என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • வீட்டின் மேலே பெரும் வெடிச்சத்தம் போன்று ஒரு சத்தம் கேட்டது
    • வானிலை எந்த மாற்றங்களும், மழையும் இன்றி சீராக இருந்தது

    அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ஜெஃப் இல்க் (Jeff Ilg) மற்றும் அவர் மனைவி அமேலியா ரெயின்வில் (Amelia Rainville) தம்பதி.

    இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். மாடியில் உள்ள படுக்கையறையில் அவர்களின் குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது பெரும் வெடிச்சத்தம் போன்று கேட்டதில் அவர்கள் திடுக்கிட்டனர். அந்த சத்தம் மாடியிலிருந்து வந்தது போலிருந்ததால், சத்தத்தை கேட்டு பரபரப்பாக மேலே ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் அறையில் வித்தியாசமாக ஏதும் காணப்படவும் இல்லை.

    இதனையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை சுற்றி ஒவ்வொரு இடமாக பார்வையிட்டனர்.

    அப்போது பின்புற படிக்கட்டுக்களில் ஒரு மிக பெரிய பனிப்பாறையின் உடைந்த துண்டு கிடப்பதை ஜெஃப் கண்டார். அந்த இடத்தை சுற்றி உடைந்த பனித்தூள்கள் இருந்தன. அவை வீட்டின் மேல்தள மொட்டை மாடியிலும் பரவி கிடந்தன.

    அப்போது வீட்டின் மேற்கூரையில் ஒரு பள்ளத்தையும் ஜெஃப் கண்டார்.

    அந்த நேரத்தில் பெருமழையோ, ஆலங்கட்டி மழையோ அங்கு பெய்து கொண்டிருக்கவில்லை. மேலும் மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் வானிலையும் சீராக இருந்தது.

    இரவு நேரம் எனபதால் ஏதேனும் சேதம் அடைந்திருக்கிறதா என்பது குறித்து அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது. அவர் மனைவி அமெலியா உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    கீழே விழுந்த பனிப்பாறை தூள்களிலிருந்தே அமெலியா சுமார் 4.5 கிலோ அளவிற்கு பனிப்பாறைகளை ஒரு பையில் சேகரித்தார்.

    மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறது.

    தரவுகளின்படி, இதுவரை அமெரிக்காவில் விழுந்த ஆலங்கட்டிகளிலேயே, 2010ல், தெற்கு டகோட்டாவில் உள்ள விவியன் பகுதியில் விழுந்த ஆலங்கட்டிதான் மிகப்பெரிதானது. அதன் எடை சுமார் 1 கிலோ.

    ஜெஃப் வீட்டில் கீழே விழுந்த பனிப்பாறையின் எடை சுமார் 6 கிலோலிருந்து 9 கிலோ வரை இருக்கும்.

    பாஸ்டன் நகரில் உள்ள விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்திலிருந்துதான் இந்த பனிப்பாறை விழுந்திருப்பதாக ஜெஃப் தம்பதியர் நம்புகின்றனர்.

    தற்போது ஜெஃப், அமெலியா தம்பதியின் வீட்டில் விழுந்த பனிப்பாறை என்னவென்றும், அது எங்கிருந்து எவ்வாறு அவர்கள் வீட்டில் விழுந்தது என்பதும் விசாரணை முடிவில்தான் தெரிய வரும்.

    • லயனல் மெஸ்ஸி சமீபத்தில்தான் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்
    • இறுதி ஆட்டம் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்காவில் நடைபெற்றது

    அமெரிக்க கால்பந்தாட்டத்தில் பிரபலமானது லீக்ஸ் கோப்பை போட்டிகள்.

    இந்த கோப்பைக்கான இறுதி ஆட்டம் அமெரிக்காவின் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், நாஷ்வில் எஸ்சி (Nashville SC) அணி, இன்டர் மியாமி அணியோடு மோதியது.

    உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினாவின் வீரரான லயனல் மெஸ்ஸி, சமீபத்தில் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    எனவே இந்த போட்டிகளை உலகெங்குமிலுள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கண்டு வந்தனர்.

    ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டித்தொடரில் மெஸ்ஸி 10 கோல்களை போட்டார்.

    அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1-1 என்ற செட் கணக்கில் கோல் அடித்து சமன் செய்தன.

