என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இந்திரன் ஒருமுறை சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகிறான்.
    • நந்திகேசுவரருக்கு ஒரு தனி வரலாறு உள்ளது.

    எல்லா சிவன் கோவில்களிலும் கர்ப்பகிரகத்துக்கு எதிரே இறைவனை நோக்கியபடி நந்திகேசுவரர் (நந்தி) எழுந்தருளியிருப்பதை காணலாம். அதேபோல் இந்த கோவிலிலும் கர்ப்பகிரகத்தின் எதிரே கொடிமரத்துக்கு முன் பெரிய நந்தி சிலை உள்ளது. இங்கு எழுந்தருளிய நந்திகேசுவரருக்கு ஒரு தனி வரலாறு உள்ளது.

    தேவலோகத்தின் தலைவனான இந்திரன் ஒருமுறை சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகிறான். இதனால் சாபவிமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி தவம் இருக்கிறான். அவனது தவ வலிமையை கண்டு மனம் இறங்கிய இறைவன், திரிகூடபர்வத கடம்ப வனப்பகுதியில் சுயம்புவாக தான் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் ஆலயத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை முழங்கிடச் செய்யும் வகையில் ஒரு நந்தியை (நந்திகேசுவர்) நிறுவுமாறும், அப்படி செய்தால் சாபம் தீரும் என்றும் கூறுகிறார்.

    அதன்படி தேவேந்திரன், பிரம்மதேவனின் மகனும், சிற்பக்கலையின் தலைவனுமான மயனை அழைத்து, கடம்ப வனத்தில் உள்ள சுயம்புலிங்கத்தின் முன் ஒரு நந்திகேசுவரரை நிறுவுமாறு பணித்தான். இதைத்தொடர்ந்து மயன் கடம்ப வனம் வந்து கடினமாக பணி செய்து சிற்ப சாஸ்திரங்களின்படி முழுமை பெற்ற ஒரு நந்தியை வடிவமைத்தான்.

    சாஸ்திரங்களின் அடிப்படை விதி எதுவும் மாறாமல் வடிவமைக்கப்பட்டதால், கல்லினால் செதுக்கப்பட்ட நந்தி, திடீரென உயிர்பெற்று எழுகிறது. உடனே மயன் தனது தந்தையை மனதில் நினைத்து வேண்டியபடி, கையில் இருந்த சிறிய உளியினால் நந்தியின் பின் முதுகில் அழுத்தி அமரச் செய்து விடுகிறான். இதனால் இங்குள்ள நந்திகேசுவரர் முதுகில் சிற்றுளியால் ஏற்பட்ட சிறிய கீறலுடன் காட்சி தருகிறார்.

    நந்திகேசுவரருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை `நந்திக்களபம்' என்ற விசேஷ பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த நந்திகேசுவரரிடம் மனதார வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த நந்தியை `பிரார்த்தனை நந்தி' என்று அழைக்கிறார்கள். நேர்த்திக்கடனும் செலுத்துகிறார்கள்.

    முனிவருக்கு சாபம்

    கணங்களின் தலைவனான பிருங்கிரிடி முனிவர் ஒருமுறை சிவசைலநாதரை மட்டும் தரிசித்துவிட்டு, அம்பாளை பிரதட்சணம் செய்யாமல் சென்று விடுகிறார். இதனால் கோபமுற்ற அம்பாள், பிருங்கிரிடியின் சக்திகள் அனைத்தையும் அபகரித்துவிடுகிறார்.

    அத்துடன் பிருங்கிரிடிக்கு சாபமிடுமாறு ஈசனிடம் முறையிடுகிறார். ஆனால் சிவசைலநாதரோ, அம்பாள் சொல்வதை காதில் வாங்காமால் பாராமுகமாய் இருந்து விடுகிறார்.

    இதனால் கோபம் கொண்ட அம்பாள், அங்கிருந்து மேற்கு நோக்கி பயணித்து திரிகூடபர்வதத்தில் உள்ள அத்ரி மகரிஷியின் குடில் அருகே அமர்ந்து கடுந்தவம் செய்யத் தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து சிவசைலநாதர், ``தேவி நீ கோபம் கொள்ள வேண்டாம். எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. நீ கட்டாயம் நமது இருப்பிடம் வரவேண்டும்'' என்று கூறி அம்பாளை சமாதானம் செய்தார்.

