என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

    ரிஷபம்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். பொருளாதார முன்னேற்றம் கருதி நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விற்ற சொத்துகளை வாங்கும் யோகமுண்டு.

    மிதுனம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல்நலம் சீராகும்.

    கடகம்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.

    சிம்மம்

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலன் கருதி மருத்துவ செலவுகளைச் செய்ய நேரிடும்.

    கன்னி

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள்.

    துலாம்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    விருச்சிகம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். விரயங்கள் கூடும்.

    தனுசு

    சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகள் வந்து சேரும் நாள். வரவை விடச் செலவு கூடும். சகோதர வழியில் பிரச்சனைகள் உருவாகும். பஞ்சாயத்துகள் முடிவடையாது.

    மகரம்

    பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    கும்பம்

    எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கலாம். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு. சம்பள உயர்வுடன் கூடிய புதிய உத்தியோகம் வரலாம்.

    மீனம்

    வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.

    • மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி.
    • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-31 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி பின்னிரவு 3.26 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.45 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.

    ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிந்தனை

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சிறப்பு

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பொறுமை

    கன்னி-பொறுப்பு

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- ஊக்கம்

    மகரம்-உறுதி

    கும்பம்-நிறைவு

    மீனம்-நிம்மதி

    • பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள்.
    • அண்ணன்- தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது.

    உலகம் நவீனமாக மாற, மாற அன்பும், அரவணைப்பும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் அண்ணன்-தம்பி என்றால் அப்படி ஒரு அன்யோன்யமாக இருப்பார்கள்.

    ஆனால் இப்போதெல்லாம் அண்ணன்- தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது. பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள். இத்தகைய நிலையில் பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா? அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படலாம்.

    அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக சிரார்த்தம், தர்ப்பணம் போன்ற பித்ரு கடமைகளை செய்யலாம். அண்ணன், தம்பிகளில் சிலருக்கு தர்ப்பணம் கொடுக்க வசதி, வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.

    அப்படிப்பட்டவர்கள் யாராவது ஒரு சகோதரருடன் சேர்ந்து கொண்டு அவர் கொடுக்கும் தர்ப்பண பூஜைகளில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.

    பொதுவாகவே அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் பலம். அவர்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு சக்தி அதிகம். பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக நின்று நம்மை நினைத்து வழிபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியில் அளவற்ற பலன்களை நமக்கு தந்து அருள்வார்கள்.

    • எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
    • தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு.

    உலகத்தில் எத்தனையோ வகை புற்கள் இருக்கின்றன. ஆனால், தர்ப்பை புல்லை மட்டும் வழிபாட்டிற்குப் பயன்படுத்துவது ஏன் என்று அறிதல் வேண்டும். எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியில் இருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று.

    பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பன வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

    மகாளய பட்சம் வருவதற்கு 15 நாட்கள் முன்னதாகவே ஒரு வீட்டின் பானையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள எள்ளானது பித்ரு வருவதைச் சொல்ல நிமிர்ந்து நிற்பதாக நம்பப்படுகிறது. தர்ப்பை புல் ஆகாயத்தில் தோன்றியது என்று கூறுவர். இதில் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாகக் கூறுவர்.

    தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. நிலத்தில் வாடாமல் நீரில் அழுகாமல் விதை, செடி, பதியம் இல்லாமல் சுயமாகத் தோன்றுவதே தர்ப்பை. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்ப்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர்.

    உஷ்ணம் மிகுந்த தர்ப்பை அமாவாசையிலும் கிரகண காலத்திலும் அதிக வீர்யம் உடையதால் தர்ப்பணம் இட பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் தர்ப்பண பூஜைக்கு இதை பயன்படுத்துவர்.

    • நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.
    • பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான்.

    நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்கக் கூடும்.

    இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.

    ஸ்ரீதேவி பாகவதத்தை சிராவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும்.

    இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    திருதராஷ்டிரரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.

    பாண்டவர்களின் வெற்றியை பொறுக்காத அசுவத்தாமன் அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டனர். அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.

    இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரிஷத் மகாரா ஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமேஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.

    ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. 'என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசு பாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்ப யாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மாவை எப்படிக் கரையேற்றுவது? என்று தவித்தான்.

    அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவி பாகவத கதையை சிராவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது.

    சிராவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தான். உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    • தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.
    • திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது.

    21-வது ஆண்டாக, இந்த ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, வரும் 27-ந்தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.

    22-ந்தேதி நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில், உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர்.செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.

    அன்றைய தினம் திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது.

    23-ந்தேதி ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது. 24-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    25-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைகிறது. 26-ந்தேதி திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்க்கப்படுகின்றன.

    பின்னர், 27-ந்தேதி திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

    திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது.

    இவ்வாறு ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியுள்ளார்.

    • அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி.
    • திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-30 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி காலை 7.01 மணி வரை பிறகு நவமி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : மிருகசீரிஷம் காலை 11.15 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்

    அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-பரிசு

    கன்னி-களிப்பு

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- உதவி

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-உவகை

    மீனம்-பண்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மனக்குழப்பம் அகலும் நாள். மனதளவில் இருந்த காரியம் ஒன்று செயலளவில் நிறைவேறும். உத்தியோகத்தில் செய்த புது முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    ரிஷபம்

    நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    மிதுனம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். அலுவலகப் பணிக்காக அலைச்சல் ஏற்படலாம்.

    கடகம்

    எதிர்பாராத உதவி எளிதில் கிடைக்கும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. புதிய உத்தியோக வாய்ப்புகள் கைகூடும். தொழில் சீராக நடைபெறும்.

    சிம்மம்

    தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடும்.

    கன்னி

    நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிகளிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

    துலாம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள்.

    விருச்சிகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் மீது கோபப்படலாம்.

    தனுசு

    பிரச்சனைகள் தீரும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மகரம்

    பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை அடையும் நாள். திருமண வாய்ப்பு கைகூடி வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கும்பம்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மீனம்

    குடும்பச் சுமை கூடும் நாள். புதுமுகங்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொல்லை தந்தவர் விலகுவர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    • ரிஷபம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம்.
    • மிதுனம் சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம்.

    மேஷம்

    புதிய வளர்ச்சிக்கான பாதை உருவாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சம சப்தம பார்வையால் ராசியை பார்க்கிறார். ராசி பலம் பெறுவதால் செயல்பாடுகளில் ஏற்பட்ட தடை தாமதங்கள் அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு புதிய நம்பிக்கை, தைரியம் கூடும்.

    புதிய வீடு கட்டுதல், வீட்டை விரிவு செய்தல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்களால் கூட்டுத் தொழிலில் மந்த நிலை ஏற்படும். வேலைப் பளு சற்று அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண நோய் அல்லது கண் தொடர்பான மருத்துவ சிகிச்சை செய்ய நேரும். பருவ வயதினருக்கு திருமணம் நிச்சயமாகும்.

    பொருளாதாரம் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் நிறைவு பெறும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். மாணவர்கள் தடைபட்ட படிப்பை மீண்டும் தொடரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மகாளய பட்ச காலத்தில் விலங்குகளுக்கு உணவிடுவதால் பொருளாதார குற்றம் நீங்கும்.

    ரிஷபம்

    பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாயின் 8-ம் பார்வையும் சனியின் 3ம் பார்வையும் உள்ளது. திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவினர்களின் அதிர்ஷ்ட சொத்து, பணத்தில் ஒரு பகுதி உங்களுக்கு கிடைக்கும். விவசாயிகள் ரியல் எஸ்டேட் துறையினருக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளது. போட்டி பந்தயங்களைத் தவிர்ப்பது நல்லது.

    கடன் தொல்லையில் இருந்து மீள் வதற்கான வழிகள் தெரியும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகும். மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும். அவர்களின் நட்பு, கூட்டணி மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். உழைப்பிற்கும், முயற்சிக்கும் உரிய பலன்கள் வந்தடையும். மாற்று முறை வைத்தியத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.புதிய எதிர்பாலின நட்பு உங்களை தேவையற்ற திசைக்கு அழைத்துச் செல்லலாம். எனவே நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். மகாளய பட்ச காலங்களில் அசைவ உணவை தவிர்ப்பதால் வாழ்க்கைப் பயணம் இலகுவாகும்.

    மிதுனம்

    சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து சனி பார்வையில் உள்ளார். தற்போது இருக்கும் நிலையில் மாற்றங்கள் உண்டாகும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபி விருத்தி உண்டாகும். பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள்.

    குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். தொழிலில் நிலவிய இழுபறிகள் விலகி சாதகமான சந்தர்ப்பம் உருவாகும். உத்தி யோகஸ்தர்கள் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்க்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும்.

    சுப நிகழ்விற்கான அறிகுறிகள் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். இளம் பெண்களுக்கு திருமண தடை நீங்கும். மகாளய பட்ச காலத்தில் வசதியற்ற மாணவ மாணவியர்களின் தேவையறிந்து உதவுவது சிறப்பாகும்.

    கடகம்

    கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும் வாரம். கடக ராசிக்கு முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் அறிவாற்றல் திறமை அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். வாழ்க்கைத் துணைக்கு இழந்த வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் உண்டு. எப்படி உழைத்தாலும் லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும்.

    எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வரும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். மாமனாருடன் ஏற்பட்ட மன ஸ்தாபம் விலகும். ஆவணங்கள் தொடர்பான வம்பு, வழக்குகள் சாதகமாகும். உடல் நிலையிலிருந்த பாதிப்புகள் அகலும். அரசு வேலை முயற்சி கைகூடும்.

    கல்லூரி படிப்பு தடைபட்டவர்கள் மீண்டும் தொடர முடியும். எதிரிகள் வழியாக ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும். மகாளய பட்ச காலங்களில் புனித நீர் நிலைகளில் நீராடுவதால் பாவங்கள் குறைந்து புண்ணிய பலன்களை அதிகரிக்கும்.

    சிம்மம்

    பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்று இருக்கிறார். இது மிக சிறப்பான உன்னதமான கிரக அமைப்பாகும். தன வரவில் ஏற்பட்ட பற்றாக்குறைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

    நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்ய நேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடம்பர வீட்டைக் கட்ட திட்டமிடுவீர்கள். சிலரின் காதல் தோல்வியில் முடியும்.

    பரம்பரைச் சொத்து, முன்னோர்களின் வங்கி சேமிப்பு இவற்றை பங்கிட உற்றார் உறவினர்கள் நிர்பந்திப்பார்கள் ஆடம்பர விருந்து, விழாக்களில் கலந்து இன்பம் அடைவீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். மகாளய பட்ச காலங்களில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    கன்னி

    மனோபலத்தால் நன்மைகள் அதிகரிக்கும் வாரம். உச்சமடைந்த ராசி அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். வெளி நாட்டில் வாழ்பவர்கள் எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிப்பதால் எதிர்காலம் பற்றிய அச்சம் அதிகரிக்கும். சுப விரயச் செலவுகள் மிகுதியாகும். புதிய வீடு, வாகனத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.

    தொழிலில் சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சர்ச்சையில் தாய்மாமன் ஆதரவாக இருப்பார். சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல வேலை கிடைக்கும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும். தெய்வ கடாட்சம் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் மற்றும் அலுப்பு குறையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சற்று இழுபறியாகும். வாழ்க்கையை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நடக்கும். மகாளய பட்ச காலத்தில் கன்னிப் பெண்களுக்கு ஆடை தானம் வழங்க கன்னிப் பெண் சாபம் விலகும்.

    துலாம்

    புதிய வளர்ச்சிக்கான பாதை தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். இன்சூரன்ஸ், சீட்டு பணம், பங்குச் சந்தை, தொழில் ஆதாயம் என பல வகைகளில் வருமானம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். சகோதர, பங்காளி கருத்து வேறுபாடு நீங்கும்.

    உறவுகளின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் கூடும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திருமணத் தடைகள் அகலும். மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் உதயமாகும்.

    14.9.2025 அன்று இரவு 8.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலங்களில் சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கி நல்லாசி பெற பெண் சாபங்கள் விலகும்.

    விருச்சிகம்

    தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். சக பணியாட்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் நிலவும் எதிர்ப்புகளை எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவீர்கள். அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகளுக்கு மிக மிக சாதகமான நேரம்.

    உபரி வருமானத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மாறாக ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யலாம். பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல வரன்கள் அமையும்.

    14.9.2025 அன்று இரவு 8.03 முதல் 17.9.2025 அன்று 12.28 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நல்ல ஜீரண சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிடவும். மகாளய பட்ச காலங்களில் உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ பித்ருக்கள சாபம் நீங்கும்.

