என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது.
    • பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார்.

    சேர மன்னர் ஒருவரின் ஆட்சிக் காலத்தில், அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலாளிக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழிகளில் ஒருத்தி ஆவாள். அவள் அரசியிடம் ஓடிச்சென்று, `நான் தான் குற்றவாளி. என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு, அவரை விடுதலை செய்யுங்கள்' என்றாள்.

    விசாரணை மன்னன் முன்பாக வந்தது. அப்போது காதலனோ, `அவள் மீது எந்த தவறும் இல்லை. நான்தான் குற்றவாளி. எனக்கு தண்டனை கொடுங்கள். அவளை விட்டு விடுங்கள்" என்றான்.

    காதலர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர், இப்படிச் சொன்னதால் `யார் குற்றவாளி?' என்பதை முடிவு செய்வதில் மன்னன் தடுமாறினான். பின்னர் அமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முற்பட்டான்.

    அதன்படி கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று கருதினர். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது நிச்சயம் என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அரண்மனைக் காவலனும், அவனது காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர ஆடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள். அவள் அங்கிருந்த அரசன் மற்றும் அரசியின் முன்பாக நின்று, `சலவைக்கு போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் இருந்து, 'இந்த காதணியை என் ஆலயத்தில் இருக்கும் அரசனிடம் கொண்டு போய் கொடு' என்ற கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதனால் இங்கே ஓடி வந்தேன்" என்று கூறி அந்த காதணியை மன்னனிடம் கொடுத்தாள்.

    தன் தவறுக்கு வருந்திய மன்னன், அரண்மனைக் காவலனையும், அவனது காதலியையும் விடுவித்து அவர்களிடம் மன்னிப்பும் கேட்டான். அரசியோ, தன்னுடைய இரண்டு காதணிகளையும், கரிக்ககம் சாமுண்டி தேவிக்கே அர்ப்பணம் செய்துவிட்டாள்.

    • ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது கோவிலின் தனிச்சிறப்பு.
    • வாழ்வில் அமைதி நிலவவும் இந்த அன்னையை வழிபடுகிறார்கள்.

    கோவில் தோற்றம்

    சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் பலரும், தாங்கள் ஆட்சி புரிந்த பகுதிகளில் தெய்வங்களுக்கான வழிபாட்டு தலங்களை அமைத்தனர். அதற்கு முன்பாக மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், ஒரு மலைப் பிரதேசத்தில் 108 சிவன் கோவில்களையும், 108 அம்பாள் கோவில்களையும் நிறுவினார். அந்த தேசம்தான் தற்போதைய கேரளம். கேரள நாட்டை ஆட்சி செய்த சேர மன்னர்கள், சிவன் கோவில்களுடன், அன்னை பராசக்தியை பகவதியாக, அம்மனாக, சாமுண்டிதேவியாக பல இடங்களில் நிறுவி, அந்த அம்மன்களை, அந்தந்த ஊர்களின் பெயருடன் இணைத்து அழைத்து வழிபட்டு வந்தனர்.

    இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானதுதான், `தேவி கரிக்கத்தம்மா' என்று அழைக்கப்படும், கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில். சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயம், பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இவ்வாலயத்தில் உக்கிர சொரூபிணியாக வீற்றிருக்கும் ரத்த சாமுண்டி அம்மன், சத்தியத்தை நிலைநாட்டும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

     தல வரலாறு

    வேதங்களைக் கற்றறிந்த ஞானி ஒருவர், யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடனாக ஏற்று, அவருக்கு பல போதனைகளையும், அருள்வாக்கையும் அருளினார். தன் குருவைப் போல யோகீஸ்வரனும், பராசக்தியை வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை யோகீஸ்வரனின் முன்பு, ஒரு சிறுமி வடிவத்தில் பராசக்தி தோன்றினாள். அந்த சிறுமியை, குருவும் சீடனுமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.

    அப்போது அந்த சிறுமி, அவர்களுக்கு அம்பிகையாக காட்சியளித்து, "நான் இங்கேயே குடிகொள்வேன்" என்று கூறி மறைந்தாள்.

    இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன், ஒரு அம்மன் சிலையை சிறுமி மறைந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே தற்போது 'கரிக்ககம் சாமுண்டி'யாக அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை 'பராசக்தி' என்றும், 'பகவதி' என்றும், `பரமேஸ்வரி' என்றும் அழைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

    ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு. அதன்படி சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக இத்தல அம்மனை, பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரங்களாக உள்ளனர். இவர்களின் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை. ஆலய கருவறையில் சாமுண்டி தேவியை விக்கிரகமாக வழிபாடு செய்கின்றனர்.

