என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது.
    • சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மேடைகள், கோவில்கள், முக்கிய நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பெண்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். ஆனால் வாஷிங்டனில் உள்ள நினைவு சின்னம் முன்பு ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அதில் சுவாதி ஜெய்சங்கர் என்ற பெண் பாரம்பரிய முறைப்படி பரத நாட்டியம் ஆடுவதையும், அவரை சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது. அவரது இந்த நடன வீடியோ இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் பலரும் சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா தோற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் நாட்டு வீராங்கனை மேரி போஸ்கோவாவுடன் மோதினார்.

    இதில் போஸ்கோவா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஹவாய் காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.
    • ஹவாய் மாகாண தீவுக்கு அதிபர் ஜோ பைடன் விரைவில் செல்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்கள்தொகையை தவிர்த்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது. மளமளவென தீப்பற்றி எரிந்த நிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகி நாசமாகின.

    வீடுகள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகி நாசமாகின. சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். தீயில் கருகி உயிரிழந்தோரில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹலைனா நகரை சேர்ந்த அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மீட்புப் பணிகளில் உதவும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறும் பணியும் நடக்கிறது. ஆள் பற்றாக்குறையால் அமெரிக்காவில் இருந்து ராணுவம் களம் இறங்கியது. இந்நிலையில் ஹவாய் தீவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லவுள்ளார். காட்டுத்தீ பரவியுள்ள பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.

    • சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது
    • மேலை நாடுகளில் ப்ரி நப்ஷல் ஒப்பந்தம் என்பது பரவலான ஒன்று

    அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே 'பாப் இசையின் ராணி' என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இவரும் ஸாம் அஸ்கரி (Sam Asghari) எனும் நடிகரும் 5 வருட காலம் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். பிறகு 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது.

    இந்நிலையில் தங்களுக்கிடையே 'தீர்க்க முடியாத' கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அஸ்கரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த ஜூலை 28 முதல் பிரிந்து விட்டதாக அறிவித்து, அஸ்கரி நேற்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

    மேலும் ஈட்டு தொகையையும், வழக்கறிஞர் கட்டணத்தையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தான் தர வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

    விவாகரத்து கோரும் தம்பதியினருக்கு சொத்து பிரிவினை செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுவதனால், விவாகரத்து கிடைக்கும் காலம் நீள்வதும், இதனால் அவர்களின் எதிர்கால திட்டங்கள் தாமதமடைவதும் நடந்து வந்தது. இதனை தவிர்க்க திருமணத்திற்கு பிறகு ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டால், அதற்கு பிறகு பிரித்து கொள்ள வேண்டிய சொத்துக்கள் மற்றும் தங்கள் முன்னாள் மணத்துணை குறித்து எப்போதும் வெளியில் கருத்து கூறாமல் இருப்பது உள்ளிட்ட பல அம்சங்களை இணைத்து மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

    'ப்ரி நப்ஷல் ஒப்பந்தம்' (pre-nuptial agreement) எனும் இதனை ப்ரிட்னி வலுவாக செய்திருப்பதாகவும் அதனால் விவாகரத்திற்கு பிறகும் தனது சொத்துக்களை காப்பாற்றி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ப்ரிட்னி ஸ்பியர்ஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.498 கோடி ($60 million) ஆகும்.

    பிரபலமானவர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தும் லாரா வாஸ்ஸரை தனது தரப்பு வழக்கறிஞராக ப்ரிட்னி நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரிட்னியின் புகைப்படங்களில் அவர் திருமண மோதிரத்தை அணியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எவ்வாறு அவர் அமைத்து கொள்ள போகிறார் என்பதை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    • நிலைமையை உணர்ந்த போலீசார் தங்களது காரால் பெண்ணை இடித்து தள்ளினர்.
    • பெண் எதற்காக துப்பாக்கியுடன் சாலையில் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் வடக்கு பெல்மோர் பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து சிக்னல் அருகே ஒரு இளம்பெண் நின்று கொண்டு அங்கு வரும் கார்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர் பின்னர் கார்களை நோக்கி சுட்டதால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். துப்பாக்கியை கீழே போடுமாறு ஒரு போலீஸ்காரர் அந்த பெண்ணை நோக்கி சத்தம் போட்டார். அப்போது அந்த பெண் துப்பாக்கியை நீட்டியவாறு சாலையில் ஓடியதோடு தனது தலையை நோக்கி துப்பாக்கியை திருப்பினார்.

    நிலைமையை உணர்ந்த போலீசார் தங்களது காரால் அந்த பெண்ணை இடித்து தள்ளினர். இதனால் கீழே விழுந்த அந்த பெண் மீண்டும் துப்பாக்கியை எடுக்க முயன்றார். அதற்குள் மற்ற போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பெண் எதற்காக துப்பாக்கியுடன் சாலையில் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர்,

    செர்பியாவின் லஜோவிக்குடன் மோதினார்.

    இதில் லஜோவிக் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கனடா ஓபன் டென்னிஸ் சாம்பியனை வெற்றார்.

    • அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப்.
    • தேர்தல் மோசடி வழக்கில் டிரம்ப் உள்பட 19 பேருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார்.

