என் மலர்tooltip icon

    வழிபாடு

    • வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.
    • சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலையில் இருப்பதாலும், மலையை சுற்றி வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.

    அதன்படி தினந்தோறும் மாலை 4 மணிக்கு மேல் சாமியை தரிசிக்க மலையேற அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கு நடை அடைக்கப்படும் வரை மட்டுமே பக்தர்கள் சிவனை தரிசனம் செய்ய முடியும். இரவு நேரங்களில் சுவாமியை தரிசிக்க முடியாது.

    அதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் விலக்காக உள்ளது. அதுதான் மகா சிவராத்திரி அன்று மட்டும் விடிய, விடிய பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று இரவு விடிய, விடிய கோவிலில் பூஜைகள் நடக்கிறது. மொத்தம் 4 கால பூஜைகள் நடக்கின்றன. கடந்த மகாசிவராத்திரி அன்று 12 ஆயிரம் பக்தர்கள் இரவில் மலையேறி தர்மலிங்கேஸ்வரரை தரிசனம் செய்துள்ளனர்.

    மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி

    மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.; ஒரு பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள். சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, 'மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     

    வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, "ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்" என்றாள். ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார்.

    மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், அம்பிகையால் வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை 'மகா சிவராத்திரி' என்று கொண்டாடுகிறோம்.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'தங்களில் யார் பெரியவர்?' என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். 'ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்' என்று சொல்லப்பட்டது.

    இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டியபடி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட, ஒரு மகா சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது. அந்த அளவுக்கு மகாசிவராத்திரி விரதம், மகத்துவம் வாய்ந்தது.

    விரதம் இருப்பது எப்படி?

    சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று, மூலவர் சிவலிங்கத்தை வணங்கிவர வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கான பொருட்களுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    அங்கு நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது.

    வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தையில் அமைதியுடன், சிவபுராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

    பற்றற்று இருப்பதுடன், பேராசைகளைக் கைவிட்டு, பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்மையை அளிக்கும்.

    வீட்டில் மகா சிவராத்திரி பூஜை செய்யும் போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து, இறைவனை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், ஆலயத்தை வலம் வந்து, சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, காலையில் செய்யும் காரியங்களையும், உச்சிகாலத்தில் முடிக்க வேண்டிய காரியங்களையும் அப்போதே முடிக்க வேண்டும். பின்னர் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்து, விரதம் இருப்பவர்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டும், அந்த இரவை கழிக்கலாம். தொடர்ச்சியாக 24 வருடங்களுக்கு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி கிடைக்கப்பெறும் என்கிறார்கள்.

    நான்கு கால பூஜைகள்

    மகாசிவராத்திரி நாளில், இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும், சிவபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் போன்றவை செய்யப்படும்.

    முதல் காலம்:மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, இரண்டாம் காலம்:இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, மூன்றாம் காலம்:நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, நான்காம் காலம்:அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இந்த நான்கு கால பூஜைகளும் சிவபெருமானின் அருளைப் பெறவும், பாவங்கள் நீங்கவும், முக்தி அடையவும் செய்யப்படுகின்றன.

    • சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-16 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி நள்ளிரவு 1 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : கேட்டை இரவு 7.14 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : சித்த/ அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் வளையல் விற்றருளிய காட்சி. இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமாள் புறப்பாடு. கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    திருவிடை மருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பாலாபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-தாமதம்

    கடகம்-வாழ்வு

    சிம்மம்-பணிவு

    கன்னி-நலம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பரிசு

    கும்பம்-தனம்

    மீனம்-இன்பம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    ரிஷபம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    இடம், வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் அமையும்.

    கடகம்

    எதிரிகள் விலகும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    தைரியத்தோடும், தன்னம்பிகையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    துலாம்

    பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர்.

    விருச்சிகம்

    தேடிய வேலை திடீரென கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். பயணங்களால் பலன் உண்டு.

    தனுசு

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    மகரம்

    விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

    கும்பம்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். உதவி செய்வதாய் சொன்னவர்கள் ஒத்துழைப்பு தருவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

    • கடகம் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும் வாரம்.
    • கன்னி வீண் விரயங்களை தவிர்க்க வேண்டிய வாரம்.

    மேஷம்

    நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 5-ல் சூரியன், புதன், கேது சேர்க்கை உள்ளது. இதனால் சுக சவுகரியங்கள் அதிகரிக்கும். வாழ்நாள் எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும். எந்தச் செயலையும் திறம்படச் செய்யும் செயல்திறன் கூடும். உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களை நோக்கி பயணிப்பீர்கள்.

    விதவிதமான பொன், பொருள், ஆபரணங்கள் கிடைக்கும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். புகழ், அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் தேடி வரும். சிலருக்குப் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.