    தனுசு

    புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 7,10-ம் அதிபதி புதன் உச்சம் பெறுகிறார். மன ரீதியான சங்கடங்கள் விலகும். ஆடம்பர, அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும். தொழிலில் நல்ல விருத்தி உண்டாகும். அனைத்து தொழில் சார்ந்தோரும் ஏதாவது ஒரு வகையில் லாபமும் மன நிறைவும் பெறுவர். சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும்.

    சிலர் புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. கடன், நோய் எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகன்று திருமணம் நடக்கும். மறுமணத்திற்கு வரன் பார்க்க ஏற்ற நேரம். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வீடு, வாகனம் மற்றும் சுப நிகழ்விற்காக விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.

    வாழ்க்கைத் துணையின் நலனில் அதிக அக்கறை வேண்டும். மறைமுக தொந்தரவு கொடுத்தவர்கள் பலம் இழப்பார்கள். 17.9.2025 அன்று காலை 12.28 முதல் 19.9.2025 அன்று காலை 7.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மகாளய பட்ச காலத்தில் ஆன்மீக குருமார்கள் புரோகிதர்கள் ஆசிரியர்கள் போன்ற வர்களிடம் நல்லாசிகள் பெற குரு சாபம் விலகும்.

    மகரம்

    மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும் காலம். ராசியில் செவ்வாயின் நான்காம் பார்வை பதிகிறது. பூமி, நிலம், வாகன வகையில் லாபம் உண்டாகும். விவசாயம் செழிக்கும். தொழில் ஸ்தான செவ்வாயால் லாபம் பல மடங்காகும். குடும்பத்தில் நிலையான மகிழ்ச்சி உண்டாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வெளியூருக்கு பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

    மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். 19.9.2025 அன்று காலை 7.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய நபர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கவும்.

    சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலத்தில் குடிசை வாசிகளுக்கு குடை, செருப்பு, போர்வை தானம் வழங்க சுய ஜாதக ரீதியான பித்ருக்கள் தோஷம் குறையும்.

    கும்பம்

    புதிய எழுச்சியுடன் வலம் வரும் வாரம். ராசிக்கு சுக்ரன் பார்வை உள்ளது. நிம்மதி இரட்டிப்பாகும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும்.தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறைசக்தியை உணர்வார்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு.

    வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமை நிலவும். போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவத்தால் குணமடைவார்கள்.

    அரசு உயர் அதிகாரிகளின் தனித் திறமைமிளிரும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் துப்புரவு தொழிலாளிகளின் தேவையறிந்து உதவுவதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    மீனம்

    மாற்றங்கள் உண்டாகும் வாரம். தன ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்க்கிறார். தற்பொழுது உங்கள் நிலையில் உயர்வு உண்டாகும். லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபிவிருத்தி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும்.

    திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆடம்பர, தேவைகள் நிறைவேறும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளு படியாகி தீர்ப்பு சாதகமாகும்.

    பெண்களின் திறமைகள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பிரமிக்க வைப்பதாக இருக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகி ஆதரவு கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வழங்க குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.

    • பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது.
    • ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

    இதனிடையே சபரிமலை, பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது. இந்த சங்கமத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். மாத பூஜையின் போது, பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி பக்தர் சங்க மத்தை நடத்த கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    வழக்கமாக, மாதபூஜை நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது 19, 20 ஆகிய தேதிகளில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
    • ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-29 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி காலை 9.15 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.17 மணி வரை

    பிறகு மிருகசீரிஷம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். மத்யாஷ்டமி மகாவியதீ பாதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-லாபம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- களிப்பு

    மகரம்-பக்தி

    கும்பம்-நம்பிக்கை

    மீனம்-துணிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கி சேமிப்பு உயரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியாகச் செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும்.

    ரிஷபம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பிறர் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    மிதுனம்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    கடகம்

    வருமானம் உயரும் நாள். வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    சிம்மம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

    கன்னி

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும், அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    துலாம்

    நிம்மதி கிடைக்க நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். எந்தச் செயலையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது.

    விருச்சிகம்

    அலைபேசியில் வரும் செய்திகளால் ஆனந்தமடையும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மதியத்திற்கு மேல் மனஅமைதி கூடும்.

    மகரம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது உத்தமம். எதிர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.

    மீனம்

    இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும்.

    ×