search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வில்வமும் அதன் மருத்துவ குணங்களும்...!
    X

    வில்வமும் அதன் மருத்துவ குணங்களும்...!

    • ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பார்கள்.
    • சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம்.

    ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பார்கள். சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அனைவரும் அறிவோம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.

    பூஜைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது நல்லது. வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

    மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    வில்வ வழிபாடும் பயன்களும்

    * சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச்சமமாகும்

    * வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.

    * வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் என பல பெயர்களால் சுட்டப்படுகிறது

    * மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாக கூறுகின்றன

    * வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் மூன்று குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் என சிறப்பு பெயர் பெற்றது.

    * சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர். அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயமலையில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாக தனக்கு செய்யப்படும் பூஜைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டார்.

    * ஏனெனில் வில்வம் சளியால் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும், துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    * வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது. சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.

    * வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்து பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

    * வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது. நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.

    * கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

    * 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

    * சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாட்சத்தைப் பெறமுடியும்.

    * வில்வமரத்தை முறைப்படி விரதம் இருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    * வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.

    * ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது லட்சம் ஸ்வர்ண புஸ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

    * வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்தி குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

    வில்வம் பறிக்கும் சொல்ல வேண்டிய மந்திரம்?

    சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

    ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

    ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:

    அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

    பொருள் விளக்கம்

    போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும்,லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக் கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

    வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

    வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு வில்வம் ஒரு அருமருந்தாகும்.

    Next Story
    ×