    கண் அறுவை சிகிச்சை வெற்றியாகும். கணவன்- மனைவி நெருக்கம் அதிகரிக்கும். 1.9.2025 அன்று இரவு 7.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் தொலை தூரப் பயணங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்சினையை வெளி நபர்களுடன் பகிரக் கூடாது. பிரதோஷ காலங்களில் நந்தி பகவானுக்கு பச்சரிசி மாவினால் அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் குறையத்து வங்கும்.

    ரிஷபம்

    எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு பாக்கிய அதிபதி சனியின் பார்வை உள்ளது. 12 ராசிகளில் ரிஷப ராசிக்கு காலமும், நேரமும் மிகச் சாதகமாக உள்ளது. சிறு சிறு மனசஞ்சலங்கள் இருந்தாலும் இலக்கை அடைவீர்கள். பல வழிகளிலும் பண வரவு உண்டாகும். லாபத்தால் வசதிகள் பெருகும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

    சொந்த தொழில் செய்யும் அமைப்பு உருவாகும். சகோதர, சகோதரி ஒற்றுமை பலப்படும். மனச் சங்கடம் மறையும். பூமி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பருவ மழை பொழியும் காலம் என்பதால் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

    1.9.2025 அன்று இரவு 7.55 முதல் 4.9.2025 அன்று மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் சிலரின் உடல் நலிவுறும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதால் ஆனந்தம் கூடும்.

    மிதுனம்

    மனதில் அமைதி நிலவும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறது. வைராக்கியம், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு சாதனை புரிவீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

    புதிய நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். பெண்களின் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தரும். சுற்றத்தார் மூலமாக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை அணிகலன்கள் கிடைக்கும். சுப விசேஷங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.

    4.9.2025 அன்று மாலை 5.21 முதல் 6.9.2025 அன்று பகல் 11.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் போட்டி பந்தயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சாமர்த்தியமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும். பிரதோஷ நாட்களில் நந்திகேஸ்வரருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட வியாபாரம் விருத்தியாகும்.

    கடகம்

    அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும் வாரம். ராசியில் தனித்த சுக்கிரன் உள்ளார். அழகு ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும். குடும்ப உறவுகள் வருகையால் சந்தோஷமும், செலவும் பெருகும். தாய், தந்தை மற்றும் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.

    கூட்டாளிகள் மற்றும் உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். நண்பர்களால் திடீர் லாபங்கள் உண்டாகும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடும். வராக்கடன்கள் வசூலாகும். தடைபட்ட காதல் திருமணம் சுபமாக நடந்தேறும். துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

    பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் சுபசெலவுகள் நடக்கும் 6.9.2025 அன்று பகல் 11.21 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலருக்கு அதிக கண்திருஷ்டியால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மன சஞ்சலம் அகலும்.

    சிம்மம்

    சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசியில் சூரியன், புதன், கேது சேர்க்கை உள்ளது. சூரியன் கேது சேர்க்கை கிரகண தோஷ அமைப்பாகும். 7.9.2025 அன்று சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் கிரகணதோஷ பாதிப்பு உண்டு. செலவுகளும், விரயங்களும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கும். வந்த பணம் அடுத்த நிமிடமே செலவாகலாம்.

    இந்த காலகட்டத்தில் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது ஆகியவைகளை தவிர்க்க எந்த பாதிப்பும் ஏற்படாது. வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் அரசியல்வாதிகள் மவுனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆளுமை மேலோங்கும். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.

    கிரகணத்தன்று பகல் பொழுதில் அரை வயிறு சாப்பிட்டு சிவ வழிபாடு செய்வதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபட்டால் உடல் நலம் கூடும். நீண்டகால நோய் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

    கன்னி

    வீண் விரயங்களை தவிர்க்க வேண்டிய வாரம். ராசிக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் உள்ளது. ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் விரைய அதிபதி சூரியனுடன் இணைந்துள்ளார். பணிச்சுமை அதிகரிக்கும். தாய்மாமாவிற்கும், தம்பிக்கும் ஏற்பட்ட மோதலில் பழிச் சொல் உங்கள் பக்கம் திரும்பும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் குணமடைந்து இயல்பு நிலை திரும்புவார்கள்.

    வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு உண்டு. பதவி உயர்வின் மூலம் பல நல்ல பயன்களை அடைவீர்கள். விரும்பிய கடன் தொகை கிடைக்கும் புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். வீடு, வாகனம் தொடர்பான கடன் முயற்சிகள் சாதகமாகும்.

    வீட்டில் சுபமங்கள நிகழ்வுகள் விமரிசையாக நடக்கும். அழுகை உனது வாழ்க்கை அல்ல. துணிச்சலே உனது சக்தி என்று உணர்ந்து செயல்பட்டால் அச்சம் சாம்பலாகும். பிரதோஷ நாட்களில் நந்திகேஸ்வரருக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபட்டால் ஆன்ம பலம் பெருகும். துன்பங்கள் நீங்கி நல்ல ஆற்றல்கள் பெருகும்.