    தீராத நோய் நீங்கவும், வாழ்வில் அமைதி நிலவவும் இந்த அன்னையை வழிபடுகிறார்கள். இந்த அம்மனுக்கு `கடும் பாயசம்' நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை போன்றவை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள்.

    காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ச்சியாக 13 வெள்ளிக்கிழமைகள், சாமுண்டி தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுவது ஐதீகமாக உள்ளது. உடல் நலன் வேண்டியும், பயம் விலகவும் இந்த ஆலயத்தில் `கருப்பு கயிறு' மந்திரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிரமான வடிவத்தில் சுவர் சித்திரமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதியில் சத்தியம் செய்வது ஒரு சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் அரசாங்கம், காவலர்களுக்கு பயப்படாதவர்கள் கூட, தெய்வங்களுக்கு பயந்து நடந்தனர் என்பது உண்மை. அதை அடிப்படையாகக் கொண்டே, ஆலயத்தில் சத்தியம் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் வந்திருக்கிறது.

    இந்த சன்னிதியில் நடைபெறும் பூஜைகளில் முக்கியமானது, `சத்ரு சம்கார பூஜை'. பகைமையை அழிக்கும் பூஜை என்பது இதன் பொருள். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம் அகலவும், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கவும் ரத்த சாமுண்டி தேவி சன்னிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

    பால சாமுண்டி தேவி, சாந்த சொரூபிணியாக சுவர் சித்திரமாக இருந்து அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இந்த அம்மன் சன்னிதியில் வழிபாடு செய்யலாம்.

    இந்த ஆலயத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி நாகர்வனம், சாஸ்தா, குரு பகவான், யோகீஸ்வரன், அன்ன பூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும், நவக்கிரகங்களும் காணப்படுகின்றன. இங்கு ஆண்டுதோறும் தேவியின் நட்சத்திரமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7-ம் நாளில் பொங்கல் விழா நடத்தப்படும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (16-ந் தேதி) சனிக்கிழமை தொடங்கி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. விழாவின் இறுதி நாளில் பொங்கல் விழா நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரி சண்டை பயின்ற நிபுணர்களின் களரிக் களமாக இந்த இடம் விளங்கி இருக்கிறது. களரிக்களம் என்பதே மருவி, `கரிக்ககம்' என்றானதாகவும் சொல்கிறார்கள். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதிபுத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி கோவில். திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    ரமலானில் திறக்கப்படும் வானின் கதவுகள்

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    புனித ரமலானில் நோன்பாளிகளுக்காக வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்களின் நோன்பும், மாண்பும், வணக்கமும், வழிபாடும், வானம் வரைக்கும் கடந்து, பிறகு இறைவனிடம் சென்றடைந்து விடுகிறது.

    ரமலான் அல்லாத மாதங்களிலும், நோன்பு அல்லாத வணக்கங்களுக்காகவும் வானங்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:-

    நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 'அல் லாஹூ அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வசுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (இறைவன் மிகப்பெரியவன் என்று பெருமைப்படுத்துகின்றேன்.

    எல்லாப்புகழும் இறைவனுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகின்றேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கின்றேன்)' என்று கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் 'இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், 'நான் தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன' என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதில் இருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.' (நூல்: முஸ்லிம்)

    மேலும், ஒவ்வொரு நாளும் மனிதர்களின் செயல்களை கண்காணிக்கும் பொறுப்புவானவர்களுக்கு சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரு பிரிவினராக செயல்படுகின்றனர். மனிதனின் பகல் நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் அதிகாலை நேரத்தில் வருகை புரிவர். இரவு நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் மாலை நேரம் வருகை புரிவர். அப்போது இந்த இரண்டு நேரங்களிலும் வானங்கள் திறக்கப்படுகின்றன.

    மனித செயல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன . 'ஐந்து இரவுகளில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அவை: வெள்ளி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தில் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு ஆகும் என இமாம் ஷாபி (ரஹ்) கூறுகிறார்.

    'ஒருவர் மனத்தூய்மையுடன் 'லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினால், அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர் பெரும்பாவம் புரிவதை தவிர்த்திருந்தால்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ஒருவர் தொழுகையின் மூலம் பாவமீட்சி பெற்றாலும் வானத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. மேலும் அவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்:அஹ்மது)

    'இரவின் மூன்றாம் பகுதியின் நிறைவான நேரத்தில் இறைவன் முதல் வானத்தின் பக்கம் இறங்கி வருவான். அப்போது வானத்தின் வாசல்களை திறப்பான். பிறகு இறைவன் தமது திருக்கரத்தை விரித்து வைத்து என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு கேட்டது வழங்கப்படும்' என்று கூறுவான். இது அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: அஹ்மது).