    ஈசனின் வேண்டுகோளை ஏற்று அம்பாள் கோபம் தணிந்து மீண்டும் சிவசைலம் எழுந்தருளினார். அன்று முதல் அம்பாள் `பரமகல்யாணி' என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    • சைவ வழிபாட்டில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு.
    • மேற்கு நோக்கிய சிவலிங்கங்களுக்கு அதிக சக்தி உண்டு

    ``கோவில் விளங்க குடி விளங்கும்'' என்றார்கள் நம் முன்னோர்கள். இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றபோதிலும், கோவிலுக்கு சென்று அமைதியான சூழலில் கண்மூடி பிரார்த்தித்து, இதயத்தில் உள்ள பாரத்தை சற்று இறக்கி வைத்துவிட்டு வந்தால் மனதும், உடலும் லேசானது போன்ற உணர்வும், நிம்மதியும் கிடைக்கும்.

    பழங்காலத்தில் இருந்து இப்போது வரை கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஓர் அம்சமாகவும், சமுதாய கட்டமைப்பின் முக்கிய அங்கமாகவும் விளங்கி வருகின்றன. இறை நம்பிக்கையும், வழிபாட்டுத் தலங்களும் மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    அந்த காலத்தில் மன்னர்கள் ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளையொட்டியே கோவில்களை கட்டினார்கள். பெரும்பாலான கோவில்கள் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கியே கட்டப்பட்டன. இதற்கு மாறாக சில கோவில்கள் மேற்கு திசையை நோக்கியும் கட்டப்பட்டு இருக்கின்றன.

    சைவ வழிபாட்டில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு. சிவலிங்கம் என்றால் சிவபெருமானின் அடையாளம்-உலகிற்கே தந்தையான ஈசனின் அடையாளம் என்று சொல்வார்கள். பெரும்பாலான சிவன் கோவில்களில் ஈசன் லிங்க திருமேனியாகவே காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய சிவலிங்கங்களுக்கு அதிக சக்தி உண்டு என்றும், அத்தகைய சிவலிங்கங்கள் அமைந்த கோவில்களுக்கு சென்று வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருச்சி தாயுமானவர் ஆலயம், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதசாமி கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் மேற்கு நோக்கிய சிவாலயங்களாக விளங்குகின்றன.

    அப்படிப்பட்ட ஒரு பிரசித்திபெற்ற சிவத்தலம்தான் தென்காசி மாவட்டம் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவசைலநாதர் கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான ஆலயம் கடனா ஆற்றின் தென்கரையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் உற்பத்தியாகும் கடனா, தாமிரபரணியின் முக்கிய உபநதிகளில் ஒன்றாகும்.

    தென்காசி-அம்பாசமுத்திரம் மார்க்கத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கடனா அணைக்கு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவசைலநாதர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் ஆகும்.

    மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட எழில்மிகுந்த இந்த ஆலயத்தின் மேற்கேயும் தெற்கேயும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகளாக விளங்கும் திரிகூடபர்வதமும், வெள்ளிமலையும், வடக்கே முள்ளி மலையும் உள்ளன.

    கோவிலின் முன்நின்று நோக்கினால் மேற்கேயும், தெற்கேயும் மலையடிவாரம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை போர்த்திய வயல்வெளிகள். அமைதியான சூழ்நிலை, தூய்மையான பொதிகை தென்றல் என்று இயற்கையின் அருட்கொடைக்கு பஞ்சம் இல்லாத பூமி. தென்மேற்கு பருவமழை காலத்தில் குற்றாலத்தின் குளுகுளு சீசனை இங்கேயும் அனுபவிக்கலாம்.

    தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் சிவசைலநாதர் கோவிலின் தூண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியும் மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. புராண சம்பவங்களை சொல்லும் அழகிய ஓவியங்கள் ஆங்காங்கே வரையப்பட்டு இருக்கின்றன.

    வாருங்கள்... இந்த கோவிலில் ஸ்தல புராணத்தை பார்ப்போம்...

     அம்பாள் கல்யாணியுடன் ஈசன் குடிகொண்டிருக்கும் இந்த சிவசைலம் முன்னொரு காலத்தில் சோலைகள் நிறைந்த கடம்ப வனமாக இருந்தது. சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்த பூமி.

