என் மலர்
வழிபாடு
- 22-ந்தேதி பிரதிஷ்டை விழா.
- கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சென்னை:
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன. வருகிற 22-ந்தேதி பிரதிஷ்டை விழா நடைபெறுகின்றது. இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் 10 அடி உயர ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்பட்டது. அதனை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பராசரன் பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று மாலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் எஸ்.வேதாந்தம் ஆன்மீக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், திருப்பதி தேவஸ்தான தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர்ரெட்டி, விஸ்வ இந்து பரிஷத் டி.டி.வி. அறங்காவலர் குழு உறுப்பினர் சங்க தலைவர் தலைவர் கோபால்ஜி மற்றும் நீதிபதிகள், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஏ.ஜே.சேகர் ரெட்டி பேசியதாவது:-
நாட்டின் பல்வேறு இடங்களில் ஸ்ரீராமருக்கு கோவில் இருந்தாலும் அவர் அவதாரம் நிகழ்ந்த அயோத்தியில் கோவில் இல்லாமல் இருந்த குறை தற்போது நீங்கியுள்ளது. வெகுவிரைவாக அயோத்தியில் பக்தர்கள் கனவை பிரதமர் மோடி நகவாக்க உள்ளார்.
பீடத்துடன் கூடிய 10½ அடி உயர ராமபிரான் சிலை பைபர் வாயிலாக செய்யப்பட்டது. இதனை வருகிற 26-ந்தேதி வரை தரிசிக்கலாம். தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
வேதாந்தம் பேசுகையில், ராமஜென்ம பூமி, 500 ஆண்டுகள் போராட்டம். ராமாயணத்தில் கல் மீது ராமபிரான் பாதம் பட்டதும் அகல்யாவிற்கு விமர்சனம் கிடைக்கிறது. அதுபோல் ராமனின் பார்வை பராசுரன் மீது பட்டதும் ராம ஜென்ம பூமிக்கு விமோசனம் கிடைத்தது. அயோத்தியில் நடக்கும் ராமர் பிரதிஷ்டைக்காக இங்கு விழா எடுக்கப்படுவது வரவேற்கதக்கது என்றார்.
மேலும் ராமர் சிலை திறப்பு விழாவையொட்டி இன்று முதல் 26-ந்தேதி வரை சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாடல், நடனம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு ஆரத்தி, 10.30 மணி முதல் 12 மணி வரை பஜனை, மாலை 6 மணிக்கு ஆரத்தி நடைபெறும். இந்தியாவிலேயே முதன் முறையாக ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்து கொண்டாடப்படுவது சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும்.
- மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திருவிழா நடக்கும்.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெறும். அதன்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் லீலையை குறிக்கும் வகையில் மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திருவிழா நடக்கும். அன்றைய நாளில் சுவாமி-அம்பாள் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.
அதன்படி மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சண சப்பரத்தை காண்போருக்கு துன்பம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஜதீகம். இதனால் அஷ்டமி சப்பரத்தை காண பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியான இன்று (வியாழக்கி ழமை) சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தரு ளினர். பின்னர் அலங்கரிக் கப்பட்ட பெரிய சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறிய சப்பரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு அஷ்டமி சப்பர வீதிஉலா சிவாய கோஷம் முழங்க தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட சிவ பக்தர்கள் கயிலாய வாத்தியம், சங்கு ஒலியை எழுப்ப பெரிய சப்பரத்தை பக்தர்கள் வடம்பிடித்து முன்னே சென்றனர். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து சென்றனர்.
கீழமாசி வீதியில் தொடங் கிய அஷ்டமி சப்பர வீதி உலா யானைக்கல், கீழ வெளிவீதி, தெற்கு வெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேல வெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுதெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
முன்னதாக வழிநெடுகிலும் ஏராளமானோர் குடும் பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அஷ்டமி சப்பரம் சென்ற சாலைகளில் சிவாச்சாரி யார்கள் அரிசியை சாலைகளில் தூவி விட்டவாறு சென்றனர். அதனை பக்தர்கள் ஆர்வத்துடன் சேகரித்து வீட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டினால் பசிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை.
சித்திரை தேரோட்டத்திற்கு அடுத்தப்படியாக அஷ்டமி சப்பரத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.
- ஆஞ்சநேயருக்கு ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
- பல்வேறு தோற்றங்களில் அருள்பாலிப்பதை நாம் பார்த்திருப்போம்.
ராமனின் சிறந்த பக்தனாகவும், தூதனாவும் போற்றப்படும் ஆஞ்சநேயருக்கு, நாட்டில் ஏராளமான. ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் பல்வேறு தோற்றங்களில் அவர் அருள்பாலிப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ஆஞ்சநேயரின் சில வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்
மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின் போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர் வடிவம் ஆகும்.

நிருத்த ஆஞ்சநேயர்
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும்.

கல்யாண ஆஞ்சநேயர்
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படுகிறார்.

பால ஆஞ்சநேயர்
அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக, அவர் தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே 'பால ஆஞ்சநேயர்' என்று சொல்லப்படுகிறது. இவரை துதித்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வீர ஆஞ்சநேயர்
ஒரு முறை முனிவர்களின் சாபத்திற்கு ஆளானார் அனுமன். அதனால் அவரது சக்திகள் அனைத்தும் அவருக்கு மறந்து போனது. இந்த நிலையில் சீதையை கண்டு வருவதற்காக அனுமனை, இலங்கைக்குப் போகச் சொன்னார் ராமன். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவரின் சக்திகளைப் பற்றி எடுத்துக்கூற, தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூபம் எடுத்தார். அந்த வடிவமே 'வீர ஆஞ்சநேயர்' ஆகும்.