    வானத்தின் வாசல்கள் திறந்திருக்கும் இந்த ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    • பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம்.
    • கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.

    முருகப்பெருமானை எண்ணி வணங்கும் பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம். இது மாதம் ஒரு முறை வரும். சில மாதங்களில் இரண்டு முறையும் வரலாம். அதே போலவே திதியின் அடிப்படையில் முருகப்பெருமானை எண்ணி உபவாசம் இருந்து வழிபடும் நாள் ஆறாவது திதியான சஷ்டி நாள்.

    இந்த நாளில் காலை முதல் உணவு ஏதும் அருந்தாமல் அல்லது எளிதான பால், பழம் மட்டும் அருந்தி, முருகப்பெருமானுடைய தோத்திரங்களையும், திருப்புகழ் முதலிய நூல் களையும் பாராயணம் செய்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றி, முருகப்பெருமான் படத்திற்கு மலர் மாலைகள் சாற்றி, தூபதீபம், நிவேதனம் செய்து, இயன்றால் அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். விசாகம் குருவின் உடைய நட்சத்திரம் அல்லவா. இன்றைய தினம் கீழ்க்காணும் கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.

    "உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே''.

    வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரம் கார்த்திகை (கிருத்திகை). பெரும்பாலான பெருமாள் கோயில்களில் திருமங்கை யாழ்வார் சந்நதி இருக்கும். அங்கே இன்று திருமங்கை யாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். இன்றைய தினம் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை பூஜை வேளையில் சேவிக்க நற்பலன்கள் விளையும்.

    "மின்னுமா மழை தவழும் மேகவண்ணா

    விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று

    அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

    அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை

    மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்

    மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

    பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்

    பழ வினையை முதலரிய வல்லார் தாமே''

    108 திவ்ய தேசங்களில் ஒன்று, மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் கோவில். அங்கே இன்றைய தினம் கூடல் அழகர் பெருமாள் ஆண்டாள் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

    • இன்று சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 2 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி நாளை விடியற்காலை 4.11 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.46 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ரசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-பயிற்சி

    கடகம்-வரவு

    சிம்மம்-லாபம்

    கன்னி-பரிவு

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-கடமை

    தனுசு- கண்ணியம்

    மகரம்-கட்டுப்பாடு

    கும்பம்-நன்மை

    மீனம்-பணிவு

    • திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது.
    • பங்குனி திருவிழா 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சோழிங்கநல்லூர்:

    திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 26-ந்தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவைமுன்னிட்டு தினந்தோறும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு விடையூர்திக் காட்சி (ரிஷபவாகனம்), பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சந்திரசேகரர் தேர் திரு விழாவும், பிரம்மனுக்கு காட்சி அருளலும் நடைபெற உள்ளது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.

    24-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னி மரக்காட்சி நடைபெறுகிறது. 25-ந்தேதி திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திர சேகரர் கடல் நீராடல், இரவு 8 மணிக்கு திரிபுர சுந்தரி, தியாகராஜர் சுவாமி திருமண விழா, இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் நடக்கிறது.

    தெப்பத்திருவிழா

    26-ந்தேதி மாலை சந்திர சேகரர் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, தியாகராஜர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடன காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக் குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதி உலா நடைபெறும். அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 23-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்ச்சியானதேரோட்டம் 24-ந்தேதி மாலை 4 மணிக்கு கிரிவீதியில் நடைபெறுகிறது. 27-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷம் முழங்க பழனி கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பழனி கோவில் அடிவாரம், கிரி வீதி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரகங்களின் சஞ்சாரத்தின் படி ராசுபலன் கணிக்கப்படும்.
    • 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும்.

    ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

    அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொருள் இழப்பு ஏற்படுவதற்கும், நஷ்டம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பேருந்தில் ஆட்டோவில் பயணம் செல்லும் போது உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி செய்யும் வேலை நல்லபடியாக செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். எந்த பிரச்சனையும் இல்லை.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மன பயம் இருக்கும். எடுக்கக்கூடிய முடிவில் தடுமாற்றம் இருக்கும். முயற்சி முழுமையாக வெற்றியை கொடுக்காது. ஆகவே, எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மனதில் உள்ள பிரச்சனையை வெளிப்படையாக பேசுங்கள். வெளிப்படையாக பேசும் போது தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் பார்ட்னரை முழுசாக நம்பாதீங்க. பண பரிவர்த்தனை கணக்கு வழக்குகளை நீங்களும் கொஞ்சம் பாருங்க.

