என் மலர்tooltip icon

    ராசிபலன் - Rasi Palan

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 20.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும்
    X

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 20.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

    ரிஷபம்

    இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் கூடும்.

    கடகம்

    கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விலகுவர். எந்தச் செயலையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.

    சிம்மம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். விருந்தினர் வருகை உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். முயற்சி கைகூடும்.

    கன்னி

    செல்வாக்கு உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

    துலாம்

    விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    விருச்சிகம்

    வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். பணவரவு திருப்தி தரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    தனுசு

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர்ப் பயணம் திகைக்க வைக்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உறவினர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.

    மகரம்

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

    கும்பம்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் வரலாம். கூட்டாளிகள் குழப்பத்தை உருவாக்குவர்.

    மீனம்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர்.

    Next Story
    ×