பக்த ஆஞ்சநேயர்
தன்னை வழிபடும் பக்தர்களை, இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவரே 'பக்த ஆஞ்சநேயர்.' ராமரை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். அதன்படி ராமநாமம் சொல்லி தன்னை வணங்கும் பக்தர்களின் மனதிலும் ராமரைக் காண்கிறார் அனுமன். அதனாலேயே அவர் பக்தர்களை கரம் குவித்து வணங்குவதாக சொல்லப்படுகிறது.

யோக ஆஞ்சநேயர்
ராமாயணத்தின் முடிவில் ராம நாமத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் சொல்வதைக் கேட்டு இன்புறுவதற்காக இங்கேயே தங்கிவிட்டார் அனுமன். ராமரின் நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். இந்த வடிவத்தையே யோக ஆஞ்சநேயர் என்கிறோம். இவரை ராம நாமம் சொல்லி வழிபட்டால் கேட்டவை கிடைக்கும்.

சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டுவர சென்ற அனுமன் வருவதற்கு நேரம் ஆனதால். சீதை மணலில் செய்த லிங்கத்தைக் கொண்டு பூஜை செய்தார் ராமர், அதனால் வருந்திய அனுமனின் வாட்டத்தைப் போக்க, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பூஜித்து அருள் செய்தார் ராமபிரான். லிங்கத் திருமேனியை ஸ்தாபனம் செய்த வடிவில் காட்சி தருபவர் 'சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்.

சஞ்சீவி ஆஞ்சநேயர்
ராவணனுடனான போரில் ராமருக்கு பேருதவியாக இருந்தவர் அனுமன். ஒருமுறை லட்சுமணன் போரில் மூர்ச்சை அடைந்தபோது, அவரை காப்பதற்காக சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன். இப்படி சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருப்பவரையே 'சஞ்சீவி ஆஞ்சநேயர்' என்கிறோம்.
- முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார்.
- இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
முருகனை கந்தன், கடம்பன், வேலன், வேலாயுதம் என பல்வேறு பெயர்களால் அழைப்பர். ஆனால் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உள்ள முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார். இங்கே 'வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி' என்ற பெயரில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி தினமும் இங்கு யாகம் நடைபெறுவதும் இத்தலத்திற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.
தல வரலாறு
150 ஆண்டுகளுக்கு முன்பு துலுக்கன் குறிச்சி கிராமத்தில் தேரியப்பர்-வீரம் மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். வேலாயுதம். இவர் தினமும் தனது அன்றாட விவசாயப் பணிகளைத் தொடங்கும் முன், அதிகாலையில் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்தி லிங்கபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அத்துடன் இவர் மூலிகைகளைக் கொண்டு வைத்தியமும் செய்து வந்தார். அருள்வாக்கும் சொல்லி வந்தார்.
ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முருகனை தரிசிக்க சென்றபோது, வைப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமலும், இறைவனை தரிசிக்க முடியாமலும் வருத்தத்துடன் இல்லத்திற்கு வந்து விட்டார். முருகனை தரிசிக்க முடியாத மனவேதனையில் எந்த பணியும் செய்யாமல் வீட்டில் இருந்தார். முருகனின் திருநாமத்தை கூறியபடி கண் அயர்ந்தார்.
அப்போது கனவில் இறைவன் தோன்றி. ''என்னைக் காண நீ வெகுதூரம் வர வேண்டாம். நானே உன்னைத் தேடி உன் இருப்பிடம் வந்துவிட்டேன். நீ ஆசையாக பராமரித்து வந்த வாழை மர தோட்டத்தில். ஒரே ஒரு வாழை மரத்தில் மட்டும் குலை தள்ளி இருக்கும். அதில் தான் நான் குடிகொண்டு உள்ளேன்" எனக் கூறி விட்டு மறைந்தார்.
மறுநாள் அதிகாலையில் வேலாயுதம் நீராடி விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கிச்சென்றார். அங்கே இறைவன் கனவில் சொன்னபடியே ஒரு வாழை மரம் மட்டும் குலை தள்ளி இருந்தது. அன்று முதல் தினமும் அதிகாலை நீராடி விட்டு முருகன் குடிகொண்டிருக்கும் வாழை மரத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்த செய்தி அக்கம்பக்கம் முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக் களும் அந்த வாழை மரத்தை வழிபட்டு வந்தனர்.
நாட்கள் பல சென்றன. ஒரு நாள் செவல்பட்டி ஜமீன்தாரின் பணியாட்கள் வாழைத்தோட்டம் நோக்கி வந்தனர். அவர்கள் "அரண்மனையின் பிரதான கணக்குப் பிள்ளையாக இருப்பவரின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மணப்பந்தலில் வைக்க குலை தள்ளிய வாழை வேண்டும். வேறு எங்கும் வாழை கிடைக்கவில்லை. ஆதலால் ஜமீன்தார் தங்களிடம் உள்ள வாழை மரத்தை வெட்டி எடுத்து வரும்படி உத்தர விட்டுள்ளார். எனவே இந்த குலை வாழையை தர வேண்டும்" என கேட்டனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வேலாயுதம். இது சாதாரண வாழை அல்ல. இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில். அதனால் தர முடியாது" என்று மறுத்தார்.
