என் மலர்
வழிபாடு
- மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
- கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.
சென்னை:
இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.
சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.
சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.
சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
- சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது.
ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியின் எல்லையில் சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள சங்கிலி கருப்பராயன் காவல் தெய்வமாக இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர். இரவு திடீரென காவல் தெய்வம் சிலை வழக்கம் போல் இல்லாமல் கண் திறந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

இது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவலாக பரவியது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் வேலைக்கு சென்று திரும்பி மக்களும் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதையடுத்து மக்கள் காவில் தெய்வமே என மனமுருகி வழிபட்டனர்.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலர் வந்த வண்ணம் இருந்தனர். மேலும் இதை செல்போன்களில் படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பினர்.
நேற்று பெரியமாரியம்மன கோவிலில் கம்பம் நடப்பட்டது. அந்த நேரத்தில் சாமி கண் திறந்ததால் பக்தர்கள் பலர் பக்தி பரவசமாக பேசி கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிகள் கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இதனால் பொதுமக்கள் உடல் சிலிர்த்து காவல் தெய்வமே, தாயே அம்மா என்றும் கருப்பராயன் காவல் தெய்வமே என மெய் சிலிர்த்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
- நந்திக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமழப் பாடியில் திருமணம் நடந்தது.
- நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப்பெயர்.
பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமழப் பாடியில் திருமணம் நடந்தது. தன் மகன் போல் உள்ள பக்தன் நந்திக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம் கொண்டார் திருவையாறு ஐயாறப்பன். புலிக்கால் முனிவரான வியாக்ர பாத முனிவரின் மகள் சுயம்பிரகாசைக்கும் ஐப்பேசன் என்ற பெயருடைய நந்தி தேவருக்கும் சிறப்பாகத் திருமணம் செய்வித்தார். இதற்கு எல்லாரும் அவரவர் பங்குக்கு சில செலவுகளை ஏற்றுக் கொண்டனர்.
பழமும், பூவும், நெய்யும், குண்டலங்களும் கொடுத்ததுடன் வேதியர்களையும் அனுப்பி திருமணத்தை சிறப்பாக நடத்த உதவினர். இப்படி திருமணம் நடத்தி சிறப்பித்தவர்களக்கு நன்றி கூறினார் நந்திதேவர். இந்த நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப்பெயர்.
ஏழு ஊர்களுக்கும் சென்று நன்றி கூறி, அவர்களின் மரியாதைகளை ஏற்றபின், இரு பல்லக்கு களுடன் அந்த ஏழு ஊர்களின் பெருமான்களும் பிராட்டியும் உடன் வந்த திருவையாறு அடைவார்கள். பின் எல்லா ஊர் பெருமான்களும் கல்யாண தம்பதிகளிடமும் பிரபஞ்ச தம்பதிகளிடமும் (சிவ-பார்வதி) விடை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர் போய் சேருவார்கள்.
முதல் ஊர் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத்துறை, தொடர்ந்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், இறுதியாக திருவையாறு என ஏழு ஊர்களுக்கும் செல்வது தான் இவ்விழா.
இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக்காரர்கள், நாயனக்காரர்கள் எல்லாரும் போவார்கள். எல்லா இடங்களிலும் இசை, நாதஸ்வரம், குசல விசாரிப்புகள், விருந்து உபசாரம் கேளிக்கை, கொண்டாட்டம் என உற்சாகமாகவும் கோலாகலமாகவும் இவ்விழா நடைபெறும்.
- நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி.
- 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 22-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
இதனையடுத்து 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. காலையில் வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனத் திற்கு மலையேறி சென்றனர். இன்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
- கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
- ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.
ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.
பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.
பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.
பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத் திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.
இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.
கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரணையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.
- பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சுற்று வட்டாரப்கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். கர்நாடக மாநில பக்தர்களும் அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள். இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
பண்ணாரியம்மன் கோவில் புகழ்பெற்ற குண்டம் விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில பக்தர்கள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. குண்டம் விழாவில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவையொட்டி அம்மன் சப்பரம் புறப்பாடு சத்தியமங்கலம், புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று கோவிலை வந்தடைந்தது.