    எனவே போட்டியின் வெற்றி பெனால்டியை வைத்து முடிவு செய்யப்பட்டது.

    பெனால்டிகளில் 10க்கு 9 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் நாளையுடன் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டை 2-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதினார்.

    முதல் செட்டை கோகோ காப் வென்றார். 2வது செட்டை ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை

    கோகோ காப் வென்றார்.

    இறுதியில், கோகோ காப் 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை சப்லென்கா 7-6 (7-4) என போராடி வென்றார். சுதாரித்துக் கொண்ட முசோவா அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    கடைசியில் முசோவா 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் முசோவா அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதவுள்ளார்.

    அரையிறுதிப் போட்டிகளில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ், ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் மெக்ஸ் பர்செலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டை 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், உலகின் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-0 6-4 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்வெரேவ், ஹர்காக்ஸ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • வேட் ராப்ஸன் (Wade Robson) மற்றும் ஜேம்ஸ் ஸேஃப்ச்க் (James Safechuck) ஆகிய இருவர் குற்றம் சாட்டினர்
    • 2009ல் மைக்கேல் ஜாக்ஸன் 50வது வயதில் எதிர்பாராதவிதமாக காலமானார்

    "பாப் பாடல் உலகின் ராஜா" என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்கவை சேர்ந்த மைக்கேல் ஜாக்சன். பாடகர், நடன கலைஞர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த மைக்கேல் ஜாக்சன் பெருமளவில் நன்கொடைகளை வழங்குவதிலும் புகழ் பெற்றிருந்தார்.

    இந்தியா உட்பட பல நாடுகளில் அவரது இசைக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய திரையுலகில், மேற்கத்திய நடனங்களில் இவர் பாணியை இன்றளவும் பலர் பயன்படுத்தி நடன காட்சிகளை அமைத்து வருகின்ற பிரபலங்கள் உள்ளனர்.

    2000 வருடங்களின் தொடக்கத்தில் அப்போது சிறுவர்களாக இருந்த வேட் ராப்சன் மற்றும் ஜேம்ஸ் சேஃப்சக் ஆகிய இருவர், 1980-களின் கடைசியிலும், 1990-களின் தொடக்கத்திலும், தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று ஜாக்சன் பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

    இச்செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஜாக்சன் முழுவதுமாக மறுத்தார். வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் 2009-ம் வருடம், தனது 50-வது வயதில் மைக்கேல் ஜாக்சன் எதிர்பாராதவிதமாக காலமானார்.

    தொடர்ந்து ஜாக்சனின் வியாபார நிறுவனங்களின் மீது சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமையில் இருந்து தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

    ஆனால் 2020-ம் வருடம், ஜாக்சன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டிற்காக, ஜாக்சன் தொடங்கி நடத்திய வர்த்தக நிறுவனங்களின் மீது குற்றம்சாட்ட முடியாது என லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்டி நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

    இந்த தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்பில், "ஒரு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கேடயமாக அந்நிறுவனத்தின் கட்டமைப்பை காரணமாக கருத முடியாது. பாலியல் தாக்குதலுக்கு மறைமுகமாக துணை போவதை மன்னிக்க முடியாது."

    "தாக்குதல் நடத்தியவர் நிறுவனத்தின் முழு பங்கையும் வைத்திருந்தார் என்பதாலும், தாக்குதலை அவர்தான் செய்தார் என்பதாலும், குழந்தைகளை காக்கும் ஆணித்தரமான கடமை நிறுவனத்திற்கு இல்லையென கூற முடியாது. ஒப்பிட்டு கூற இது போல ஒரு வழக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நிறுவனத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையென முடிவுக்கு வருவது வக்ரமான முடிவாக இருக்கும்," என்று கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் புத்துயிர் பெறப்போகிறது.

    • மினால் பட்டேல் ஜார்ஜியா மாநிலத்தில் லேப் சொல்யூஷன்ஸ் பெயரில் மருத்துவ ஆய்வகம் நடத்தி வந்தார்
    • இதை தவிர, தனிப்பட்ட முறையில் ரூ.175 கோடி மோசடியாக பெற்று கொண்டார்

    உலகின் முன்னணி நாடான அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் மிக அதிகம் என்பதால், அங்குள்ள மக்கள் காப்பீடு மூலம்தான் தங்களுக்கு தேவைப்படும் மருத்துவ செலவினங்களை செய்து கொள்ள முடியும்.