இதுபற்றி அறிந்த ஜமீன்தார். நானே நேரில் செல்கிறேன்' என்று கூற, மணமகனோ தான் செல்வதாகக் கூறிச் சென்றான். அவனிடமும், வாழை மரத்தை தர முடியாது என்று வேலாயுதம் மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன், அந்த மரத்தை வெட்ட அதில் இருந்து ரத்தம் வெளியேறியது. மேலும் அங்கு தோன்றிய நாகம் ஒன்று. மணமகனை தீண்டியது. இதையறிந்த ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் தோட்டத்திற்கு விரைந்து வந்து, தங்களின் பிழையை மன்னித்து விடும்படியும், மணமகனின் உயிரை காப்பாற்றும் படியும் வேண்டினர்.
இதையடுத்து வேலாயுதம் தன் கையில் இருந்த பிரம்பை, மணமகனின் மீது வைத்து 'முருகா..முருகா.. முருகா.. என்று மூன்று முறை சொல்லவும், அவர் நல்லபடியாக உயிர் பிழைத்தார் என்று இந்த ஆலயத்திற்கு தலவரலாறு சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில் வழிபட்டால், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்குவதுடன், விஷக்கடி உள்ளிட்ட பல நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. குலம் தழைக்க வாழை மரத்தையே உதாரணமாக சொல்வர். ஆனால் இங்கு இறைவனே வாழை மரமாக இருந்து அருள்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் வெம்பக்கோட்டை அருகே துலுக்கன் குறிச்சியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- ஜன்னல்கள், கூரைகள் தங்கம் கலந்த செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ளது தவளகிரி மலைப்பகுதி. இதையொட்டி அமைந்த ஒரு கிராமம் தான், 'சங்கு. திருமாலின் கரத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருச்சங்கின் பெயரில் அமைந்த இந்த கிராமத்தில், 'சங்குநாராயணர் கோவில்' என்ற பெயரில் திருமாலுக்கு ஒரு ஆலயமும் அமைந்திருக்கிறது. நேபாளத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவில், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயம் நேபாள நாட்டின் பவுத்த கட்டிடக் கலை அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கி.மு.325-ம் ஆண்டு, லிச்சாவி வம்ச மன்னன் ஹரி தத்தா வர்மனின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்த ஆலயத்தின் தரை தளத்தில் அமைந்த கல் தூண்களில், கி.பி. 496-ம் ஆண்டு முதல் கி.பி.524-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மகாதேவன் என்ற மன்னனின் படையெடுப்புகள் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கி.பி.1585 முதல் 1614-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்லன் என்ற அரசனின் பட்டத்து அரசியான கங்கா ராணி என்பவர். இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துள்ளார்.
இந்த கோவிலின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகள் அனைத்தும் தங்கம் கலந்த செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இதனை கி.பி.1708-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த பாஸ்கர மல்லர் என்ற மன்னன் செய்திருக்கிறான். கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட இந்த ஆலயம், நேபாள நாட்டிலேயே மிகவும் பழமையானது என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் திருமாலுக்கு உரிய சிற்பங்கள் அதிகமாக செதுக்கப்பட்டுள்ளன.
முதன்மை கோவிலின் பிரகாரத்தில் சிவன், கிருஷ்ணர், சின்ன மஸ்தா ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன. அந்த சன்னிதிகளின் வாசல்களின் சிங்கங்கள், சரபங்கள், யானைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளன.
திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் வகையிலான சிற்பங்கள் இந்த ஆலயத்தின் கூரையை தாங்கியபடி அமைந்துள்ளது. மேற்கு வாசலின் எதிரில் உள்ள தூணில் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவற்றின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த துண் கி.மு.464-ம் ஆண்டு லிச்சாவி இன மன்னன் மனதேவன் என்பவரால் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் சில முக்கிய சிற்பங்கள் போற்றுதலுக்குரியதாக உள்ளன.
அவற்றில் திருமாலின் வாகனமான கருடனின் சிற்பமும் ஒன்று. இது தவிர கருட வாகனத்தில் பறக்கும் திருமாலின் 7-ம் நூற்றாண்டு சிற்பம் சிறப்புற அமைந்துள்ளது. இந்த தெய்வத்தை 'சந்திர நாராயணர்' என்று அழைக் கிறார்கள்.
மேலும் கலைநயத்துடன் அமைந்த விஷ்ணு, லட்சுமி மற்றும் கருடன் சிற்பங்கள், சின்ன மஸ்தா என்ற தேவி, தன்னுடைய தலையை தானே கொய்து, பசித்திருக்கும் டாகினி மற்றும் வார்னீ என்ற யட்சிகளுக்கு ரத்தம் வழங்குதல், அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபசரிக்கும் கண்ணனின் விஸ்வரூபக் காட்சி, இரணியகசிபுவை வதம் செய்து பிரகலாதனைக் காத்த நரசிம்மர் ஆகியோரது சிற்பங்களும், இரண்டாம் அடுக்கில் அமைந்த சிவன் கோவிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெறுவதில்லை. ஏகாதசி, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கியமான திருவிழாவாக. சங்கு நாராயணர் யாத்திரை திருவிழாவும், மகாஷானன் திருவிழாவும் உள்ளன.