    சிவபெருமானின் திருமண கோலத்தை காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் கைலாய மலைக்கு சென்றதால், பாரம் தாங்காமல் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சரி செய்ய ஈசன், குறுமுனியான அகத்தியரை தென் கோடியில் உள்ள பொதிகைக்கு அனுப்பி வைத்தார்.

    ஈசனின் ஆணையை சிரமேற்கொண்டு அத்ரி மகரிஷியுடன் தென்திசை வந்த அகத்தியர் பொதிகை மலையில் குடிசை அமைத்து தவவாழ்வு மேற்கொண்டார். தனது திருமணம் முடிந்ததும் அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் பார்வதிதேவியுடன் காட்சி அளித்தார். அதாவது, பொதிகை மலையின் அடிவாரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி காட்சி கொடுத்தார்.

    அகத்தியருடன் வந்த மற்றொரு மகரிஷியான அத்ரிமுனிவர் பாபநாசத்தில் இருந்து வடமேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றொரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் குடில் அமைத்து மனைவி அனுசூயையுடனும், கோரக்கர் போன்ற சீடர்களுடனும் வாழ்ந்து வந்தார். `சைலலிங்கம்' என்ற திருப்பெயர் கொண்ட லிங்கத்தை அவர் பிரதிஷ்டை செய்து தினசரி பூஜை செய்து வந்தார்.

    ஒரு சமயம் அகத்தியரை தரிசித்துவிட்டு வந்த அத்ரி மகரிஷிக்கு ஒரு மனக்குறை தோன்றியது. ''அகத்தியருக்கு சுயம்புவாக எழுந்தருளி காட்சியளித்த ஈசன் தனக்கு அப்படி காட்சி அளிக்கவில்லையே!'' என்று வருந்தினார். தனது மனக்குறையை அடிக்கடி ஈசனிடம் முறையிடத் தொடங்கினார்.

    அவரது வேண்டுதலுக்கு செவிமடுத்த சிவபெருமான் அசரீரியாக, ``மகரிஷியே சிவசைலர் என்ற பெயருடன் சுயம்புவாக நான் கடனா நதிக்கரையில் வாசம் செய்து வருகிறேன். என்னை வெளிக்கொணர்ந்து நீ பூஜிப்பாயாக'' என கூறி மறைந்தார்.

    இந்தநிலையில் அத்ரி முனிவரின் சீடர்கள் ஒரு நாள் பூஜைக்காக பூப்பறிக்க சென்ற போது, ஓரிடத்தில் பசு ஒன்று தானாக பால் சுரப்பதை கண்டு அதிசயித்து நின்றனர். பின்னர் அந்த இடத்தை அத்ரி முனிவரும் சீடர்களுடம் தோண்டிப்பார்த்த போது அங்கு சுயம்பு வடிவில் லிங்கம் காட்சி அளித்தது. அதை எடுத்து அத்ரி முனிவர் பூஜித்து வணங்கினார்.

    அந்த இடம்தான் தற்போது பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் அமர்ந்துள்ள சிவசைலம் ஆகும்.

    சிவசைலத்துக்கு நேராக மேற்கே சற்று தொலைவில் உள்ள திரிகூடபர்வதத்தில் அத்ரி மகரிஷியின் குடில் அமைந்திருந்தது. அவர் தினமும் தன்னை தரிசனம் செய்வதற்காகவே சிவசைலம் கோவிலில் ஈசன் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

    அத்ரி மகரிஷி வாழ்ந்த இடத்தில் தற்போது சிறிய கோவில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசை தினங்களில் அங்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். கடனா அணைக்கு மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்திருப்பதால், வனத்துறையின் அனுமதி பெற்றுத்தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும்.

    அத்ரி முனிவர் வாழ்ந்த இடம் என்பதால் திரிகூடபர்வதம் `அத்ரி மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரம்மனும், இந்திரனும் வழிபட்ட பெருமைமிக்க புண்ணிய தலம் சிவசைலநாதர் கோவில்.

    பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி அளித்த அதிசய சம்பவமும் இந்த திருத்தலத்தில்தான் நடந்தது. இதற்காக ஈசன் ஒரு திருவிளையாடலையே நடத்தினார்.

