search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudal Alaghar- Andal"

    • பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம்.
    • கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.

    முருகப்பெருமானை எண்ணி வணங்கும் பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம். இது மாதம் ஒரு முறை வரும். சில மாதங்களில் இரண்டு முறையும் வரலாம். அதே போலவே திதியின் அடிப்படையில் முருகப்பெருமானை எண்ணி உபவாசம் இருந்து வழிபடும் நாள் ஆறாவது திதியான சஷ்டி நாள்.

    இந்த நாளில் காலை முதல் உணவு ஏதும் அருந்தாமல் அல்லது எளிதான பால், பழம் மட்டும் அருந்தி, முருகப்பெருமானுடைய தோத்திரங்களையும், திருப்புகழ் முதலிய நூல் களையும் பாராயணம் செய்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றி, முருகப்பெருமான் படத்திற்கு மலர் மாலைகள் சாற்றி, தூபதீபம், நிவேதனம் செய்து, இயன்றால் அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். விசாகம் குருவின் உடைய நட்சத்திரம் அல்லவா. இன்றைய தினம் கீழ்க்காணும் கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.

    "உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே''.

    வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரம் கார்த்திகை (கிருத்திகை). பெரும்பாலான பெருமாள் கோயில்களில் திருமங்கை யாழ்வார் சந்நதி இருக்கும். அங்கே இன்று திருமங்கை யாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். இன்றைய தினம் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை பூஜை வேளையில் சேவிக்க நற்பலன்கள் விளையும்.

    "மின்னுமா மழை தவழும் மேகவண்ணா

    விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று

    அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

    அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை

    மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்

    மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

    பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்

    பழ வினையை முதலரிய வல்லார் தாமே''

    108 திவ்ய தேசங்களில் ஒன்று, மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் கோவில். அங்கே இன்றைய தினம் கூடல் அழகர் பெருமாள் ஆண்டாள் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

    ×