இதையொட்டி தினமும அம்மனுக்கு சிறப்பு அஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவை யொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து வழிகிறார்கள்.
இதை தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் குண்டம் விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) இரவு எரி கரும்புகளால் (விறகு) குண்டம் வார்க்கப்படுகிறது. இதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இதனால் குண்டம் வளர்க்கப்படும் இடத்தின் அருகே விறகுகள் குவிந்து வருகிறது. மேலும் வேண்டுதல்கள் நிறை வேற்றும் வகையிலும் ஏராளமானோர் விறகுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.
பக்தர்கள் பாதுகாப்பாக குண்டம் இறங்குவதற்காக கோவில் வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பக்தர்களுக்கு தினமும் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில் அருகே பக்தர்களுக்கு கழிவறை மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நாளை மறுநாள் அதிகாலை குண்டம் விழா நடப்பதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் பலர் குண்டம் இறங்க செல்லும் தடுப்புகளில் துண்டு, சேலை மற்றும் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.
விழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் பண்ணாரியம்மனை தரிசனம் செய்து விட்டு குண்டம் இறங்க இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் குழந்தைகளுடன் வந்த பலர் அங்கேயே தொட்டில் கட்டி அவர்களும் அங்கேயே தூங்குகிறார்கள். அவர்கள் இரவு, பகலாக அங்கே தங்கி உள்ளனர்.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இன்று மேலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலில் குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போல் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
- காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- இன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வருகிறார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு வரு கின்றனர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்கின்றனர். இரவு 9 மணிக்கு மேல் கோவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு குலதெய்வம் தெரியாத வர்கள் முருகப்பெருமானை தரிசி த்தால் தங்கள் குலதெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான நாலு மூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர விழா நடக்கிறது. உத்திரத்தை முன்னிட்டு இன்று குன்றுமலை சாஸ்தா கோவிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், மின்வசதி, உள்பட அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குல தெய்வம்தான்.
- குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்பட்டு விடும்.
உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை மனதார வழிபடுவார்கள்.
சமீப காலமாக சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச்சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்த படி உள்ளது. அதுபோல பரிகாரத் தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.
இறைவழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குல தெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.
குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குல தெய்வ வழி பாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.
இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், தொடர்ந்து குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.
குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குல தெய்வத்தை வணங்கு பவர் களுக்கு எந்த குறையும் வராது. குதூகலம்தான் வரும்.
பூர்வீக ஊரில் இருப்பவர் களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.
அப்படிப்பட்டவர் களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ''குல தெய்வ வழிபாடு'' செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்று குல தெய்வம் இருக்கும் ஆல யத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.
நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடா விட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.
பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தி யாகக் கருதப்படுகிறது.
நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவி லில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்கு வது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்கு பவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.
சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால் சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.
குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம். அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது.
இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது, ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
- இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)
- நபி அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண்.
இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)
இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தோர்களில் முதன்மையானோர் சிலர். அவரில் ஒருவர் ஆயிஷா (ரலி) ஆவார். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை இரண்டு விதங்களில் அடங்கும்.
1) பொது வெளி வாழ்க்கை,
2) அந்தரங்க வாழ்க்கை.
நபியின் அந்தரங்க வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சமூகப் பார்வைக்கு கொண்டு போய் சேர்த்தவர் தான் ஆயிஷா (ரலி) ஆவார். கி.பி. 614-ல் ஆயிஷா (ரலி) பிறந்தார்கள். இவரின் தந்தை இஸ்லாமிய குடியரசின் முதலாம் ஜனாதிபதி அபூபக்ர் சித்தீக் (ரலி), தாயார் உம்முரூமான் (ரலி) ஆவார். இவருக்கு 3 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண். மற்ற யாவரும் கைம்பெண்களே!