    மிதுனம்

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான கடன் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்யுங்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை தரும்.

    கடகம்

    கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக கற்பனை செய்து வந்திருந்த விஷயங்கள் இன்று நிஜத்திலும் நடக்கும். மனது சந்தோஷம் அடையும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சண்டை சச்சரவுகள் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் போட்டி பொறாமைகளும் இருக்கும். நண்பர்களும் எதிரிகளாக மாற வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீர்கள். மேலதிகாரிகளிடம் கொஞ்சம் பணிவாக பேசுவது நல்லது.

    கன்னி

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். உங்களுடைய செயலை பாராட்டி பரிசுகளும் வழங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கலைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள்.

    துலாம்

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்க போகின்றது. மனசு ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இறையருளை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வந்த பிரச்சனைகள் குறையும். நல்ல முன்னேற்றம் இருக்கும் கடன் பிரச்சனை தீரும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் கூட உங்களுக்கு பிரச்சனை கொடுக்க சில பேர் இருப்பார்கள். அதையெல்லாம் சமாளிக்க தேவையான திறமை உங்களிடத்தில் இருந்தாலும், சின்ன சின்ன சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும். முன் கோபப்படாதீங்க. பிரச்சனைகளை பொறுமையாக எதிர்கொள்ளுங்கள்.

    தனுசு

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்து வந்திருந்த சொந்த பந்தங்கள், சொத்து பிரச்சினைகள் கூட ஒரு முடிவுக்கு வரும். மாலை நேரம் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

    மகரம்

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மாணவர்களின் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாமியார் மருமகள் சண்டை பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். குழப்பங்கள் தெளிவு பெறும்.

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல வருமானம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட தொழிலில் திறமையாக செயல்பட்டு லாபத்தை ஈட்டுவீர்கள். பேச்சால் அடுத்தவர்களை கவரக்கூடிய வித்தையை இன்று வெளிகாட்டுவீர்கள். வெற்றி காண்பீர்கள்.

    மீனம்

    மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் பெருகும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகளும் உண்டு. நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபட தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் இருக்கும்.

    • பானக்காரம் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
    • பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல் காற்று வீசும். இந்த கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானக்காரம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டை தணித்துக் கொள்வார்கள்.

    இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக `பானக்காரம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் `பானக்காரம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவது தான் `பானக்காரம்' ஆகும். இந்த பானகாரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் இந்த பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    • ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பார்கள்.
    • சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம்.

    ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பார்கள். சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அனைவரும் அறிவோம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.

    பூஜைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது நல்லது. வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

    மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

     வில்வ வழிபாடும் பயன்களும்

    * சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச்சமமாகும்

    * வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.

    * வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் என பல பெயர்களால் சுட்டப்படுகிறது

    * மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாக கூறுகின்றன

    * வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் மூன்று குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் என சிறப்பு பெயர் பெற்றது.

    * சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர். அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயமலையில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாக தனக்கு செய்யப்படும் பூஜைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டார்.

    * ஏனெனில் வில்வம் சளியால் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும், துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    * வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது. சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.

    * வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்து பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

    * வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது. நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.

    * கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

    * 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

    * சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாட்சத்தைப் பெறமுடியும்.

    * வில்வமரத்தை முறைப்படி விரதம் இருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    * வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.

    * ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது லட்சம் ஸ்வர்ண புஸ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

    * வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்தி குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

     வில்வம் பறிக்கும் சொல்ல வேண்டிய மந்திரம்?

    சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

    ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

    ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:

    அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

    பொருள் விளக்கம்

    போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும்,லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக் கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

     வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

    வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு வில்வம் ஒரு அருமருந்தாகும்.

    • எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.
    • இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார்.

    அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி கீழ்ப்படிந்து அவரிடம் நாம் சரணடையும் போது நமக்கு ஆறுதல் தரும் தேவனாக அவர் இருக்கிறார்.

