என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.
    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    இந்த வார விசேஷங்கள் (26-8-2025 முதல் 1-9-2025 வரை)

    26-ந் தேதி (செவ்வாய்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ரத உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    27-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * விநாயகர் சதுர்த்தி.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.

    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.

    * விருதுநகர் சொக்கநாதர் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    29-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    30-ந் தேதி (சனி)

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    31-ந் தேதி (ஞாயிறு)

    * குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி.

    * விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    1-ந் தேதி (திங்கள்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வளையல் விற்ற திருவிளையாடல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-10 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை பிற்பகல் 2.21 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : அஸ்தம் (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருத்தேரில் வீதி உலா, திருத்தணி, வடபழனி உள்ளிட்ட முருகர் கோவில்களில் அபிஷேகம்

    இன்று சாமவேத உபாகர்மா. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம். கருங்குருவிக்கு உபதேசம் செய்தருளிய காட்சி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் மாலை திருத்தேரில் திருவீதி உலா. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் ரதோற்சவம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-விவேகம்

    சிம்மம்-சிரத்தை

    கன்னி-ஆர்வம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- ஊக்கம்

    மகரம்-கடமை

    கும்பம்-ஓய்வு

    மீனம்-பரிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.

    ரிஷபம்

    யோகமான நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மிதுனம்

    பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    கடகம்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானத்தடை அகலும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கன்னி

    தனவரவு திருப்தி தரும் நாள். மனதில். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்வர்.

    துலாம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    விருச்சிகம்

    தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர்.

    தனுசு

    சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

    கும்பம்

    பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவு காத்திருக்கும்.

    மீனம்

    புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணி தொடரும் ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும்.

    • பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா.
    • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-9 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை நண்பகல் 1.15 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திரம் நாளை விடியற்காலை 5.05 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ விநாயகப்பெருமான் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு.

    மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-நன்மை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-பாசம்

    கன்னி-முயற்சி

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- கீர்த்தி

    மகரம்-கவனம்

    கும்பம்-போட்டி

    மீனம்-சிந்தனை

    • மிதுனம்: மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
    • கடகம்: வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    ரிஷபம்

    ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்

    மிதுனம்

    மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    கடகம்

    வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதிப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    சிம்மம்

    நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். புதிய முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    துலாம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மதியத்திற்குமேல் விரயம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. கொள்கைப் பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.

    தனுசு

    வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து பணிபுரியும் சூழ்நிலை உருவாகும்.

    மகரம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மருத்துவச் செலவு உண்டு. மறைமுக எதிர்ப்புகள் உண்டு.

    கும்பம்

    ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை அமையும்.

    மீனம்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வராமல் இருந்த பணவரவு ஒன்று இன்று வரலாம்.

    • இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.

    இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.

    மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் தொழில் அமைதல், முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், மனநலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி அம்மனுக்கு நேர்ச்சையாக ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட 100-க்கு மேற்பட்ட வேடம் அணிவார்கள்.

    இதில் விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி, எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் 61,41, 31,21 நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் தொடங்குவார்கள்.

    இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதாலும் 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும் இன்று அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.

    கோவில் நடை காலை 6 மணிக்கு தான் திறக்கும் என்பதல் அதற்கு முன்னரே கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் விற்கும் துளசி மாலை மற்றும் பாசிமாலை வாங்கி கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்து கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்துமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

     

    ஏராளமான பக்தர்கள் சிகப்பு ஆடை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் காலை, இரவு இளநீரு, மதியம் மண்பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிட்டு வருவார்கள். காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னம் ஓலையில் ஊரில்குடில் அமைத்து அதில் முத்தாரம்மன் படம் வைத்து தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து வழிபடுவார்கள். உடன்குடி, குலசை பகுதியில் காளி வேடம் அணியும் பக்தர்கள் சிலர் இரவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரவில் தங்கி விட்டு காலை யில் வழக்கம் போல் தங்கள் பணிக்கு செல்வார்கள்.