அமைவிடம்
காத்மாண்டு நகரத்தில் கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரின் வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும் சங்குநாராயணர் கோவில் அமைந்துள்ளது.
- குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது.
- எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது.
திருப்பாவை
பாடல்
குத்துவிளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்
விளக்கம்
குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது. யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலில் போடப்பட்ட குளிர்ச்சியான படுக்கையில் படுத்திருக்கும் கண்ணபிரானே! கொத்தான மலர்களைச் சூடிய கூந்தலை உடைய மனைவி நப்பின்னையின் மார்பின் மீது துயிலுகின்றவனே! எங்கள் குரல் கேட்டு வாய் திறந்து பேசமாட்டாயா? மை தீட்டப்பட்ட அகன்ற கண்களுடைய நப்பின் னையே! நீ உனது கணவன் கிருஷ்ணன் எவ்வளவு நேரம் தூங்கினாலும் எழுப்பி விடமாட்டாயா? நீ அவனை ஒரு நிமிடம் கூட பிரிய மறுக்கிறாயே.. இது உனக்கே சரியா? நாங்கள் கூறுவது தத்துவம் அல்ல. இது சரி அன்று! அவனை எழுப்பி விடு.
திருவெம்பாவை
பாடல்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றாங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென்ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்
விளக்கம்
சிவபெருமானே! உன்னிடம் ஓர் விண்ணப்பம் செய்கிறோம், கேட்டருள்வாயாக! 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற பழமொழி உண்டு. அது சிறிதும் மாறிவிடாதபடி அருள்செய்! எங்களுடைய மார்பகங்கள் உனது அடியார்களின் தோள்களைத் தவிர பிறர் தோள்களை தழுவாமல் இருக்க அருள்செய்வாய்! எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது. அடியார்களாகிய எங்கள் கண்கள் இரவும், பகலும் உன்னைத் தவிர வேறு எதையும் காணாமல் இருக்க நீ அருள்புரிய வேண்டும். இறைவா.. எங்களுக்கு இந்த வரத்தை அருள்வாயானால் சூரியன் எந்த திசையில் உதித்தால்தான் என்ன? எங்களுக்கு என்ன குறை? கவலையற்றவர்களாக உன் நினைவாகவே சிந்தித்து இருப்போம். உன்னை உணர்ந்து நீராடிப் பாடுவோம்.
- மதிப்புமிக்க முத்து மாலையை அவருக்கு பரிசளித்தார்.
- ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து உடைத்து தூக்கி வீசினார்.
`ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ, ஹனுமன் ப்ரசோதயாத்'
இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி, அதோடு ராம நாமத்தையும் பாராயணம் செய்து வந்தால், அனுமனிடம் இருந்து கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வடை மாலை ஏன்?
ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய பின்னர், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதில் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அனுமனும் கலந்துகொண்டார். அந்த சபையில், அனுமனுக்கு ஒரு உயர்ந்த பரிசை அளிக்க விரும்பிய சீதாதேவி, தன்னுடைய கழுத்தில் இருந்து ஒரு மதிப்புமிக்க முத்து மாலையை அவருக்கு பரிசளித்தார். அதை வாங்கிய அனுமன், அந்த மாலையில் இருந்து ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து உடைத்து தூக்கி வீசினார்.
இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அனுமனின் செய்கையைப் பற்றி சீதாதேவியே அவரிடம் கேட்கவும் செய்தார். அதற்கு அனுமன், "தாயே.. தாங்கள் பரிசளித்த முத்து மாலையில் இருந்த ஒரு முத்தில் கூட ராம ரசம் இல்லை. ராம ரசம் இல்லாத எந்த பொருளும் எனக்கு உயர்வானது அல்ல" என்றார். சீதாதேவி மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே அனுமனின் பக்தியை நினைத்து பூரித்துப் போயினர்.
அந்த அனுமனுக்கு, ராம நாமத்தைச் சொல்லிய படியே வடையை கைகளால் தட்டி, சுட்டு, பின் மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும். அதை கடித்துப் பார்க்கும் அனுமன், அதில் ராம ரசம் இருப்பின், அதை அணிவித்த பக்தர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவார் என்பது நம்பிக்கை.
சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களில் முக்கியமானவர், ஆஞ்சநேயர். இவர், ராமாயண இதிகாசத்தில் தலைவனாக வைத்து போற்றப்படும் ராமரின், முதன்மை பக்தனாகவும், அவரது தூதுவனாகவும் இருந்து பேறுபெற்றவர். ராம நாமத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக விண்ணுலக வாழ்வை மறுத்து, இந்த பூமியிலேயே தங்கியவர் என்ற பெருமைக்குரியவர்.