    மணலூர் என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த சுதர்சன பாண்டியன் என்ற மன்னன் அடிக்கடி சிவசைலநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று வந்தான். அப்படி ஒரு நாள் மன்னன், சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்தபோது கடனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மன்னனால் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

    எனவே வடகரையில் நின்றபடியே சிவசைலநாதரை மனதில் நினைத்து வேண்டினான். அவனது வேண்டுதலுக்கு ஈசன் செவிசாய்க்கவே சிறிது நேரத்தில் வெள்ளம் வடியத்தொடங்கியது. வெள்ளம் குறைந்ததும் மன்னன் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு சென்றான்.

    மன்னன் கோவிலுக்கு வருவதற்குள் நடை சாத்தப்பட்டு விட்டது. மன்னனின் `திடீர்' வருகையை கண்டு திடுக்கிட்ட அர்ச்சகர், மன்னனை மகிழ்விக்கும் பொருட்டு, கோவிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக வழங்கி, அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை பெற்று மன்னனுக்கு கொடுத்துவிட்டார்.

    சுவாமியை தரிசிக்க இயலாவிட்டாலும் அவருக்கு சூட்டிய மலர்மாலையையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று மகிழ்ந்த மன்னன் சுதர்சன பாண்டியன், அந்த மாலையை பயபக்தியுடன் வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

    அப்போது அதில் தலைமுடி இருப்பதை கண்டு, அபசகுனமாக கருதிய மன்னன், ''ஈசனுக்கு சூடிய மலர்மாலையில் தலைமுடி எப்படி வந்தது?'' என்று கோபமாக கேட்டான்.

    இதனால் பயந்து போன அர்ச்சகர், ``ஈசனுக்கு சடைமுடி உண்டு. மலர்மாலையில் காணப்பட்டது சுவாமியின் முடிதான்'' என்று ஒரு பொய்யைக் கூறி சமாளித்தார்.

    இதை நம்பாத அரசன், ``அப்படியானால் நான் அடுத்த முறை கோவிலுக்கு வரும் போது அந்த சடை முடியை தரிசிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

    இதனால் அர்ச்சகரின் நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றி அருளுமாறு சிவசைலநாதரிடம் வேண்டி பிரார்த்தனை செய்தார். அவரது நிலைமையை கண்டு மனமிறங்கிய ஈசன் அசரீரியாக, ''சுதர்சன பாண்டியனை சோதிக்கவே யாம் இவ்வாறு செய்தோம். அவனுக்கு மலர்மாலை பிரசாதம் தந்த உம்மை நிச்சயம் காப்பாற்றுவேன். கருவறையின் மூன்று பக்கங்களிலும் சாரளரங்கள் அமைப்பாயாக'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

    இதைத்தொடர்ந்து, கருவறையின் வலது, இடது மற்றும் பின் பக்கங்களில் சிறிய சாளரங்கள் (துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்) அமைக்கப்பட்டன. நாட்கள் உருண்டோடின.

     ஏற்கனவே சொன்னது போல் சில நாட்களுக்கு பின் மன்னன் சுதர்சன பாண்டியன் கோவிலுக்கு வந்தான். அப்போது அர்ச்சகரின் வேண்டுகோளின்படி, கருவறையில் சுவாமிக்கு பின்னால் உள்ள துளையின் வழியே மன்னன், சிவசைலநாதரை தரிசனம் செய்தான். அர்ச்சகர் காட்டிய தீப ஒளியில் ஈசன் ஜடாதாரியாக மன்னனுக்கு காட்சி அளித்தார். இறைவனின் தோற்றத்தை கண்டு மெய்சிலிர்த்த மன்னன், தன் தவறை மன்னிக்கும்படி மனமுருக வேண்டி இறையருள் பெற்றான்.

    இந்த நிகழ்வின் காரணமாகவே, பக்தனுக்கு ஜடாமுடிதாரியாக சிவபெருமான் காட்சியளித்த சிறப்புடைய தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

    இப்போதும் இந்த கோவிலில் கர்ப்பகிரகத்தின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் இருப்பதை காணலாம். பின் பக்கம் அமைந்துள்ள சாளரத்தின் பின்னால் உள்ள கோவிலின் மதில் சுவரில் ஒரு துளை இருப்பதையும் காண முடியும்.

    5 நிலைகளை கொண்ட கோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் சிவசைலநாதருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஈசனின் இடப்பக்கம் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.

    தேவார பாடல் பெற்ற இந்த கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரம் விளங்குகிறது.