    தற்போது காளி வேடத்திற்கான சடை முடி, கிரிடம், சூலாயுதம், நெற்றி பட்டை,வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்குவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தற்போதிலிருந்தே உடன்குடிக்கு வர தொடங்கி உள்ளதால் உடன்குடி பகுதி கட்ட தொடங்கி உள்ளது. தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவவர் வள்ளி நாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • மேஷம்- முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்
    • ரிஷபம்- வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும்.

    மேஷம்

    பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். தனஸ்தான அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.

    ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். 30.8.2025 அன்று காலை 7.53-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். விநாயகருக்கு அவல், பொரி படைத்து வழிபடவும்.

    ரிஷபம்

    திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும். மேலதிகாரிகள் அதிகப் பணிச்சுமையை தரலாம்.

    சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு கேதுவின் மையப்புள்ளியில் ராசியும் 7ம்மிடமும் இருப்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது. சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். குங்கும விநாயகர் செய்து வழிபடவும்.

    மிதுனம்

    எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வார இறுதி நாளில் வெற்றி ஸ்தானம் செல்கிறார். வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

    அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். வில்வ அர்ச்சனை செய்து விநாயகரை வழிபடவும்.

    கடகம்

    செல்வாக்கு சொல்வாக்கு உயரும் வாரம். ராசி அதிபதி சந்திரன் ராசிக்கு 2,3.4-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். வருமானம் உயர்வதால் உங்கள் செல்வாக்கு சொல்வாக்கிற்கு மதிப்பு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும். அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும்.

    வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும். வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்தி ருப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    சிம்மம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று கேது உடன் இணைகிறார். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடுமனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும்.

    சேமிப்பு கரையும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். அஷ்டமச் சனி மற்றும் ஜென்ம கேதுவின் தாக்கம் இருப்பதால் பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப் படும். விநாயகருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.

    கன்னி

    காரிய தடைகள் நீங்கும் வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதி நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியினருக்கு மிகச் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும்.

    நோய் பாதிப்புகள் குறைய துவங்கும்.இழுபறியான பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விநாயகருக்கு பால் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    துலாம்

    மேன்மையான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெறுகிறார். இது மதன கோபால யோமாகும்.இது உங்கள் தோற்றத்தால் பிறரை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும். பெண்கள் ஆவணி மாத வளர்பிறை கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.லாப கேதுவின் காலம் என்பதால் விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.

    விருச்சிகம்

    எண்ணியது ஈடேறும் வாரம். 10-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார்.

    பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப. விசேஷங்கள் நடக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

    தனுசு

    நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ஆட்சி. உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும்.இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசே ஷங்கள் நடக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.தொழி லில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம்.

    தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று வெள்ளருக்கு மாலை அணிவித்து விநாய கரை வழிபடவும்.

    மகரம்

    தடைகள் தகர்த்து வெற்றி நடைபோடும் வாரம்.ராசிக்கு புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.உங்களை அலங்கரித்துக் கொள்வதி லும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கு வதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

    இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும்.துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் 25.8.2025 அன்று காலை 8.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். உத்தி யோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னே ற்றத்துக்கு உதவும் விநாயகர் சதுர்த்தி அன்று பால் கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபடவும்.

    கும்பம்

    எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உண்டாகும் வாரம்.ராசியில் ராகு ஏழில் சூரியன் கேது சேர்க்கை உள்ளது.எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும். பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும்.

    அதிக வேலை பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடி யாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 25.8.2025 அன்று காலை 8.29 முதல் 27.8.2025 அன்று இரவு 7.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். விநாய கருக்கு கடலை உருண்டை வைத்து வழிபடவும்.

    மீனம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் வக்ர சனி பகவான் சஞ்சாரம். ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும்.

    வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். அரசியல்வாதிகள் மனவுமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும்.விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். 27.8.2025 அன்று இரவு 7.21 முதல் 30.8.2025 காலை 7.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது.காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும்.மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-8 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பிரதமை நண்பகல் 12.37 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : பூரம் பின்னிரவு 3.32 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்

    இன்று சந்திர தரிசனம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு. சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் வீதியுலா. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி. மிலட்டூர், திண்டுக்கல் கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-நட்பு

    கன்னி-பாராட்டு

    துலாம்- சாதனை

    விருச்சிகம்-இரக்கம்

    தனுசு- மாற்றம்

    மகரம்-வாழ்வு

    கும்பம்-லாபம்

    மீனம்-பரிசு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மிதுனம்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். வாகனம் வாங்கும் யோகமுண்டு.