இவரைக் கூட நபி (ஸல்) அவர்கள் தமது சுயவிருப்பத்தின்படி திருமணம் முடிக்கவில்லை. இறை உத்தரவின் பேரிலேயே திருமணம் புரிந்தார். இவர்களின் திருமணம் சொர்க்கத்தில் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகும்.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: 'நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இருதடவை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே, நான் அந்தப் பட்டுத்துணியை விலக்கிப்பார்த்தேன். அது நீ தான், அப்போது நான் (மனதிற்குள்) `இக்கனவு இறைவனிடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.' (நூல்:புகாரி)
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அண்ணலார், ஆயிஷா (ரலி) ஆகியோரின் திருமணம் மறுபடியும் சொர்க்கத்திலேயே முடியும். 'ஆயிஷாவே! நான் உன்னை சொர்க்கத்திலும் எனது மனைவியாக அமைவதை கண்டுகொண்டேன் என நபி (ஸல்) கூறினார்கள். ' (நூல்:தப்ரானீ)
'ஒட்டுமொத்த உலகப் பெண்களின் கல்வியை ஒரு தட்டிலும், ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வியை மற்றொரு தட்டிலும் ஒன்று திரட்டப்பட்டால், ஆயிஷா (ரலி) கல்வியே மேம்படும்' என இமாம் ஸூஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.
அதிகமான நபிமொழிகளை அறிவித்த நபர்களில் நான்காவது இடத்தை ஆயிஷா (ரலி) பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 2210 நபிமொழிகளை அறிவித்துள்ளார். ஒரு சமயம் அன்னை அவர்கள் ஒட்டுப் போட்ட சட்டை அணிந்த நிலையில் 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை தர்மம் செய்தார்கள்.
ஒரு தடவை அவர்களிடம் இரண்டு சாக்கு மூட்டைகள் நிறைய ஒரு லட்சம் வெள்ளிக்காசுகள் வந்தது. அன்றைய தினம் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.
ஒரு தாம்பளத்தை கொண்டுவரச் செய்து அனைத்தையும் வழங்கிவிட்டார்கள். மாலை நேரம் காய்ந்த ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் வைத்து நோன்பு திறந்தார்கள். மற்றொரு சமயம், தன்னிடமுள்ள 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை ஒரே நேரத்தில் இறை வழியில் செலவிட்டார்கள்.
அன்னையார் அவர்கள் கி.பி. 678-ம் ஆண்டு, ஹிஜ்ரி 58-ம் வருடம் ரமலான் மாதம் பிறை 17-ம் தினம் புதன்கிழமை அன்று தமது 66-ம் வயதில் மரணம் அடைந்தார்கள்.
அன்றைய தினம் அவர்கள் பகலில் நோன்பிருந்து, இரவில் வித்ர் எனும் தொழுகையை நிறைவேற்றிய பிறகு உயிர் பிரிந்தது. அபூ ஹுரைரா (ரலி) பிரேத தொழுகை நடத்தினார். பின்பு ஜன்னத்துல் பகீ இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அன்னையார் தமது இறுதிக் காலம் வரைக்கும் இறை தியானத்தில் கழித்து இறைவனடி சேர்ந்தார். அவரது வாழ்வு நமக்கு ஒரு பாடமாகும்.
- ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை.
- ஒரு மாத நோன்பு 10 மாதங்கள் நோன்பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.
ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை
இஸ்லாம் சிலகாலங்களுக்கும், சிலபுனித தலங்களுக்கும் அபரிமிதமான சில சிறப்புகளை கொடுத்து அழகு பார்க்கிறது. அந்த வகையில் அந்த புனித தலங்களில், அந்த காலங்களில் வணக்க வழிபாடு புரியும்போது மற்ற புனித தலங்களில், மற்ற காலங்களில் நிறைவேற்றப்படும் வணக்கத்திற்கு கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு நன்மைகள் வாரி வழங்கப்படுகிறது.
புனித இறையில்லம் கஅபாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறை இல்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஒரு லட்சம் மடங்கு சிறந்ததாகும்.
புனித மதீனாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறையில்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும்.
'நன்மையை நாடி மூன்று இறை இல்லங்களைத் தவிர வேறெங்கும் பயணம் மேற்கொள்ளப்படாது; அவை: புனித கஅபா, மஸ்ஜித்நபவீ எனும் எனது பள்ளி, மஸ்ஜித் அக்ஸா (பைத்துல் முகத்திஸ்) ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
புனித தலங்களுக்கு வழங்கிய அதே சிறப்பை இஸ்லாம் சில காலங்களுக்கும் வழங்கி கவுர வப்படுத்துகிறது. துல்ஹஜ் மாதம் முதல் பத்து தினங்கள் உலக நாட்களிலேயே சிறந்த நாட்களாக அமைகிறது. ஏனெனில் அந்த பத்து நாட்களிலும் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒருசேர நிறைவேற்றப்படுகின்றன.