இத்தகைய சிறப்பு கொண்ட ஆஞ்சநேயருக்கு, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
கேசாரி என்ற மன்னன், அஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பல காலமாக குழந்தைப் பேறு கிடைக்காமல் இருந்தது. இதனால் அஞ்சனா, தனக்கு குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் செய்தார். இவர் தவம் செய்த இடம் `அஞ்சனாத்ரி மலை' என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
ஒரு முறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானும், பார்வதியும், குரங்கு உருவத்தில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அவர்கள் இருவரின் உடலில் இருந்தும் ஜோதி வெளிப்பட்டு ஒரே ஜோதியாகி நின்றது. அதனை வாயு பகவான் கொண்டு வந்து, தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனாவிடம் பிரசாதமாக கொடுத்தார். அதன்மூலம் பிறந்தவர்தான், 'ஆஞ்சநேயர்'. சிவனின் ஜோதியில் இருந்து பிறந்தவா் என்பதால், 'ருத்ர வீரிய சமுத் பவாய நமக' என்ற நாமம் அவருக்கு உண்டானது. இப்படி ஆஞ்சநேயர் அவதரித்தது, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த நாளில், 'அனுமன் ஜெயந்தி' கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் சக்தியில் இருந்து தோன்றியவர் என்பதால், ஆஞ்சநேயருக்கு இயல்பாகமாக அதீத சக்தி இருந்தது. அவர் குழந்தையாக இருந்த சமயத்தில், கிரகண காலம் ஒன்று வந்தது. அப்போது ராகு பகவான், சூாியனை பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். ராகு, சூரியனை நெருங்க நெருங்க சூரியனின் செம்மை நிறம் கூடியது. பூமியில் குழந்தையாக இருந்த ஆஞ்சநேயருக்கு, சூரியன் ஒரு பழம் என்று தோன்றியது. எனவே அதைப் பறித்து சாப்பிடும் நோக்கில், ஆஞ்சநேயர் வானில் எகிறி பறக்கத் தொடங்கினார்.
சிறிய குரங்கு ஒன்று சூரியனை நோக்கி வருவதைப் பார்த்த ராகு, அதை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் குழந்தையான ஆஞ்சநேயரோ, ராகுவை தன் காலால் தள்ளிவிட்டு, சூரியனை நோக்கி முன்னேறினார். இதனால் `கிரகணம் நடை பெறாமல் போய்விடுமோ' என்று அஞ்சிய ராகு, தேவர்களின் தலைவனான இந்திரனிடம் இதுபற்றி முறையிட்டார்.
உடனே அங்கு வந்த தேவேந்திரன், "அஞ்சனை மைந்தனே.. இது பழம் அல்ல; சூரியன். அதனை உன்னால் சாப்பிட இயலாது. உனக்கு வேறு பழம் தருகிறேன்" என்று எவ்வளவோ சொல்லியும் ஆஞ்சநேயர் கேட்கவில்லை. சிறு குழந்தை என்பதால் அடம் பிடித்தார்.
செய்வதறியாது திகைத்த தேவேந்திரன் ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு, தன்னுடைய ஆயுதமான வஜ்ஜிராயுதத்தால், ஆஞ்சநேயரின் தாடையில் தாக்கினார். இதனால் ஆஞ்சநேயர் பூமியில் போய் விழுந்தார். இந்திரன் தாக்கியதில் ஆஞ்சநேயரின் தாடை வீக்கம் கொண்டது. வடமொழியில் தாடைக்கு 'ஹனு' என்று பெயர். எனவே அவர் 'அனுமன்' என்று பெயர் பெற்றார்.
சிவபெருமானின் சக்தியை அஞ்சனாதேவியிடம் கொண்டு போய் சேர்த்தவர், வாயு பகவான். அதனால் அனுமனுக்கு 'வாயுபுத்திரர்' என்ற பெயரும் உண்டு. அனுமன் பிறப்பெடுக்க காரணமாக இருந்த வாயு பகவானுக்கு, ஆஞ்சநேயர் தாக்கப்பட்டது வருத்தத்தை அளித்தது.
எனவே அவர் தன்னுடைய காற்றை அடக்கிக்கொண்டு ஒரு குகைக்குள் போய் இருந்து கொண்டார். இதனால் பிரபஞ்சத்தில் எங்குமே காற்று இல்லாமல் அனைத்து ஜீவராசிகளும் துன்பத்தில் துடித்தன.
இதனால் பதற்றம் அடைந்த தேவேந்திரன், உடனடியாக வாயுவிடம் சென்று, "வாயுவே.. ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு வாயு பகவான், "ஆஞ்சநேயனை.. நீங்கள் தாக்கியது என்னை வேதனைப்படுத்திவிட்டது. எனவே அவனுக்கு அதிக சக்திகள் கொடுத்து பாதுகாக்க வேண்டும்" என்று வேண்டினார். இதையடுத்து இந்திரன், பிரம்மா, அக்னி உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து, 'இனிமேல் எந்த அஸ்திரங்களாலும் அனுமனை ஒன்றும் செய்ய முடியாது' என்ற வரத்தை அளித்தனர். எனவே ஆஞ்சநேயருக்கு 'அபராஜிதன்' என்ற பெயர் உண்டு. இதற்கு 'வெல்ல முடியாதவர்' என்று பொருள்.
விரதம் இருப்பது எப்படி?
அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலையில் நீராடி, உணவு உண்ணாமல் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். ராம நாமம் சொல்லி அவரை வழிபடுவதுடன், வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாத்தியும் வழிபாடு செய்ய வேண்டும். மேலும் வீட்டில் உள்ள ஆஞ்சநேயர் படத்திற்கு தீபாராதனை ஏற்றி வழிபடுங்கள். அனுமனின் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபடுவது சிறப்பு. காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை உண்ண வேண்டும். இரவில் ஆஞ்சநேயா் திருநாமங்களைச் சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.