    சிலநேரங்களில் நாம் பயணிக்கும் சூழ்நிலைகளில் போராட்டம் இருக்கும், வேதனைகள், கண்ணீர், கஷ்டங்கள் இருக்கும். ஆனாலும் இயேசுவை நம்பி பயணத்தை தொடரும் பொழுது, நிச்சயமாக நாம் கண்ணீர் விடும் காரியங்களில், வேதனைப்படும் காரியங்களில், பயப்படும் காரியங்களில் எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.

    வேதாகமத்தில் ரூத் என்ற குணசாலியான பெண்மணி பற்றி கூறப்பட்டுள்ளது. இவள் மோவாப் என்ற தேசத்தில் தன் கணவன் மற்றும் மாமியாருடன் நன்றாக வாழ்ந்து வருகிறாள். இவளுடைய கணவர் திடீரென மரித்துப்போனார். இவளுடைய மாமியார் பெயர் நகோமி ஆகும். இந்த நகோமிக்கும் கணவர் இல்லை.

    நகோமி தன்னுடைய மகன் இறந்ததும் தன் மருமகளை பார்த்து 'நீ உன் தாய் வீட்டுக்கு சென்று விடு, அங்கு கர்த்தர் உனக்குத் தரும் புருஷனுடன் சுகமாய் வாழ்ந்திரு' என்று சொல்லி மருமகளை வாழ்த்தி முத்தமிட்டாள்.

    அப்பொழுது ரூத் சத்தமிட்டு அழுது அவளைப்பார்த்து 'உன் கூடவே நானும் வருவேன்' என்றாள். `நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்குமிடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய தேவன் என்னுடைய தேவன், மரணமே அல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னை பிரிக்காது', என்று கூறி மாமியாருடன் செல்வதில் மன உறுதியாய் இருந்தாள்.

    பின்னர் இருவரும் இஸ்ரவேல் தேசத்தில் உள்ள நகோமியின் சொந்த ஊரான பெத்லகேமுக்கு வந்தார்கள். நகோமியைப் பார்த்த பெத்லேகம் ஊர் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பேசினார்கள். நகோமி அவர்களிடம், `நான் நிறைவுள்ளவளாக இங்கிருந்து போனேன். கர்த்தர் என்னை வெறுமையாய் திரும்பி வரப்பண்ணினார். சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார். கர்த்தர் என்னை சிறுமைப்படுத்தினார்', என்று மிகுந்த வேதனையுடன் அவர்களிடம் தனக்கு நடந்ததை எல்லாம் கூறினாள்.

    அதன்பின்னர் ரூத் பிழைப்பிற்காக தோட்டத்தில் வேலை செய்வதற்கு சென்றாள். அவள் வேலை செய்யச் சென்ற வயல்வெளி போவாஸ் என்பவருடையது. இவர் நகோமியின் உறவுக்காரர். போவாஸ் ரூத்தைப் பார்த்து தன் தோட்ட மேலாளரிடம் 'இந்தபெண் எந்த இடத்தைச் சார்ந்தவள்' என்று கேட்டான்? அதற்கு அவன்' இவள் மோவாப் தேசத்தில் இருந்து நகோமி கூட வந்த மோவாபிய தேசத்துப்பெண்' என்று கூறி அவளுடைய எல்லா விவரத்தையும் தெரிவித்தான்.

    போவாஸ் ரூத்தைப் பார்த்து, `மகளே நீ வேறு வயலில் வேலைக்குப் போகாமலும், இந்த இடத்தை விட்டு போகாமலும், இங்கேயே என் ஊழியக்கார பெண்களோடு இருந்து வேலை செய். ஒருவரும் உனக்கு தீங்கிழைக்காதபடி வேலைக்காரருக்கு கட்டளையிட்டு இருக்கிறேன்' என்றார்.

    அப்பொழுது ரூத் தரையிலே முகம் குப்புற விழுந்து வணங்கி 'நான் அந்நிய தேசத்தவளாயிருக்க நீர் என்னை விசாரிக்கும்படி, எனக்கு எதனால் உம்முடைய கண்களில் தயை கிடைத்தது' என்றாள்.

    அதற்கு போவாஸ் `உன் புருஷன் மரணம் அடைந்தபின்பு நீ உன் மாமியாருக்காக செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் சொந்த தேசத்தையும் விட்டு முன்பின் அறியாத ஜனங்கள் இடத்தில் வந்தது எல்லாம் எனக்கு விவரமாய் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்கு தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளை இடுவார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக' என்றார்.

    பின்னர், போவாஸ் தன்னுடைய வாழ்க்கைத்துணையாக இந்த குணசாலியான ரூத்தைத் தெரிந்து கொண்டார். இவர்களுடைய வம்சத்தில் தான் இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் பிறந்தார். என்ன ஒரு ஆனந்தம் பாருங்கள்.

