search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvadhavur Thirubhayanathar"

    • சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது.
    • ஈசனை வழிபட சனி பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். சனிப்பெயர்ச்சி நாளில் திருவாதவூர் திருமறைநாதரை வழிபட்டால், அவரது அருளால் சனியின் வீரியம் குறையும் என நம்பப்படுகிறது. சூரிய பகவானின் மைந்தனான சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது.

    சனிபகவான் தனது தந்தையான சூரிய பகவானிடம் முறையிட்டார். இருவரும் சேர்ந்து மாண்டவ்ய முனிவரிடம் சாப விமோசனம் கேட்டனர்.

    அப்போது, மாண்டவ்ய முனிவர் `பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது திருவாதவூர்த்தலம். அங்குள்ள திருமறைநாதரை நியமப்படி வணங்கினால் உன் சாபம் சரியாகும்' என்றார்.

    அதன்படி, சூரியனும், சனியும் திருவாதவூர் தலத்திற்கு வந்து, நியமப்படி நீராடி, சிவனை வணங்கினர். இதையடுத்து சனி பகவானின் வாதம் குணமானது.

    இத்தலத்தில் சிவன் எதிரிலேயே அமர்ந்த திருக்கோலத்தில் தனி சன்னிதியில் சனி பகவான் காணப்படுகிறார். இத்தலத்து ஈசனை வழிபட சனி பாதிப்பில் இருந்து விடுபடலாம். இத்தலம் மதுரைக்கு வட கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

    ×