search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sahasranama Archana"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது.
    • பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார்.

    சேர மன்னர் ஒருவரின் ஆட்சிக் காலத்தில், அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போய்விட்டது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட அந்த காவலாளிக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் அதே அரண்மனையில் அரசியின் தோழிகளில் ஒருத்தி ஆவாள். அவள் அரசியிடம் ஓடிச்சென்று, `நான் தான் குற்றவாளி. என் காதலருக்கு பதிலாக என்னை சிறையில் அடைத்து விட்டு, அவரை விடுதலை செய்யுங்கள்' என்றாள்.

    விசாரணை மன்னன் முன்பாக வந்தது. அப்போது காதலனோ, `அவள் மீது எந்த தவறும் இல்லை. நான்தான் குற்றவாளி. எனக்கு தண்டனை கொடுங்கள். அவளை விட்டு விடுங்கள்" என்றான்.

    காதலர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர், இப்படிச் சொன்னதால் `யார் குற்றவாளி?' என்பதை முடிவு செய்வதில் மன்னன் தடுமாறினான். பின்னர் அமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முற்பட்டான்.

    அதன்படி கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று கருதினர். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது நிச்சயம் என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அரண்மனைக் காவலனும், அவனது காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர ஆடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள். அவள் அங்கிருந்த அரசன் மற்றும் அரசியின் முன்பாக நின்று, `சலவைக்கு போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் இருந்து, 'இந்த காதணியை என் ஆலயத்தில் இருக்கும் அரசனிடம் கொண்டு போய் கொடு' என்ற கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதனால் இங்கே ஓடி வந்தேன்" என்று கூறி அந்த காதணியை மன்னனிடம் கொடுத்தாள்.

    தன் தவறுக்கு வருந்திய மன்னன், அரண்மனைக் காவலனையும், அவனது காதலியையும் விடுவித்து அவர்களிடம் மன்னிப்பும் கேட்டான். அரசியோ, தன்னுடைய இரண்டு காதணிகளையும், கரிக்ககம் சாமுண்டி தேவிக்கே அர்ப்பணம் செய்துவிட்டாள்.

    • ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது கோவிலின் தனிச்சிறப்பு.
    • வாழ்வில் அமைதி நிலவவும் இந்த அன்னையை வழிபடுகிறார்கள்.

    கோவில் தோற்றம்

    சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் பலரும், தாங்கள் ஆட்சி புரிந்த பகுதிகளில் தெய்வங்களுக்கான வழிபாட்டு தலங்களை அமைத்தனர். அதற்கு முன்பாக மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், ஒரு மலைப் பிரதேசத்தில் 108 சிவன் கோவில்களையும், 108 அம்பாள் கோவில்களையும் நிறுவினார். அந்த தேசம்தான் தற்போதைய கேரளம். கேரள நாட்டை ஆட்சி செய்த சேர மன்னர்கள், சிவன் கோவில்களுடன், அன்னை பராசக்தியை பகவதியாக, அம்மனாக, சாமுண்டிதேவியாக பல இடங்களில் நிறுவி, அந்த அம்மன்களை, அந்தந்த ஊர்களின் பெயருடன் இணைத்து அழைத்து வழிபட்டு வந்தனர்.

    இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானதுதான், `தேவி கரிக்கத்தம்மா' என்று அழைக்கப்படும், கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில். சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயம், பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இவ்வாலயத்தில் உக்கிர சொரூபிணியாக வீற்றிருக்கும் ரத்த சாமுண்டி அம்மன், சத்தியத்தை நிலைநாட்டும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.

     தல வரலாறு

    வேதங்களைக் கற்றறிந்த ஞானி ஒருவர், யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடனாக ஏற்று, அவருக்கு பல போதனைகளையும், அருள்வாக்கையும் அருளினார். தன் குருவைப் போல யோகீஸ்வரனும், பராசக்தியை வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை யோகீஸ்வரனின் முன்பு, ஒரு சிறுமி வடிவத்தில் பராசக்தி தோன்றினாள். அந்த சிறுமியை, குருவும் சீடனுமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.

    அப்போது அந்த சிறுமி, அவர்களுக்கு அம்பிகையாக காட்சியளித்து, "நான் இங்கேயே குடிகொள்வேன்" என்று கூறி மறைந்தாள்.

    இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன், ஒரு அம்மன் சிலையை சிறுமி மறைந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே தற்போது 'கரிக்ககம் சாமுண்டி'யாக அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை 'பராசக்தி' என்றும், 'பகவதி' என்றும், `பரமேஸ்வரி' என்றும் அழைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

    ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு. அதன்படி சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக இத்தல அம்மனை, பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரங்களாக உள்ளனர். இவர்களின் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை. ஆலய கருவறையில் சாமுண்டி தேவியை விக்கிரகமாக வழிபாடு செய்கின்றனர்.

    தீராத நோய் நீங்கவும், வாழ்வில் அமைதி நிலவவும் இந்த அன்னையை வழிபடுகிறார்கள். இந்த அம்மனுக்கு `கடும் பாயசம்' நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை போன்றவை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள்.

    காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ச்சியாக 13 வெள்ளிக்கிழமைகள், சாமுண்டி தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுவது ஐதீகமாக உள்ளது. உடல் நலன் வேண்டியும், பயம் விலகவும் இந்த ஆலயத்தில் `கருப்பு கயிறு' மந்திரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிரமான வடிவத்தில் சுவர் சித்திரமாக இருந்து அருள்பாலித்து வருகிறார். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதியில் சத்தியம் செய்வது ஒரு சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் அரசாங்கம், காவலர்களுக்கு பயப்படாதவர்கள் கூட, தெய்வங்களுக்கு பயந்து நடந்தனர் என்பது உண்மை. அதை அடிப்படையாகக் கொண்டே, ஆலயத்தில் சத்தியம் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் வந்திருக்கிறது.

    இந்த சன்னிதியில் நடைபெறும் பூஜைகளில் முக்கியமானது, `சத்ரு சம்கார பூஜை'. பகைமையை அழிக்கும் பூஜை என்பது இதன் பொருள். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம் அகலவும், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கவும் ரத்த சாமுண்டி தேவி சன்னிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

    பால சாமுண்டி தேவி, சாந்த சொரூபிணியாக சுவர் சித்திரமாக இருந்து அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இந்த அம்மன் சன்னிதியில் வழிபாடு செய்யலாம்.

    இந்த ஆலயத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி நாகர்வனம், சாஸ்தா, குரு பகவான், யோகீஸ்வரன், அன்ன பூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும், நவக்கிரகங்களும் காணப்படுகின்றன. இங்கு ஆண்டுதோறும் தேவியின் நட்சத்திரமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7-ம் நாளில் பொங்கல் விழா நடத்தப்படும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (16-ந் தேதி) சனிக்கிழமை தொடங்கி, வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. விழாவின் இறுதி நாளில் பொங்கல் விழா நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரி சண்டை பயின்ற நிபுணர்களின் களரிக் களமாக இந்த இடம் விளங்கி இருக்கிறது. களரிக்களம் என்பதே மருவி, `கரிக்ககம்' என்றானதாகவும் சொல்கிறார்கள். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதிபுத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி கோவில். திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    • 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா.
    • சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அன்னதானம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

    பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple. என்ற ஆன்லைன் மூலம் பெறலாம். ரூ.1000, ரூ.600 ரூ.300 என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500-ம், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300-ம், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300-ம் சிறப்பு ஒரு மண்டல (48நாட்கள்) அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ரூ.2400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×