    கடகம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    சிம்மம்

    பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

    கன்னி

    நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    துலாம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வீடு மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.

    விருச்சிகம்

    புகழ் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

    தனுசு

    யோகமான நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாறுதல் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    மகரம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது ஒருகணம் சிந்திப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கும்பம்

    சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். புதிய தொழில்தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்பப் பிரச்சினை தீரும்.

    மீனம்

    மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    • மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது.
    • சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலைவாழ் மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகிறார். முன்னொரு காலத்தில் புதுப்பதி, சின்னாம்பதி, வெள்ளியங்கிரி போன்ற இடங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வந்துள்ளனர். அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு வந்து சாமியை தரிசித்து விட்டு சென்றுள்ளனர்.

    மேலும் படியேறும் வழியில் அடியார்சாமி என்ற சித்தர் சன்னதி உள்ளது. அந்த சன்னதியிலும் மலைவாழ் மக்கள் அதிகம் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மலைவாழ் மக்கள் பல இடங்களுக்கு பிரிந்து சென்று வாழ்ந்து வந்தாலும் தற்போதும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். சிலர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தி இங்கு வந்து வழிபடுவதை காண முடிகிறது.

    மலையின் நடுப்பகுதியில் அடியார்சாமி சித்தர் சன்னதி உள்ளது. மலைக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. சிவன் குடிகொண்டு இருக்கும் மலையை சுற்றி சித்தர்கள் உலா வருவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

    இந்தநிலையில் அடியார்சாமி சித்தர் சிலையுடன் சன்னதி இருப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. இதனால் மலையேறும் பக்தர்கள் அடியார்சாமியை வழிபட்டு செல்கிறார்கள். அவருக்கும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.

    • உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது.
    • கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார்.

    அன்றாட உலக வாழ்க்கையில் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். ஏதோ ஒரு துக்கம் நம் வாழ்க்கையில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

    வியாதியால் வரும் துக்கம், பாவத்தினால் வரும் துக்கம், குடும்ப பிரச்சனைகளால் வரும் துக்கம், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனையால் வரும் துக்கம் இப்படி ஏதோ ஒன்று நம் வாழ்க்கையில் நம்மை துக்கத்தில் நடத்திக்கொண்டு தான் இருக்கிறது.

    எல்லா துக்கங்களையும், துன்பங்களையும் இயேசு மாற்றி உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். வேதாகமத்தில் தேவன் எப்படி ஆறுதல் தந்தார் என்பதை இங்கே காண்போம்.

    துக்கத்தில் ஆறுதல்

    ஆதியாகமம் 24-ம் அதிகாரம் 67-ம் வசனத்தில் கூறப்படுகிறது: ஆபிரகாமின் மனைவி சாராள் மரித்து விட்டாள். அவளின் மகன் ஈசாக், தாயாரின் இறப்பால் துக்கமுகத்தோடு காணப்பட்டான் என்று வேதாகமம் கூறுகிறது. ஈசாக் ரெபெக்காளை திருமணம் செய்து கொண்ட பின் தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான் என்று வேதாகமம் சொல்கிறது.

    ஈசாக் தன் மனைவியை நேசித்து ஆறுதல் அடைந்தான். முதலாவதாக நாம் நம் குடும்பத்தை நேசிக்க வேண்டும். மனைவி, குழந்தைகள் மேல் அன்பு செலுத்த வேண்டும். அப்போது குடும்ப வாழ்க்கை ஆறுதலாக மாறும்.