    துலாம்

    தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உயரிய கவுரவத்தை அடையும் நேரம். நடக்குமா என்ற நிலையில் இருந்த காரியத்தை மன உறுதியுடன் தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.

    சிலருக்குப் புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். புதிய தொழில் நண்பர்கள் சேர்க்கை, தொழில் லாபம் ஆகியவை ஏற்படும். அரசியல் அரசு சார்ந்த தொழில், அரசுப் பணியாளர்களுக்கு பண மழை பொழியும். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள். புத்திர பாக்கியம். வீடு வாகன யோகம் என சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்து கொள்வார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. பிரதோஷ நாட்களில் சந்தனம் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மனஅமைதி கூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.

    விருச்சிகம்

    லாபகரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் விலகும். மலை போல வந்த துயரம் பனி போல் விலகும். தொழில், வியாபார நெருக்கடி நிலை மாறும். பூர்வீகச் சொத்தைப் பிரிப்பதில் தாய் மற்றும் தந்தை சகோதரருக்கு சாதகமாக செயல்படுவார்கள். செல்வச் செழிப்பு கூடும். எதிர் கால வாழ்வா தாரத்திற்குத் தேவையான சேமிப்பை உயர்த்த ஏற்ற நேரம்.

    அரசின் ஒப்பந்ததாரர்கள், குத்தகை தாரர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். வீடு, மனையில் புதிய முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பாளர்களின் நட்பு கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வரும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

    பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் நிவர்த்தியாகி திருமண வாய்ப்பு தேடி வரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும். பிரதோஷ நாட்களில் நந்திய பகவானுக்கு பஞ்சா மிர்தம் அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவிதமான செல்வமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

    தனுசு

    பாக்கிய பலன்கள் அதிகரிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. 7.9.2025 அன்று சந்திர கிரகணம் ஏற்படும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.

    கிரக நிலைகள் சற்று சாதகமற்று இருந்தாலும் ஒரு கதவை அடைத்தாலும் மறுகதவு திறந்து விடுபவர்கள் தான் நவகிரகங்கள். எனவே நம்பிக்கை மிக முக்கியம். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். சுய ஜாதக ரீதியாக கடுமையான பித்ரு, மாத்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பரிகார சாந்தி பூஜைகள் செய்தால் ஜாதக ரீதியான பாதிப்புகள் அகலும்.

    தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். திருமணம் குழந்தை பேறு தொழில் உத்தியோகரீதியான இடர்கள் அகலும். பஞ்ச கவ்யம் எனும் பசுஞ்சாணம், கோமியம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து அபிஷேக ஆராதனை செய்து நந்தி. சிவனை பூஜித்தால் தடைப்பட்ட அனைத்து இன்பங்களும் தேடி வரும்.

    மகரம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். அஷ்டம ஸ்தானத்தில் கிரகணச் சேர்க்கை ஏற்படுகிறது. பிறர் பிரச்சினைக்காக வீண் பழிகளைச் சுமக்க வேண்டிய நேரம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செய்வதை தவிர்க்கவும். சேமிப்பு கரையும். ஆரோக்கிய தொல்லை ஏற்படும். உரிய மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.

    கடின வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நிதானமாக பேசினால் நன்மை உண்டு. பணமுடைய மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    சிலருக்கு அதிக செலவு காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு மறுமணத்திற்கு வரன் அமையும். பிரதோஷ நாட்களில் கரும்புச்சாறு அபிஷேகம் செய்து நந்தி பகவானை வழிபட்டால் மனதிற்கு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் அதிகமாகும்.

    கும்பம்

    ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசியில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்பட போகிறது. இது கிரகண தோஷ அமைப்பாகும். 7.9.2025 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் தோன்றுவதால் மனதில் வெறுமை பய உணர்வு இருக்கும். அஜீரண கோளாறு உண்டாகும். அடுத்த சில நாட்களுக்கு கடன் நெருக்கடி, நோய் தாக்கம், எதிரி தொல்லைகள் கூடும்.

    கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை இருக்கும் மாணவர்கள் பாடங்களை அக்கறையுடன் கவனத்துடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். திருமண விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக நடக்கும். எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. வேலை மாற்றம் செய்யக்கூடாது.

    பெண்கள் மாங்கல்யம் மாற்றுவதை தவிர்க்கவும். மிகுதியான கோபம், பிடிவாதத்தை தவிர்த்தால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். எந்த புதிய முயற்சியாக இருந்தாலும் 15 நாட்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது. பிரதோஷ நாட்களில் வாசனைத் திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்து நந்தி பகவானை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.