    கோவிலின் வலதுபுறத்தில் மணிமண்டபத்துடன் கூடிய படித்துறையும், அதன் அருகே மூலிகை தோட்டமும் உள்ளது. பக்தர்கள் படித்துறையில் இறங்கி ஆற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    கோவில் அமைந்துள்ள ஆற்றின் தெற்கு கரை பகுதி சிவசைலம் என்றும், வடக்கு கரை பகுதி அம்பாள் பெயரில் கல்யாணிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்யாணிபுரத்தில் இருந்து ஆற்றை கடந்து சிவசைலம் செல்ல பெரிய பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இயற்கை எழில் சூழ்ந்த சோலைவனம் போன்ற பகுதியில் இந்த கோவில் அமைந்து இருப்பதால் கடனா அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கோவிலின் எதிரே திருக்கல்யாண வசந்த மண்டபம் உள்ளது. இங்குள்ள கோசாலையில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

    ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதியில் நடைபெறும் பிரமோற்சவம் இங்கு நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால் அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் 'மணிவிழா'க்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

    கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பக்த பிரமுகர் சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கோவிலுக்கும், ஆற்றுக்கும் இடையேயான வடக்கு பிரகார பகுதியில் சிமெண்டு தரை அமைத்து அதிக ஒளிதரும் மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள் வருவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதியாக இருக்கும் என்று கூறிய அவர், கழிவறைகளை நன்கு பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு கட்டிய கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மட்டுமின்றி நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பிறப்பிடமாகவும், கலை பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன. அந்த பொக்கிஷங்களை பேணி பாதுகாப்பது நமது கடமை.

    வேர்களை மறந்தால் விருட்சங்களுக்கு விமோசனம் கிடையாது. வந்த வழி மறந்துவிட்டால், போகும் வழி தெரியாமல் போய்விடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்
    • பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-17 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி இரவு 8.10 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 10.45 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-குழப்பம்

    சிம்மம்-நலம்

    கன்னி-நட்பு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- அமைதி

    மகரம்-பொறுமை

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-ஊக்கம்

    • குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-16 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி இரவு 6.17 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: பூசம் இரவு 8.23 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப் பெருமான் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-மாற்றம்

    கடகம்-பரிசு

    சிம்மம்-ஊக்கம்

    கன்னி-உயர்வு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-ஆதாயம்

    தனுசு- வெற்றி

    மகரம்-பயணம்

    கும்பம்-புகழ்

    மீனம்-போட்டி

    • படி பூஜைக்கு வருகிற 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு.
    • தந்திரி தலைமையில் படி பூஜை நடத்தப்படும்.

    சபரிமலை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ரகலச பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பூஜைகளும், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட ஏராளமான அபிஷேக வழிபாடுகளும் நடத்தப்படுகிறது.

    இதில் படிபூஜைக்கு அதிக கட்டணமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜை ரூ.61 ஆயிரத்து 800 கட்டணத்தில் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அதிக கட்டணத்தில் நடத்தப்படும் படி பூஜைக்கு வருகிற 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்து உள்ளது. இதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு 2029-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது. இந்த இரு பூஜைகளும் நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது மாத பூஜை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இந்த இரு பூஜைகளும் நடத்தப்படும்.

    படி பூஜையையொட்டி 18 படிகளையும் கழுவி சுத்தம் செய்து, பட்டு விரித்து, பூக்களால் அலங்காரம் செய்து, 18 படிகளிலும் குத்துவிளக்கு ஏற்றி தந்திரி தலைமையில் படி பூஜை நடத்தப்படும். உதயாஸ்தமன பூஜையையொட்டி காலையில் நடை திறப்பு முதல் இரவு நடை அடைப்பு வரை 18 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    அதன்படி ஒவ்வொரு முறையும் நடை திறந்து உதயாஸ்தமன பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் அந்த நேரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு இந்த 2 பூஜைகளும் மாத பூஜை நாட்களில் நடத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    • பரத்வாஜ முனிவரின் மகளை மணந்து கொண்டார்.
    • விச்ரவசு என்றொரு முனிவர் சிறந்த சிவபக்தர்.

    விச்ரவசு என்றொரு முனிவர் சிறந்த சிவபக்தர். அவர் யாகம் செய்ய விரும்பினார். ஆனால் திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார். தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான்.

    ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனை நோக்கி தவமியற்றப் போவதாகச் சொன்னான், அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர்.

    வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணிரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான். அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அக மகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார்.