(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்)
ஓம் மர்க்கடேசாய நம: பாதெள பூஜயாமி (கால்)
ஓம் மஹோத்ஸஹாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)
ஓம் மஹாக்ஷுத்ர நிபர்ஹணாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)
ஓம் ச'த்ருஸம்ஹாராய நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி )
ஓம் ராமதூதாய நம: ஊரூ பூஜயாமி (தொடை)
ஓம் மஹாதீராய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
ஓம் ருத்ரவீர்யாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)
ஓம் அஞ்சனாகர்பஸம் பூதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
ஓம் வாயுபுத்ராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)
ஓம் குமாரப்ரம்மசாரிணே நம: வக்ஷ பூஜயாமி (மார்பு)
ஓம் துஷ்டக்ரஹ விநாசாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (நெஞ்சு)
ஓம் மஹாபல பராக்ரமாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்)
ஓம் ஜிதேந்த்ரியாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸீதாசோ காபஹாரிணே நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)
ஓம் லக்ஷ்மணப்ராணதாத்ரே நம: பாஹும் பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் காகுஸ்த தூதாய நம: முகம் பூஜயாமி (முகம்)
ஓம் ருத்ரமூர்த்தயே நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)
ஓம் வஜ்ர தேஹாய நம: அக்ஷிணீ பூஜயாமி (கண்கள்)
ஓம் ராமப்ரியாய நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)
ஓம் கோடிந்து ஸூர்யப்ரபாய நம: சிர: பூஜயாமி (தலை)
ஓம் மாருதாத்மஜாய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)
அனுமனின் மாலா மந்திரம் ஓம் நமோ ஹரிராம தூதா, ஆஞ்ஜநேயா, அதிபல பராக்ரம சூரா, அந்தரண்டபகிரண்ட சண்ட பிரசண்ட உத்தண்ட கோலாஹல, அகோர சத்ரு சம்ஹாரா, வரம் தேஹி க்ருபா தயாளா, சிவ சிவ யோகாசன ப்ரியா, வாயு குமாரா, ஸீதா லக்ஷ்மி ஸுதா ஸுதா, சாயா பராக்ரம விஸ்வரூபா, ஓம்காரா ஆங்கார ஹ்ரீங்கார, சஞ்ஜீவராயா, ஸர்வ மோக்ஷகரணா, ஸஹஸ்ரநாம அலங்கிருத பூஷணா, ப்ரஹ்ம வரப்ரஸாத அனுகூலா, ப்ருண்ட கால ருத்ரா பக்தி விஸ்வாஸ சுத்த வசீகரா, ஸுக்ருத குணசீலா, அம்ருத காலஞான பரமாத்மா, பரம விமோசனா, பம்பம்பம், ரரர, ரிரிரி, நமச்சிவாய ஹனுமந்தா மம, வசி ஸ்வாஹா.
- ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.
- பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-19 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி இரவு 7.47 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 3.51 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். மதுரை மீனாட்சி கந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்தருளிய லீலை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-பாசம்
கன்னி-இன்பம்
துலாம்- கவனம்
விருச்சிகம்-கண்ணியம்
தனுசு- போட்டி
மகரம்-வெற்றி
கும்பம்-லாபம்
மீனம்-நன்மை
- இயேசு தரும் அமைதியே நிலையானதாக இருக்கிறது.
- இயேசு கிறிஸ்துவிடம் இருந்து அருளும் அமைதியும் உரித்தாகுக.
இயேசு விவிலியத்தில் பல போதனைகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதில் மிகவும் முக்கியமானது மத்தேயு நற்செய்தி 5-ம் அதிகாரத்தில் இடம் பெற்று இருக்கிற மலைப்பிரசங்கம். அதில் அவர் எட்டு பேறுகளைப் பற்றி பேசுகிறார். அவற்றில் ஒன்று தான் "அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுவர்". (மத்தேயு 5:9)
கடவுளின் மக்கள் யார்? என்கிற பலரது கேள்விக்கு பதிலாக அமைகிறது இயேசுவின் இந்த இறைவார்த்தை. ஜெபம் செய்பவர்களும், ஆலயத்திற்கு செல்பவர்களும், இறைவார்த்தையை வாசிப்பவர்களும் மட்டும் கடவுளின் மக்களாக மாற முடியாது. அதனோடு அமைதியை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எடுத்துச்சொல்கிறது இந்த இறைவார்த்தை. அமைதியை ஏற்படுத்துவது என்பது இன்றைய காலச்சூழலில் பெரும் சவாலாகவே இருக்கிறது. அமைதியை ஏற்படுத்த பல முயற்சிகள் தேவைப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அதனை முதலில் பொறுத்துக்கொள்ள வேண்டும். எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? எப்படி எனது கொள்கையை விட்டுக்கொடுப்பது? என்ற கேள்வியினாலேயே பல சண்டைகள் குடும்பங்களிலும், ஊரிலும், உலகிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனால் வருகிற பின்விளைவுகளை எவருமே சிந்திப்பது இல்லை.
பொறுமை நம்மில் உருவாகிட எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும். ஏன் அன்பு செய்ய வேண்டும்?. ஏனெனில், 'இறைவன் நம் அனைவரையும் அன்பு செய்து அவரது சாயலில் படைத்து இருக்கிறார்' (தொடக்கநூல் 1:26). எனவே நாம் அனைவரும் சகோதர-சகோதரிகள். அதனால் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும். இதனையே இயேசு, "உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று (லூக்கா 10:27) கூறுகிறார்.