    இதற்கு பல காப்பீடு நிறுவனங்கள் இருந்தாலும், மெடிகேர் எனும் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் காப்பீடுகளைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன்படி பயனாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட ஆய்வக பரிசோதனகள், ஸ்கேன் உள்ளிட்ட இமேஜிங் பரிசோதனைகள் மற்றும் உயர்-ரக தொழில்நுட்ப உடற்கூறு பரிசோதனைகளுக்கான தொகை, மெடிகேர் நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆய்வக மற்றும் பரிசோதனை கூடங்களுக்கு செலுத்தப்பட்டு விடும்.

    இது சம்பந்தமான ஊழல் ஒன்று அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ளது லேப் சொல்யூஷன்ஸ், எல்.எல்.சி. எனும் மருத்துவ ஆய்வகம். இதை மினால் பட்டேல் (44) எனும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடத்தி வருகிறார். இவர் பெரும் பணம் சம்பாதிக்க ஒரு திட்டம் தீட்டி மெடிகேர் பயனாளிகளை குறி வைத்தார்.

    பயனாளிகளுடன் தொடர்பில் உள்ள சில முகவர்கள், கால் சென்டர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அகியவற்றை தொடர்பு கொண்டார். இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மூலம், பயனாளிகளுக்கு அவசியம் இல்லாத சில புற்றுநோய் சம்பந்தமான அதிநுட்ப மரபியல் சோதனைகளை பயனாளிகள் செய்து கொண்டே ஆக வேண்டும் என நம்ப செய்தார்.

    இந்த பரிசோதனைகள் காப்பீட்டுக்கு உட்பட்டது என கூறி அவர்களை பரிசோதனைகளை செய்து கொள்ள வைத்தார். இதற்காக அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஒப்புதல்களையும் மோசடி செய்து பெற்றார். தேவையற்ற இந்த பரிசோதனைகளுக்கான செலவுகளுக்கு ரசீதுகளை மெடிகேரில் செலுத்தி பணத்தையும் பெற்றுக் கொண்டார்.

    இந்த வழிமுறையில் மினால் பட்டேல் ஜூலை 2016 முதல் ஆகஸ்ட் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.3 ஆயிரத்து 850 கோடிக்கு ($463 million) மேல் மோசடி செய்தார்.

    மத்திய புலனாய்வு அமைப்பின் சுகாதார ஊழல் தடுப்பு படைக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆபரேஷன் டபுள் ஹெலிக்ஸ் எனும் பெயரில் மினாலை பிடிக்க ஒரு ரகசிய திட்டம் போட்டது. இதில் அவர் பொறி வைத்து பிடிக்கப்பட்டார்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது. இறுதியில் நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது.

    ஆகஸ்ட் 25 அன்று அவரது சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசாரணை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கனமழை மற்றும் பெருமளவு பாதிப்பு
    • உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

    அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று உருவானது. இது கிழக்கு பசிபிக் கடல் பகுதியை நோக்கி விரைகிறது. இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

    கடைசியாக 1939-ம் ஆண்டு சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கனமழை மற்றும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறையும் இது நடந்தால் கிட்டத்தட்ட 84 வருடங்களுக்கு பிறகு ஏற்படும் சூறாவளியாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி, மணிக்கு 140 மைல் (மணிக்கு 225 கி.மீ.) வேகத்தை அடைந்துள்ள இந்த சூறாவளியை 4வது ரகமாக தேசிய சூறாவளி மைய நிபுணர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

    இதனால் தென்மேற்கு அமெரிக்காவில் இன்று தொடங்கி அடுத்த வாரம் புதன்கிழமை வரை கடும் புயல் காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இது நாளை, நாளை மறுநாள் மேலும் தீவிரமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயல் காரணமாக கடுமையான சேதங்கள் உண்டாகலாம் எனவும் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

    இந்த சூறாவளி தெற்கு கலிபோர்னியா, தெற்கு நிவேடா, மேற்கு அரிசோனா மற்றும் தென்மேற்கு உட்டா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சூறாவளி மற்றும் கனமழை எச்சரிக்கையை அடுத்து, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை தடுக்க மண்மூட்டைகளை அடுக்கியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சமாளிக்க ஜெனரேட்டரையும் தயார் செய்து வருகின்றனர்.

    மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து வசதி தடைபடலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அவசரகால சேவை அமைப்புகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும், மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளையும், அங்கு தேவைப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் சேமித்து, சீராக வினியோகம் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் வென்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வாண்ட்ருசோவாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் 3வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நபர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6 (8-6), 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்வெரேவ், ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார்.
    • விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 மாத விண்வெளி பயணமாக சென்றுள்ளார். அவர் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலை புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது மகனுடன் பேசி உள்ளார். அப்போது அவரிடம் பூமியில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும் என அவரது மகன் அப்துல்லா கேட்டுள்ளார். அதற்கு அவர் மகன், பூமியில் நான் மிகவும் விரும்பும் விஷயம் நீ தான் என்று சுல்தான் அல் நெயாடி குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், விண்வெளியில் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்ன என்று கேட்கிறீர்கள். அது உங்களுக்கு தெரியும். நாங்கள் இங்கே மைக்ரோ கிராவிட்டி சூழலில் இருக்கிறோம். நீங்கள் விரும்பும் பல விஷயங்களை நாங்கள் இங்கே செய்யலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறப்பது போன்ற அனைத்தையும் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் டுவிட்டரில் வைரலாகி வரும் நிலையில் அதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • பிரபல தொலைக்காட்சிக்கு விவேக் ராமஸ்வாமி பேட்டியளித்தார்
    • விவேக் ராமஸ்வாமி மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்

    உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில், 2024 நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தற்போது வரை களத்தில் இறங்க இருக்கின்றனர்.

    ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட ஆர்வமாக உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். ஆனால் அவர் மீது உள்ள வழக்குகளின் தீர்ப்புகளை பொறுத்தே அவர் போட்டியில் இருப்பாரா இல்லையா என தெரிய வரும்.

    இந்நிலையில் குடியரசு கட்சி சார்பிலேயே 10-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பாளராக போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியிலேயே நிக்கி ஹேலி, ஹிர்ஷ் வர்தன் சிங், மற்றும் விவேக் ராமஸ்வாமி ஆகிய 3 இந்திய வம்சாவளியினரும் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர்.

    இவர்கள் அனைவரிலும் மிகவும் வயது குறைந்தவரும், ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவரான விவேக் ராமஸ்வாமி, கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய இந்திய பெற்றோர்களுக்கு பிறந்தவர்.

    பல அதிரடி திட்டங்களையும், கருத்துக்களையும் கூறி வரும் விவேக், அமெரிக்காவில் வாக்களிக்கும் வயதை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வாதாடுகிறார்.

    சில மாதங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், தனது சீன சுற்றுபயணத்தின் போது தெரிவித்ததாவது, "அமெரிக்காவும், சீனாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். சீனாவில் எனது வர்த்தகத்தை விரிவுபடுத்த போகிறேன். சீனாவின் சக்தியையும், நம்பிக்கையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இதை குறிப்பிட்டு மஸ்கை விமர்சித்திருந்தார் விவேக். அப்போது அவர், "டுவிட்டரை எக்ஸ் என மாற்றி மேம்படுத்தும் முயற்சியை ஆதரிக்கிறேன். அதே வேளையில், சீனா தனது மறைமுக நோக்கங்களுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களை பொம்மைகளை போல் இயக்குவதை எதிர்க்கிறேன். இதற்கு அமெரிக்கர்கள் கருவிகளாக போய் விட கூடாது. இதனை எதிர்க்கும் தலைமை வேண்டும்," என்று விமர்சித்து இருந்தார்.

    இந்நிலையில் டக்கர் கார்ல்ஸன் எனும் ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியாளருக்கு விவேக் ராமசாமி பேட்டியளித்தார். இப்பேட்டியின் வீடியோவை இணைத்து தனது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க். தன்னை விமர்சித்த விவேக் ராமசாமியை, ஆச்சரியப்படும் விதமாக மஸ்க், "ஒரு நம்பிக்கைக்குரிய வேட்பாளர்" என பாராட்டியுள்ளார்.

    இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனாக், பிரிட்டன் பிரதமராக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் அதே போல் ஒருவர் வரவேண்டும் என பல இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

    வைரலாகியிருக்கும் இந்த வீடியோவை கண்ட இந்தியர்கள், தன்னை விமர்சித்தவராக இருந்தாலும் விவேக் ராமசாமியின் தலைமை மற்றும் திறமை குறித்து எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    ×