    மீனம்

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு செவ்வாயின் சம சப்தம பார்வை உள்ளது. இதில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உள்ளது. தொழில் உத்தியோக ரீதியான அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு நிரந்தர பணி கிடைக்கும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பாதிகப்படலாம்.

    சிலர் பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவர். சிலர் மனதிற்கு பிடிக்காத வேலையை நிராகரித்து புதிய பணிக்கு முயற்சி செய்யலாம். கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள்.சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவார்கள். சிலருக்கு புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும்.

    உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக் கசப்பு உருவாகும். பிரதோஷ நாட்களில் சுத்தமான நல்லெண்ணெயில் நந்திக்கும் சிவனுக்கும் எண்ணெய் காப்பு செய்து வழிபட சுய ஜாதகரீதியான அனைத்து விதமான பாதிப்புகளும் அகலும்.

    • மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
    • மறுநாள் 8-ந்தேதி வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வருகிற 7-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதனால் அன்றைய தினம் திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதனால் அன்றைய தினம் கட்டண தரிசனம், முதியோர் தரிசனம், பொது தரிசனம் ஆகியவை மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் 8-ந்தேதி வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது

    ரிஷபம்

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    கடகம்

    முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும்.

    சிம்மம்

    திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடி வரும். நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்வர். சுப காரிய பேச்சு முடிவாகும்.

    கன்னி

    குறைகள் அகலும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    துலாம்

    திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே வெளியில் நடைபெறும். வரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

    விருச்சிகம்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும்.

    தனுசு

    தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

    மகரம்

    வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். நண்பர்கள் ஒளிவுமறைவின்றி பழகுவார்கள்.

    கும்பம்

    பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாள். கூட்டுத் தொழில் லாபம் தரும். வருமானம் உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும்.

    மீனம்

    தனவரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் சந்தோஷம் தரும்.

    • உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
    • விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

    தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

    'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

    இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.

    இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.



    விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.

    ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.

    உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.

    • ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-14 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி இரவு 9.37 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : விசாகம் பிற்பகல் 2.34 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் உலவாய்க் கோட்டையருளிய திருவிளையாடல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வாழ்வு

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-உறுதி

    கடகம்-திடம்

    சிம்மம்-செலவு

    கன்னி-பயணம்

    துலாம்- ஆதாயம்

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- ஜெபம்

    மகரம்-வரவு

    கும்பம்-புகழ்

    மீனம்-பெருமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.

    ரிஷபம்

    லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கடகம்

    பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகள் தீரும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

    கன்னி

    குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    துலாம்

    நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்புக் கிட்டும். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

    விருச்சிகம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்துசேர்ப்பர்.

    தனுசு

    நினைத்தது நிறைவேறும் நாள். பழுதடைந்த பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    மகரம்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

    கும்பம்

    எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மீனம்

    காலை நேரத்தில் கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். உத்தியோகத்தில் தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    • கொளஞ்சியப்பர் கோவிலில் ‘பிராது கட்டுதல்’ எனும் புதுமையான நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
    • முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்ட வேண்டும்.

    விருத்தாச்சலம் அருகே மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இங்கு மூலவராக முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் 'பிராது கட்டுதல்' எனும் புதுமையான நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. அதாவது நமது மேலதிகாரிகளுக்கு நாம் எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போல இந்த நேர்த்திக்கடன் அமைந்துள்ளது.

    அதாவது கோவில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன், என் பெயர் இது... என்பன போன்ற முழுமையான விவரங்களை எழுதி, தனது குறை, கோரிக்கைகள் என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்பு அதை கொளஞ்சியப்பர் சன்னிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுக்க வேண்டும்.

    அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்ட வேண்டும். நியாயமான கோரிக்கைகளை முருகப்பெருமான் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. நாம் எந்த ஊரில் இருந்து வருகிறோமோ அந்த இடத்திற்கும், கோவிலுக்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து, ''இந்த தேதியில் நான் வைத்த பிராது கட்டுதல் வேண்டுதல் நிறைவேறியதால், அதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்'' என கூறி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

    குழந்தை வரம் வேண்டி, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம் கிடைக்க, வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் - மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் விலக போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிராது கட்டுவதற்காக கோவிலின் பிரகாரத்தில் முனீஸ்வரன் சன்னிதி அருகே இடமும் உள்ளது.

    • மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
    • மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சந்திர கிரகணம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.

    எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (8-ந்தேதி) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-13 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி இரவு 7.39 மணி வரை பிறகு சப்தமி.

    நட்சத்திரம் : சுவாதி காலை 11.59 மணி வரை பிறகு விசாகம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

    இன்று சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீசொக்கநாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீமுருகப்பெருமான் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-சுகம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-வரவு

    கன்னி-நட்பு

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பக்தி

    மகரம்-வெற்றி

    கும்பம்-நிறைவு

    மீனம்-தெளிவு

    ×