    பிரியமானவர்களே, இந்த வேதாகம சம்பவத்தில் ஏராளமான காரியங்களை நாம் பார்க்கிறோம். மாமியாரிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மருமகள், மருமகளிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மாமியார். இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நடந்துள்ள கசப்பான, கண்ணீர் சிந்தும் அனுபவங்கள். இவை எல்லாவற்றிலும் இருந்து கர்த்தர் இவர்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டி, மகிழ்ச்சியடைய பண்ணுகிறார்.

    இது போலத்தான் நம்முடைய வாழ்விலும் நமக்கு வருகின்ற வேதனைகள், கண்ணீர்கள், இழப்புகள் எல்லாவற்றிற்கும் பதிலாக நித்திய பேரின்ப மகிழ்ச்சி அளிக்க இயேசு வல்லவராய் இருக்கிறார். நம்முடைய துன்பத்துக்கும், அலைச்சல்களுக்கும், கண்ணீர்களுக்கும், சிறுமைப்பட்ட நாட்களுக்கும் சரியாய் நம்மை மகிழ்ச்சியாக இருக்கச்செய்வார், ஆமென்.

    • அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது.
    • வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம்.

    ஒரு வீடு அல்லது மனை அமைப்புக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் வாஸ்து ரீதியான குறைகள் இருக்கும்போது அதன் உரிமையாளருக்கு பல்வேறு சிக்கல்கள் வரலாம் என்று வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். வங்கியில் கடனை வாங்கி வீடு அல்லது மனை வாங்குவது அப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கவா என்ற கேள்வி அனைவருக்கும் வரலாம்.

    அனைத்து கட்டிடங்களுக்கும் உயிரோட்டம் உண்டு என்ற கருத்தை வாஸ்து முன் வைக்கிறது. அதனை அனுசரித்து வீடு அல்லது மனை அமைப்பை சரி செய்து, கட்டிடங்களை அமைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கலாம் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    வீடு என்பது மணலும் சிமெண்டும் கூடிய கட்டிடமாக இருப்பினும், இயற்கையின் சக்திகளும் இணைந்துதான் இருக்கிறது. இயங்கும் பூமியின் மீது அமைக்கப்படும் கட்டமைப்புகள் குறிப்பிட்ட வடிவத்தை அடையும்போது இயற்கையின் ஆற்றலால் தாக்கம் பெற்று அதற்கேற்ப செயல்படத் தொடங்கி விடும் என்ற வாஸ்துவின் உட்கருத்தை வல்லுனர்கள் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.

    பழமையான கட்டிட சாஸ்திர நூல்கள் வீடுகளுக்குள் நல்ல வெளிச்சம் வரும்படி கட்டமைக்கப்பட வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளன. வீடுகள் இருட்டாக இருப்பது கூடாது. ஒரளவாவது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரவேண்டும். குறிப்பாக, சூரிய வெளிச்சம் வடகிழக்கு வழியாக வீட்டுக்குள் நுழையும்போது- பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு, சூரிய வெளிச்சம் நுழையாத வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பதையும் வாஸ்து சாஸ்திர நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    ஒரு கட்டமைப்பை சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் காலி இடம் இருப்பது சிறப்பு என்பது பிரதான வாஸ்து விதியாகும். அதாவது, காம்பவுண்டு சுவரை ஒட்டியவாறு கட்டிடத்தை அமைக்காமல், சுற்றி வருவதற்கு ஏதுவாக காலியிடம் இருக்கவேண்டும். அதன் மூலம், நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை சக்தி ஓட்டத்துக்கு தடை ஏற்படாமல், மனை அல்லது கட்டிடத்தின் எட்டு பக்கங்களிலும் உள்ள அஷ்ட திசை அதிபதிகளின் நற்பலன்கள் கிடைக்க அது ஏதுவாக அமையும்.

    எந்த திசையை நோக்கிய மனையாக இருந்தாலும், அதற்குரிய திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை வடிவமைப்பது முக்கியம். கோண திசையில் உள்ள மனைகளுக்கும் இந்த விதி பொருந்தும். கிழக்கு திசைக்கு இந்திரன், மேற்கு திசைக்கு வருணன், வடக்கு திசைக்கு குபேரன் மற்றும் தெற்கு திசைக்கு எமதர்மன் ஆகியோர் அதிபதிகளாக அமைகிறார்கள்.

    ×