என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • காபூல் நகர் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்.
    • தாக்குதலில் காயம், சேதம் ஏற்பட்டதாக என்பது தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.

    தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள மார்க்கெட் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதவை, கொடூரனமாவை, தங்களுடைய வான்வெளியை மீறியதாக பாகிஸ்தான் மீது தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    அரசின் தலைமை செய்திதொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் கூறுகையில் "அந்த நேரத்தில் அங்கு காயம் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அது ஒரு விபத்து. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

    ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று "இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு. கிழக்கு மாகாணமான பாக்தியாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது. காபூலிலில் விமானங்கள் சுட்டுவீழ்த்த முடியாத வகையில் எப்படி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் தெரிவிக்கவில்லை.

    இந்த தாக்குதல் முன்எப்போதும் இல்லாதது, வன்முறையானது. கொடூரமானது. இந்த சூழ்நிலை இன்னும் மோசமானால் பாகிஸ்தான் ராணுவம் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா காபூர் நகர் மீது தாக்குதல் நடத்திய பிறகு, நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தபின், முதன்முறையாக இந்தியாவில் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தையில் தலிபான் அரசு ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம்சாட்டிய 48 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
    • பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.

    தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம்சாட்டிய 48 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே இத்தாக்குதல் சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

    • சோதனைக்காக அந்தப் பயணியை தலிபான் வீரர் ஒருவர் நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளார்.
    • இதன்பின் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.

    ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரை தலிபான் பாதுகாப்புப் படையினர் அன்புடன் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சோதனைச் சாவடி ஒன்றில் வழக்கமான பாஸ்போர்ட் சோதனைக்காக அந்தப் பயணியை தலிபான் வீரர் ஒருவர் நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளார்.

    அவர் தன்னை இந்தியர் என்று கூறியவுடன், தாலிபான் வீரர் உடனடியாகச் சிரித்து, அவரை வரவேற்று, ஆவணங்களைச் சரிபார்க்காமல் செல்ல அனுமதித்தனர்.

    அந்த வீரர், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சகோதரர்கள் போல என்று கூறியதுடன், இந்திய பயணியை தேநீர் அருந்த அழைத்தார். இதன்பின் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.

    "ஆப்கானிஸ்தான் தனது உண்மையான நண்பர்களை இப்படித்தான் நடத்துகிறது" என்ற தலைப்பில் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

    • ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது.
    • பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில் பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

    இதைத் தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கடுமையான கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணைய சேவை திடீரென முடங்கியது. இதனால் அங்கு இணைய சேவையை பயன்படுத்தும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தலைநகர் காபூலில் இணைய சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள ஒளியியல் இழைகள் (ஆப்டிகல் பைபர் ஒயர்கள்) சேதப்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் என முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் தலிபான் அரசின் தலையீடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார்.
    • ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும் என்றார்.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.

    இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.

    ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார்.

    இதற்கிடையே தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் "விரைவில்" திருப்பித் தர வேண்டும்.

    அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்" என்றார்.

    இந்நிலையில் டிரம்ப் மிரட்டலை தாலிபான் அரசு நிராகரித்துள்ளது.

    இத்தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி பஸிஹுதீன் ஃபித்ரத், "சிலர் அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் தளத்தை மீண்டும் பெற பேச்சுவார்த்தை நடந்த விரும்புகின்றனர்.

    ஆனால் எந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது." என்று தெரிவித்தார்.

    மேலும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசு, "நாட்டின் சுதந்திரம் மற்றும் நிலையான ஒருமைப்பாடு மிக முக்கியமானவை" என தெரிவித்துள்ளது. 

    • லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
    • பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது.

    இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்திய போர் விமானங்கள் ஊடுருவி தாக்கியது.

    பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பல இடங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் தங்களது முகாம்கள் அழிக்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

    இந்தநிலையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியால் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தங்களது முகாம்களை வேறு இடத்துக்கு மாற்ற தொடங்கி உள்ளன. இதை இந்திய ராணுவ வட்டாரங்கள் கண்டறிந்து உள்ளது.

    பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாக பயங்கரவாதிகள் கருதுகிறார்கள்.

    இதையடுத்து இந்திய எல்லையில் இருந்து அதிக தூரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளியே சென்று வீடு திரும்பும் போது காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டனர்.
    • ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய தலிபான்களிடம் கத்தார் அரசு மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தியது.

     ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் எட்டு மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர் விடுவிக்கப்பட்டனர்.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் பாமியன் மாகாணத்தில் பீட்டர் ரெனால்ட்ஸ் (80) மற்றும் அவரது மனைவி பார்பி (76) வசித்து வந்தனர். அங்கு கல்வி மற்றும் பயிற்சி அமைப்பை அவர்கள் இணைந்து நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியே சென்று வீடு திரும்பும் போது காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி மேற்கு நாடுகள் வலியுறுத்தி வந்தன. மேலும் ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய தலிபான்களிடம் கத்தார் அரசு மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்நிலையில் பல தரப்பின் தொடர் வலியுறுத்தலின் பேரில் பீட்டர் மற்றும் அவரது மனைவி பார்பீ ஆகியோரை தலிபான் அரசு தற்போது விடுதலைச் செய்துள்ளது.

    அவர்கள் இருவரும், நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் இங்கிலாந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தம்பதியினர் ஆப்கானிஸ்தான் சட்டத்தை மீறியதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான வைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

    அமெரிக்க படைகள் வெளியேறிய பின் கடந்த 2021 இல் ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசாங்கத்தை இங்கிலாந்து அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  

    தாலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைஃபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில், நேற்று முதல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் வணிகம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இணையத்தை பெரிதும் நம்பியிருப்பதால், இது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொலைபேசி நெட்வொர்க்குகள் வழியாக மட்டுமே இணையத்தை அணுக முடியும், ஆனால் அதுவும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளது.  

    • டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
    • தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் கோலி விளையாடி வருகிறார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், கோலியின் பேட்டிங்கை தாலிபன்கள் கூட ரசித்து பார்ப்பதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் மற்றும் தாலிபான் இயக்கத்தின் தலைவரான அனஸ் ஹக்கானி தெரிவித்தார்.

    கோலி குறித்து பேசிய ஹக்கானி, "விராட் கோலி தனது 50 வயதாகும் வரை விளையாட வேண்டும். அவருடைய பேட்டிங்கை தாலிபான்கள் கூட ரசித்து பார்க்கின்றனர். டெஸ்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.

    • ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ அறிக்கைப்படி, பூமியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,600-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாகின. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    அதே பகுதியில் கடந்த செய்வ்வாய்கிழமை மாலையும் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தென் கிழக்குப் பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:56 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

    ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ அறிக்கைப்படி, பூமியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன. அதிர்வுகள் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை 

    • ஆப்கானிஸ்தானில் கடந்த 31-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹர் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,394 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படை சென்றடைவது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
    • பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் அவை இடிந்து விழுந்தன.

    இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    மீட்டுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஞாயிறு இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட அதே குனார் பகுதியை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிக்கைபடி, இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளில் இன்றும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.

    குனார் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் ஊடகங்களிடம் பேசுகையில், .இந்த புதிய நிலக்காடுகத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 

    ×