ஒருவரை முழுமையாக அன்பு செய்கிறபோது அவர் என்ன தவறு செய்தாலும் அவரது இயலாமைகளோடு ஏற்றுக்கொள்ள முடியும். இந்த ஏற்றுக்கொள்ளுதல் நடந்து விட்டால், மன்னிப்பு நிகழ்ந்து விடும். மன்னிப்பு நிகழ்ந்துவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்து எல்லா தரப்பிலும் அமைதி நிலவிடும். அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னால் முதலில் அமைதி நம்மிடம் இருக்க வேண்டும்.
இதனையே மனஅமைதி என்று கூறுவர். இந்த அமைதியை நமது செல்வத்தாலும், புகழ்ச்சியாலும் பெற முடியாது. நாம் செய்யும் நற்செயல்களால் மட்டுமே பெற முடியும். அதிலும் இந்த உலகம் தரும் அமைதி நிலையானது அல்ல. மாறாக, இயேசு தரும் அமைதியே நிலையானதாக இருக்கிறது.
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன் சீடர்களை சந்தித்ததும் அவர் கூறிய முதல் வார்த்தை 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக'. இயேசு தன் சீடர்களை அழைத்து அவர்களை இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பும் போது அவர்களிடம், "நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் முதலில் அவர்களுக்கு அமைதியை தெரிவியுங்கள்" என்றார். இவ்வாறு இயேசு சென்ற இடம் எல்லாம் அமைதியை ஏற்படுத்தினார்.
தன் சீடர்களையும் அமைதியை ஏற்படுத்தச் சொன்னார். அதனை பின்பற்றியே திருத்தூதரான பவுல் மக்களுக்கு கடிதம் எழுதுகிற போது தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடம் இருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக (உரோமையர் 1:1) என்று எழுதியே தொடங்குவார்.
இவ்வாறு அமைதியை ஏற்படுத்த விவிலியம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இதனை பின்பற்றிய பிரான்சிஸ் அசிசியார் என்னும் துறவி, விவிலியத்தின் அடிப்படையில் அமைதிக்கான ஜெபத்தை இவ்வாறு எழுதியுள்ளார்:
"இறைவா, என்னை அமைதியின் கருவியாக்கும். எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும், எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பையும், எங்கே அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கே நம்பிக்கையையும், எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும், எங்கு மனக் கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும் விதைத்திட அருள்புரியும். என் இறைவா, ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும், புரிந்து கொள்ளப்படுவதைவிட புரிந்துகொள்ளவும், அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரம் அருள்வாய்".
இதனை நமது வாழ்வில் பயிற்சி செய்யும் போது அமைதியின் கருவிகளாக மாற முடியும். இவ்வாறு முயற்சி செய்கிற போது கடவுளின் மக்களாக மாற முடியும். இந்நாள் வரையிலும் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோமா? இனியாவது அந்த முயற்சியில் ஈடுபடுவோமா? சிந்திப்போம்! செயல் படுவோம்.
- எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான் இறைவன்.
- இறைவன் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம்.
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தனது சக்தியால், அருள் வளத்தால் எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான். அவனது அருட்பார்வையின் மூலம் மட்டுமே அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழ முடியும். இந்த உலக வாழ்க்கை மட்டு மின்றி மரணத்திற்கு பிறகு வரும் மறுமை வாழ்விலும் அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே பாவமன்னிப்பு கிடைக்கும்.
எனவே இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் பாதுகாப்போடு நமது வாழ்வை அமைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் வழிகாட்டுகின்றன. அது குறித்து காண்போம்.
இறைவனின் நெருக்கத்தையும், அருளையும் பெற வேண்டும் என்றால் முதலில் நமது சிந்தனையில், செயல்களில் இறையச்சம், இறை உணர்வு வெளிப்பட வேண்டும். இறைவன் காட்டிய வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம். இதற்காக நாம் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்து அவனை புகழ்வது அவசியம்.
அல்லாஹ் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ, அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்.
அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்.
அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்". (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி) அல்லாஹ்வின் நல்லடியார்களே, ஏக இறைவன் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை மேற்கண்ட இந்த நபி மொழி மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். இதையே திருக்குர்ஆன் (2:152) வசனமும் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது:
"அல்லாஹ் கூறுகின்றான், நீங்கள் என்னை நினைவு கூருங்கள்; நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்".
இறைவனை நினைவு கூர்வது கடினமான செயல் அல்ல. மிக மிக எளிய செயல். ஆனால் நம்மில் பலர் மற்ற பல சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும், பயனில்லாத காரியங்களுக்கும் அதிக நேரம் செலவிடுகின்றோம். குறிப்பாக மொபைல் போன்கள் பார்ப்பதிலும், அதில் உள்ள தீய நிகழ்வுகளை காண்பதிலும் ஆர்வமாக உள்ளோம். இன்னும் சிலர் இரவுகளில் நீண்ட நேரம் விழித்திருந்து சமூக வலைத்தளங்களில் தங்கள் பொன்னா நேரத்தை வீணடிக்கின்றார்கள்.
இந்த செயல்களால் வீணாகப்போவது அவர்களது நேரம் மட்டுமல்ல. அவர்களின் மன நலமும், உடல் நலமும் கெட்டுப்போகின்றது.
