என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 23.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு நட்பால் நன்மை கிட்டும்
    X

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 23.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு நட்பால் நன்மை கிட்டும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    துயரங்கள் விலக துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ரிஷபம்

    தடைகள் தானாக விலகும் நாள். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலை ஒன்றை இன்று செய்துமுடிப்பீர்கள்.

    மிதுனம்

    கல்யாண கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    கடகம்

    நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும்.

    சிம்மம்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

    கன்னி

    சொன்ன சொல்லைக் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.

    துலாம்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.

    விருச்சிகம்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்றுமிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர்.

    தனுசு

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

    மகரம்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    கும்பம்

    தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாக பிரபலமானவர்களை சந்திப்பீர்கள்.

    மீனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    Next Story
    ×