    என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். "தங்களைத் தரிசித்ததேபெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?" என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன்.

    இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்ம தேவன், அவனை அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவனாகவும், எல்லா செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார். இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார்.

    செல்வ வளம் பெற பூஜிக்க வேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அப்படி இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.

    • வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.
    • இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார்.

    சேலம் மாவட்டத்தின் மைய பகுதியில் வீரபத்திரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். வலப்புறம் தட்சனும், இடப்புறம் பத்திரகாளியும் காட்சி தருகின்றனர். பத்திரகாளியின் கைகளில் பாசம், சூலம், உடுக்கை ஆகியவை அமைந்துள்ளன.

    சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதி உலா செல்கிறார்.

    பொதுவாக வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால், இங்கு இவருக்கு மூங்கில் இலை மாலை அணிவிப்பது விசேஷம். பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீர பத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.

    மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தனிச்சன்னிதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'ஜங்கமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்து பூஜை செய்கின்றனர்.

    ஐப்பசி பவுர்ணமியில் ஐங்கமேஸ்வரருக்கு அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண். பெண் இருபாலருக்கும் பிரசாதமாக தருவர். ஆனால் இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

    நவக்கிரக சன்னிதி எதிரில், ராஜ கணபதி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் 'அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

    அம்பாள் வேதநாயகி, வள்ளி, தெய்வானை சமேத முருகன் சன்னிதிகளும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளன. சிவன் சன்னிதி எதிரே மேல் விதானத்தில் 12 ராசி களுடன் கூடியராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.

    சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்காக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விநாயகர் மற்றும் சனீஸ்வரரை பிரார்த்தனை செய்கின்றனர்.

    இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் சிவனுக்கு அபிஷேகம் செய்தும், வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

    சேலம் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

    • சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.
    • எந்திரங்களுடன் இருப்பதால் எந்திர சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

    நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் எந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோவில் எழுப்ப விரும்பினார்.

    சனிபகவான், ஈஸ்வர பட்டம் பெற்றவர் என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோவில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோவில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோவில் எழுப்பினர்.

    எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது.

    லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள `ஷட்கோண எந்திரம்' உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்ஷர மந்திரம், லட்சுமி கடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

    • கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை
    • உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருமலை:

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. அதன்பிறகு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடந்தது.

    மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது.
    • ஈசனை வழிபட சனி பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். சனிப்பெயர்ச்சி நாளில் திருவாதவூர் திருமறைநாதரை வழிபட்டால், அவரது அருளால் சனியின் வீரியம் குறையும் என நம்பப்படுகிறது. சூரிய பகவானின் மைந்தனான சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது.

    சனிபகவான் தனது தந்தையான சூரிய பகவானிடம் முறையிட்டார். இருவரும் சேர்ந்து மாண்டவ்ய முனிவரிடம் சாப விமோசனம் கேட்டனர்.

    அப்போது, மாண்டவ்ய முனிவர் `பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது திருவாதவூர்த்தலம். அங்குள்ள திருமறைநாதரை நியமப்படி வணங்கினால் உன் சாபம் சரியாகும்' என்றார்.

    அதன்படி, சூரியனும், சனியும் திருவாதவூர் தலத்திற்கு வந்து, நியமப்படி நீராடி, சிவனை வணங்கினர். இதையடுத்து சனி பகவானின் வாதம் குணமானது.

    இத்தலத்தில் சிவன் எதிரிலேயே அமர்ந்த திருக்கோலத்தில் தனி சன்னிதியில் சனி பகவான் காணப்படுகிறார். இத்தலத்து ஈசனை வழிபட சனி பாதிப்பில் இருந்து விடுபடலாம். இத்தலம் மதுரைக்கு வட கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு.
    • சனிபகவான் மிகவும் வரப்பிரசாதியாய் வீற்றிருக்கிறார்.

    * சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார், வட திருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட இத்தலத்தில் பஞ்சமுக அனுமன், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.

    * திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோவிலின் பிராகாரத்தில் சனி பகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்திருக்கும் நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

    * திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது, திருநெல்லிக்காவல் நெல்லிவனேஸ்வரர் கோவில். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.

    * முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இடும்பாவனம் சிவன் கோவில். தன் பாவங்களைப்போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்த தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.

