search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gundam ceremony at Pannariamman temple"

    • பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சுற்று வட்டாரப்கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். கர்நாடக மாநில பக்தர்களும் அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள். இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    பண்ணாரியம்மன் கோவில் புகழ்பெற்ற குண்டம் விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில பக்தர்கள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. குண்டம் விழாவில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் புறப்பாடு சத்தியமங்கலம், புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று கோவிலை வந்தடைந்தது.

    இதையொட்டி தினமும அம்மனுக்கு சிறப்பு அஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவை யொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து வழிகிறார்கள்.

    இதை தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் குண்டம் விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) இரவு எரி கரும்புகளால் (விறகு) குண்டம் வார்க்கப்படுகிறது. இதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இதனால் குண்டம் வளர்க்கப்படும் இடத்தின் அருகே விறகுகள் குவிந்து வருகிறது. மேலும் வேண்டுதல்கள் நிறை வேற்றும் வகையிலும் ஏராளமானோர் விறகுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

    பக்தர்கள் பாதுகாப்பாக குண்டம் இறங்குவதற்காக கோவில் வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தினமும் அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவில் அருகே பக்தர்களுக்கு கழிவறை மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் அதிகாலை குண்டம் விழா நடப்பதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்குவதற்காக இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் பலர் குண்டம் இறங்க செல்லும் தடுப்புகளில் துண்டு, சேலை மற்றும் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    விழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் பண்ணாரியம்மனை தரிசனம் செய்து விட்டு குண்டம் இறங்க இடம் பிடித்து காத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் குழந்தைகளுடன் வந்த பலர் அங்கேயே தொட்டில் கட்டி அவர்களும் அங்கேயே தூங்குகிறார்கள். அவர்கள் இரவு, பகலாக அங்கே தங்கி உள்ளனர்.

    தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இன்று மேலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கோவிலில் குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போல் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    ×