    டிரம்ப்மீது தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்களுக்கு குற்றத்தை மறைப்பதற்காக பணம் வழங்குதல், வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை கடத்திச் சென்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அதில், ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த தேர்தலில் அவர் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

    அந்த சமயத்தில் ஜோ பைடனுக்கு எதிரான வாக்குகளைக் கண்டறியும்படி உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒருவருடன் டிரம்ப் போனில் பேசுவது போன்ற ஆடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் கசிந்தது. ஆனால் இந்த வழக்குகள் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட சதி எனக்கூறி வரும் டிரம்ப் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

    எனினும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேரும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆஜராக வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    • அதிகாரிகள் தங்கள் துப்பாக்கியை காட்டி, கோலை மிரட்டி கைது செய்ய முற்பட்டனர்
    • பெண் அதிகாரி மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுமா என்பதை மாவட்ட நீதித்துறை முடிவு செய்யும்

    அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ளது டென்வர். டென்வர் பகுதியை சேர்ந்தவர் பிராண்டன் கோல் (36).

    இவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் மனைவி சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் எங்கும் செல்ல முடியும்.

    அவர்களுக்குள் ஏதோ தகராறு நடைபெறுவதாகவும் அதில் கோல் தனது மனைவியை சக்கர நாற்காலியிலிருந்து கீழே தள்ளி விட்டு விட்டதாகவும், டென்வர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

    கோல் மது போதையில் இருப்பது போல் தெரிகிறது என்று கூறிய தகவல் தெரிவித்தவர், கோல் கையில் ஏதும் ஆயுதம் உள்ளதா, கோலின் மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என கூறினார். இதனையடுத்து அந்த வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

    அங்கு கோல் மனைவியை கீழே தள்ளி விட்டதனால் அவர் தரையில் சக்கர நாற்காலிக்கு அருகே உட்கார்ந்திருந்தார். மனைவி மீது தாக்குதலில் ஈடுபட முயன்ற கோலை, காவல்துறை அதிகாரிகள் தங்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கைது செய்ய முற்பட்டனர்.

    கைகளை மார்பளவு உயர்த்தியபடி கோல் அவர்களின் காரில் ஏற முயற்சித்தார். அந்த நேரத்தில் அவர் கையில் ஏதோ பொருளை எடுப்பதை அவர் பின்புறம் நின்றிருந்த ஒரு பெண் காவல் அதிகாரி கண்டார்.

    அதனை ஒரு கத்தி என நினைத்த அந்த அதிகாரி உடனடியாக கோலை சுட்டார். இதில் கோல் உயிரிழந்தார். பிறகு, அவரை பரிசோதித்த போது கோல் கையில் இருந்தது கத்தி அல்ல, ஒரு கருப்பு மார்க்கர் பேனா என தெரிய வந்தது.

    "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என இது குறித்து டென்வர் காவல்துறை ஆணையர் ரான் தாமஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அந்த பெண் அதிகாரி மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுமா இல்லையா என்பதை டென்வர் மாவட்ட நீதித்துறைதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு இது போன்ற சம்பவங்களில் காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதை காவல்துறை ஆய்வு செய்யும் என தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் மஸ்க்
    • எலான் மஸ்க் சண்டையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றார் மார்க்

    செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர்.

    இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி அதன் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் 'எக்ஸ்' என மாற்றினார்.

    உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.

    இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை வம்பு சண்டைக்கு இழுத்தார். இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், "சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்" என பதிலளித்திருந்தார்.

    இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

    மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது:-

    தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார்.

    இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது:-

    நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.

    இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.

    இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

    • அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
    • பாம்பு அங்கு எப்படி வந்தது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளில் ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராட்சத பாம்புகளை வனப்பகுதிகள், பூங்காக்களில் தவிர்த்து பொது இடங்கள் அல்லது வீடுகளில் கண்டால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

    அங்குள்ள சியோக்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது ஷாப்பிங் செய்வதற்காக கூடையை எடுத்தபோது அதில் சுமார் 6 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு கிடந்துள்ளது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சத்தம் போட்டார். உடனே அங்கு வந்த ஊழியர்கள் வனத்துறை மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ராட்சத பாம்பை மீட்டு கொண்டு சென்றனர். அந்த பாம்பு அங்கு எப்படி வந்தது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளில் ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • காட்டுத்தீ நகரத்திற்குள் பரவியதால் 90-க்கும் மேற்பட்டோர் பலி
    • ஏராளமானோரை காணவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

    அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக வீசியதால் காட்டுத்தீ கட்டுக்குள் வராமல் நகரக்குள் பரவியது. இதனால் 90-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    இந்த காட்டுத்தீயால் மவுய் தீவு கடும் சேதம் அடைந்துள்ளது. ஒரு நகரமே தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நானும் எனது மனைவியும் (ஜில் பைடன்) ஹவாய் செல்ல இருக்கிறோம். அங்கு செல்லும் நாங்கள் மவுய் காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    அங்கு செல்ல இருக்கும் ஜோ பைடன் எங்களால் மீட்புப்பணி, சுத்தப்படுத்தும் பணிக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்கா ஹவாய் தீவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என கவர்னர் ஜோஷ் கிரீனிடம் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்த ஜோ பைடன், ஹவாய் மக்களுக்கு தேவைப்படும் ஒவ்வொன்றும், அவர்களுக்கு சென்றடையும் என்றார்.

    ஜோ பைடன் சூறாவளி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். ஆனால், ஒஹியோவில் ரெயில் கவிழ்ந்து நச்சு ரசாயனம் வெளியேறியது. அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.

    மவுய் தீவில் காட்டுத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் இன்னும முழுயாக கண்டறியவில்லை. விசாரணை நடத்தி வருகிறார்கள். பழமையான லஹைனாவில் ஏற்பட்ட தீ 85 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×