    உபத்திரவத்தில் (அல்லது) வியாதியில் ஆறுதல்

    உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது. வியாதி இல்லாத மனிதனே கிடையாது. வேதாகமத்தில் 12 ஆண்டுகளாக உபத்திரவத்தில் வாழ்ந்த பெரும்பாடுள்ள ஸ்திரி தன் ஆஸ்தியை விற்று மருத்துவம் பார்த்தாள். ஆனால் பயன் ஒன்றும் இல்லை. ஒருவராலும் அவளை சுகப்படுத்த முடியவில்லை. தன் ஆஸ்திகளை இழந்தாள். தேவனைப்பற்றி அறியாத அவள் நமக்கு சுகம் தர வல்லவர் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்தவுடனே அவரை காண புறப்பட்டு வருகிறாள். இந்த நிகழ்வு லூக்கா 8-ம் அதிகாரம் 41 முதல் 56-ம் வரையிலான வசனங்கள் மற்றும் மாற்கு 5-ம் அதிகாரம் 25, 26-வது வசனங்களில் காணப்படுகிறது.

    யவீருவின் 12 வயது மகள் மரண அவஸ்தையில் இருக்கிறாள். அவளை காப்பாற்ற வரும்படி இயேசுவை அழைத்ததன் நிமித்தம் யவீருவின் வீட்டிற்கு இயேசு போகையில், திரளான ஜனங்கள் அவரை நெருங்கினார்கள். இயேசு வரும் செய்தியை கேட்ட பெரும்பாடுள்ள ஸ்திரி எப்படியாவது அவரைப்பார்த்து சுகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வருகிறாள்.

    இயேசுவை நெருங்கும் சமயத்தில் சீடர்கள் அவளை அதட்டினார்கள். ஆஸ்திகளை செலவழித்தும் ஒருவனாலும் சுகப்படாதிருந்த அந்த ஸ்திரி இயேசுவுக்கு பின்னால் சென்று அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். உடனே அவள் பெரும்பாடு நின்று விட்டது. (லூக்கா 8-ம் அதிகாரம் 43, 44-வது வசனங்கள்)

    வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற வாக்குதத்தம் சொன்னவர் வாக்கு மாறாத தேவனாய் இருக்கிறார்.

    கண்ணீரில் ஆறுதல் தரும் தேவன்

    சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் எல்க்கானாவிற்கு 2 மனைவிகள். ஒருவள் பெனின்னாள், மற்றவள் அன்னாள். பெனின்னாளுக்கு குழந்தை இருந்தது. அன்னாளுக்கோ குழந்தை இல்லை. பெனின்னாளோ, அன்னாள் மனம் துக்கப்படும்படியாக விசனப்படுத்துவாள். அவளை மனமடிவாக்குவாள். அன்னாளோ துக்கமுகமாய் அழுது கொண்டிருப்பாள். அன்னாள் மனம் கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தாள். உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி எனக்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தால் அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று பிரார்த்தனை செய்தாள். அதன்பின் அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை என்று வேதாகமம் சொல்கிறது. கர்த்தர் அவள் கண்ணீரை கண்டு விண்ணப்பத்தை கேட்டு சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை மகனாக அளித்தார்.

    குழந்தை இல்லை என்று கண்ணீரோடு இருப்பவர்களே நீங்கள் கவலைப்படாதிருங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் உங்களை காண்கிற தேவனாயிருக்கிறார். குழந்தையில்லை என்று துக்கத்தோடு இருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். தேவனை நோக்கி நம்பிக்கையோடு விண்ணப்பம் செய்யுங்கள். கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். ஆறுதல் தரும் தேவன் இன்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். ஆமென்.

    • காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள்.
    • மிதுனம், கன்னி - ஈசான்ய லிங்கம்.

    கிரிவலம் வரும் போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். இவை ஒவ்வொன்றும், எட்டுத் திசைகளின் காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள், அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    ரிஷபம், துலாம் - இந்திர லிங்கம்

    சிம்மம் - அக்னி லிங்கம்

    விருச்சிகம் - எம லிங்கம்

    மேஷம் - நிருதி லிங்கம்

    மகரம், கும்பம் - வருண லிங்கம்

    கடகம் - வாயு லிங்கம்

    தனுசு, மீனம் - குபேர லிங்கம்

    மிதுனம், கன்னி - ஈசான்ய லிங்கம்.

    ×