இந்த பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் நல்லறம் எதுவாயினும் மற்ற மாதங்களில் நிறை வேற்றப்படும் நல்லறங்களை விட சிறந்ததாக அமைந்துவிடுகின்றன. இவ்வாறு இரண்டு பெருநாட்களும் சிறந்த நாட்களாக அமைகின்றன.
முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் குறிப்பாக அதில் வரும் 9,10 ஆகிய இருதினங்களும் வெற்றி தினங்களாகும். இதன் வரிசையில் ரமலான் மாதமும் இணைகிறது. ரமலானில் மூன்று பத்துகள் உண்டு. அவற்றில் சிறந்தது கடைசி பத்து தினங்களாகும்.
நபி (ஸல்) கூறியதாவது: 'ஆதமின் மகனு டைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மை கள் வழங்கப்படுகின்றன, நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரிய தாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன்.
அவன் எனக்காக தனது உணர்வையும், உண வையும் கைவிடுகிறான் என இறைவன் கூறுகின்றான்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
'ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம்) ரமலானில் ஒரு நோன்புக்கு பத்து மடங்கு கள் நன்மை வழங்கப்படுவதால் ஒரு மாதம் நோன்பு நோற்றதற்கு 10 மாதங்கள் நோன் பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.
அதைத்தொடர்ந்து பெருநாளை விட்டு விட்டு பிறகு வரும் ஆறு நாட்கள் நோன்பை தொடர்வதற்கும் 10 மடங்குகள் நன்மை வழங்கப்படும். 6 நாட்கள் நோன்பு நோன்பதற்கு இரண்டுமாத நோன்பின் நன்மை கிடைத்துவிடுகிறது. ஆக ரமலானிலும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உண்டு. எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு (நன்மை) உண்டு.' (திருக்குர்ஆன் 6:160)
- சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் பவனி.
- ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 11 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி காலை 11.24 மணி வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: பூரம் காலை 8.46 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பங்குனி உத்திரம். பவுர்ணமி. ஹோலிப் பண்டிகை. காம தகனம். சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் பவனி. திரிசிராமலை ஸ்ரீதாயுமானவர் தெப்போற்சவம் ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாணம். பரமகுடி ஸ்ரீஅன்னை முத்தாலம்மன், பழனி ஸ்ரீஆண்டவர் தலங்களில் ரதோற்சவம். கழுகுமலை ஸ்ரீமுருகப் பெருமான், கங்கை கொண்டான் ஸ்ரீவைகுண்டபதி, திருச்சுழி திருமேனிநாதர் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-லாபம்
மிதுனம்-நலம்
கடகம்-ஆக்கம்
சிம்மம்-இன்பம்
கன்னி-நன்மை
துலாம்- புகழ்
விருச்சிகம்-பரிசு
தனுசு- துணிவு
மகரம்-பரிவு
கும்பம்-பண்பாடு
மீனம்-உலகை
- பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
- சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை போட்டு தங்கியிருப்பார்கள்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல், பந்தல் போடுதல் உள்ளிட்ட பணிகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வல்லநாடு மணக்கரை, மணத்தேரி, நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சி, கடையம் அருகே பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாஸ்தா கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகரில் சந்திப்பு மேகலிங்க சாஸ்தா கோவில், டவுன் பாரதியார் தெரு முருங்கையடி சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி, பாளை சாந்தி நகர் நடுக்காவுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், அம்பை வைராவிகுளம் இரண்டிலாம் உடையார் சாஸ்தா, வெட்டுவான்களம் அகத்தீஸ்வரர் சாஸ்தா, வள்ளியூர் ஊரணி சாஸ்தா கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், அன்னதானம் நடக்கிறது.
தென்மாவட்டங்களை பொறுத்தவரை மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலிலும் உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாளை திருவிழா நடக்கிறது.
பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இந்த திருவிழாவையொட்டி நாளை மறுநாள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