இன்னும் சிலர் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில், குடும்பத்தை குலைக்கும் காட்சிகள் கொண்ட தொடர்களில் தங்களை தொலைத்து நிம்மதி இழக்கின்றனர்.
இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற தொலைபேசி, தொலைக்கட்சிகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் சில மணித்துளிகளை ஒதுக்கி இறைவனை நினைவுகூர்ந்து பாருங்கள். உங்கள் உள்ளம் இறையச்சத்தால் ஒளி பெறும். இறைவனின் அருட்கொடையும், பாதுகாப்பும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தின் மீதும் அருவியாய் கொட்டும்.
இதற்கு ஆதாரமாக விளங்கும் இந்த நபி மொழியைக்காண்போம்...
"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். அவை:
1) நீதி மிக்க ஆட்சியாளர்.
2) இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3) தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.
4) பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ளும் உள்ளம் உடையவர்.
5) இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.
6) அந்தஸ்தும் அழகும் நிறைந்த ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்" என்று கூறியவர்.
7) தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் ரகசியமாகத் தர்மம் செய்தவர்"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி). "நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் என்று திருக்குர்ஆன் (2:153) குறிப்பிடுகின்றது.
எனவே, இறைவனின் நல்லடியார்களே நாம் தினமும் அல்லாஹ்வை நினைவு கூர்வோம், அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அந்த இறைவனின் பாதுகாப்பையும், அருள் வளத்தையும் பெறுவோம், ஆமின்.
- நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில்.
- நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார்.
கோவில் தோற்றம்
பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவிலில், நித்திய சொர்க்க வாசல் அமைந்துள்ளது. இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தா்கள், பின்னர் சொக்கவாசலைப் பயன்படுத்தி வெளியே வருவதை தினமும் செய்கிறார்கள். எனவே இத்தலம் நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வெங்கடேசப் பெருமாள், `தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசலைப்போல நுழைவுவாசல் வைத்து ஒரு கோவில் கட்டு' என பணித்தார். மேலும் அவர் கூறுகையில், `இத்தலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கலியுக வெங்கடேசப் பெருமாளாகவும், மகாலட்சுமி சமேதராக சதுர்புஜ வரதராஜப் பெருமாளாகவும் இரு கோலத்தில் எழுந்தருளி காட்சி தருவேன்.
இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்ய சொர்க்க வாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனையும், வைகுண்ட பதவியையும் தந்தருள்வேன்' என்று கூறி மறைந்தாராம்.
அதன்படி தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள், மராட்டிய சிற்பக்கலைகளின் கருவூலமாக திகழும் வகையில் இக்கோவிலை கட்டினார்கள். இத்தலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் புரட்டாசி சனிக்கிழமைதோறும் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.
தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். இதன் காரணமாக இக்கோவில் 'நித்திய சொர்க்கவாசல் கோவில்' என அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள், இத்தலத்தில் ஆண்டு முழுவதும் நித்ய சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வரலாம்.
இந்த கோவிலில், நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார். இதன் மேல் தளத்தில் கல்லினால் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த சன்னிதிக்கு தனி விமானமும், கலசமும் உள்ளது. இங்குள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
வைணவத் திருக்கோவிலான இந்த ஆலயத்தில், சிவாலயங்களில் காணப்படும் கணபதி, கொற்றவை, பிச்சாடனர், நடராஜர் ஆகிய தெய்வங்கள் கருவறை கோஷ்டத்தில் இடம் பெற்று உள்ளன. மேலும் சிவாலயங்களில் சிவனுக்குரிய வில்வ மரம் இந்த கோவிலில் மகாலட்சுமி அம்சமாகவும், தல விருட்சமாக இருப்பது அபூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
- நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே!
- திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமான்.
திருப்பாவை
பாடல்
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
மதயானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத வலிமையான தோள்களை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னையே? நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே! கதவைத் திறப்பாயாக! பொழுது புலர்வதற்கு அறிகுறியாக கோழிகள் கூவும் சத்தம் எங்கும் கேட்கிறது. குருகத்தி கொடி பந்தல் மேலே அமர்ந்து, குயில்கள் கூவிக்கொண்டு இருக்கின்றன. மென்மையாக பந்து விளையாடும் அழகிய விரல்களை உடையவளே! உன் கணவனின் புகழ்பாட வந்துள்ளோம். நீ கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலி செய்ய, செந்தாமரை மலர் போன்ற சிவந்த கரங்களால் கதவைத் திறப்பாயாக!
திருவெம்பாவை
பாடல்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமானின் திருவடிகளை ரத்தின கற்கள் பதித்த மகுடத்தோடு தேவர்கள் பணிந்து வணங்கினர். இறைவனின் ஒளிக்கு முன்னர் அவர்கள் அணிந்துள்ள ரத்தினங்கள் ஒளியை இழந்தன. அதைப்போல வானில் சூரியன் தோன்ற அதன் கதிர்களால் இருள் நீங்கியது. நட்சத்திரங்கள் தனது ஒளியை இழக்கும் காலை வேளையில், ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும், வானாகவும், மண்ணாகவும், உலகம் கடந்த பொருளாகவும், அடியார்களுக்கு அமுதமாகவும் விளங்கும் இறைவனின் திருவடிகளை பாடிக்கொண்டே பூக்கள் நிறைந்த பொய்கையில் பாய்ந்து நீராடுவோம்.