    * ஈரோட்டில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சன்னிதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம். சனிபகவான் அருள் கிட்டும்.

    * சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதியாய் வீற்றிருக்கிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து இங்குள்ள நள்ளார் தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். எனவே, இத்தலம் `வட திருநள்ளாறு' என அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களை செய்கின்றனர்.

    * சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றான். அவன் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் இங்குள்ள சனி பகவான் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.

    * சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனி பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.

    * ஈரோடு மாவட்டம் குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன. இவரும் அனைத்து சனி தோஷங்களையும் நீக்கி நல்வாழ்வு மலர அருள்கிறார்.

    * விழுப்புரம் அருகே உள்ள கோவியலூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனிச் சன்னிதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளில் இருந்து விலக்கு பெறலாம்.

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாகும்.
    • ஆலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார்.

    ஆய் மன்னர்கள், வேனாடு மன்னர்கள் ஆட்சி செய்த பூமி, யானை தந்தம், மிளகு, இஞ்சி ஏற்றுமதிக்கான வணிகத்தளமாக விளங்கிய ஊர், கருவறை சுற்றி உயிரோட்டமான நாகங்கள் கொண்ட கோவில், நாகதோஷங்கள் நீக்கும் இறைவன், சபரிமலை வாகனங்கள் இளைப்பாறும் இடம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் பழம்பெரும் ஆலயம் என பல பெருமைகள் கொண்ட தலம் நிலக்கல் ஆகும். இங்கு மகாதேவர் ஆலயம் என்ற பெயரில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது.

    சுவாமி ஐயப்பன் வழிபட்ட தலமாக இது விளங்குவதால், இப்பகுதி `இடத்தாவளம்' என்று அழைக்கப்படுகின்றது. நிலக்கல், தொன்மையான வரலாற்று பின்னணி கொண்ட தலமாகும். யானை தந்தம், லவங்கம், மிளகு, இஞ்சி போன்ற பொருட்கள், நிலக்கல் வரும் வணிகர்கள் மூலமாக கொடுங்ளூர், புறக்காடு போன்ற துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கடையேழு மன்னர்களில் ஒருவரான ஆய் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்து, பின்னாளில் வேனாடு மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி இது என வரலாறு கூறுகின்றது. இன்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாக இது விளங்குகின்றது.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார். இவரின் எதிரில் நந்தி தேவரும், கன்னிமூலக் கணபதியும் அமைந்துள்ளனர். இக்கோவிலின் இடதுபுறம் பள்ளியறக்காவு தேவி சன்னிதி அமைந்துள்ளது. கருங்கல் கருவறையில் இரண்டு அடுக்குகளாக ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மகாதேவர் கருவறை முழுவதுமே கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் வாசலிலும், மாடியிலும் உள்ள வாசல்களிலும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். கருவறையின் எட்டு திசைகளிலும் நாகங்கள் கலை நயத்தோடு புடைப்புச் சிற்பங்களாக உயிரோட்டத்தோடு அமைந்துள்ளன.

    நாக தோஷம் நீக்கும் தலமாக கூறப்பட்டாலும், வனப்பகுதியில் உள்ள மக்கள் நாகத்தை வணங்கி வழிபட்டதை உணர்த்துவதாக இது உள்ளது. கருவறை கூரை கூம்பு வடிவில் செந்நிற தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

    கேரள மாநில அரசின், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இக்கோவிலை நிர்வாகித்து வருகின்றது. இந்தக் கோவிலில் காலையில் உஷா பூஜை, நண்பகலில் உச்ச பூஜை, மாலையில் அத்தாழ பூஜை என, மூன்று கால பூஜைகள் நாள்தோறும் நடத்தப்படுகின்றன.

    ஆண்டுதோறும் இங்கு மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். பள்ளியறக்காவு தேவி கோவில், இக்கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது. சபரிகிரி நீர் மின் நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    அமைவிடம்

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடமே நிலக்கல்லாகும். நிலக்கல்லில் இருந்து பம்பா 17 கி.மீ. தூரத்திலும், சபரிமலை 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

    அய்யப்ப தரிசனத்திற்கு முன் நிலக்கல் மகாதேவரை வணங்கிச் செல்வது இன்றும் மரபாக உள்ளது. நாக பயம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக, நிலக்கல் மகாதேவர் விளங்குகின்றார்.

    ×