் இருந்து கார் மூலமாக சிறுமுகை, ஆலாங்கொம்பு வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். அவருக்கு சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதனை தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆலாங்கொம்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.

    இந்த சிலை அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டது என்பதால் அ.தி.மு.க.வினர் செங்கோட்டையன் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்கூட்டியே சிலைக்கு பூட்டு போட்டு சென்றனர்.

    இதையடுத்து செங்கோட்டையன் மேட்டுப்பாளையம் வந்தார். மேட்டுப்பாளையம் வந்ததும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கட்சியினருடன் சென்றார்.

    ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வாங்காததால், அண்ணா சிலையும் பூட்டப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு செங்கோட்டையன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.

    • எம்ஜிஆர் 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார்.
    • பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள். கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தீய சக்தி தி.மு.க-வினருக்கு புரட்சித் தலைவர் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் திமுக-வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது.

    புரட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த போது, 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.

    1981-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

    மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த புரட்சித் தலைவரின் படமும் நீக்கப்பட்டுள்ளதாம். தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் பெயரை வெட்கம் இல்லாமல் 2

    கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் அவரது மகன் ஸ்டாலின், புரட்சித் தலைவர் பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, ஸ்டாலினுடைய மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது.

    'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம்' என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து புரட்சித் தலைவரது படத்தை நீக்கிவிட்டால், புரட்சித் தலைவரின் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

    வாழ்நாள் எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து, தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்ற புரட்சித் தலைவருக்கு, மக்களே கோவில் கட்டி வழிபடுகிறார்கள்.

    அரசியலைப் பயன்படுத்தி, ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் வஞ்சக நெஞ்சமும், நரித்தனமும் ஏற்கத்தக்கதல்ல. புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம்.

    இதுபோன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் புரட்சித் தலைவர் படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திரு. கருணாநிதியின் மொத்த குடும்பத்தையே வாழவைத்த இதய தெய்வம் புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைக்கும் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்றளவும் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம்.
    • அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் வாழ்நாள் வழிகாட்டி...

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழக வரலாற்றின்

    மாபெரும் சகாப்தம்!

    ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்றளவும் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம்.

    அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் வாழ்நாள் வழிகாட்டி...

    கறுப்பு-வெள்ளை-சிவப்பு மூவர்ணத்தையும் ,

    இரட்டை இலையையும் தமிழகத்திற்கான பாதுகாப்பு அரணாய் விட்டு சென்று,

    அ.தி.மு.க. எனும் எஃகு கோட்டையை உருவாக்கிய இதய தெய்வம், #எங்கள்_வாத்தியார்_MGR அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்.

    நாற்காலிக்காக அரசியலுக்கு வராமல், நலிந்தவர்களின் நல்வாழ்விற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் நம் புரட்சித்தலைவர் அவர்கள்.

    புரட்சித்தலைவரின் உடன்பிறப்புகளுக்கு வருகின்ற தேர்தல் களம், நம் தலைவர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் வலிமையை பறைசாற்றும் தளம்.

    துரோகங்களை வீழ்த்தி, எதிரிகளை முறியடித்து, மீண்டும் ஏழை எளியோரின் ஆட்சியை,

    இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழிவந்த , கழகத்தின் மூன்றாம் அத்தியாயம் ,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரச்செய்ய புரட்சித் தலைவரின் நினைவு நாளில் உறுதியேற்போம்! என்று கூறப்பட்டுள்ளது. 



    • த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
    • விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.

    அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.

    இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

    இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.

    இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்ற செங்கோட்டையன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் உடன் மரியாதை செலுத்தினர்.

    • சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

    சென்னை:

    மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.

    புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

    சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,

    அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.

    இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    ×