என் மலர்
கால்பந்து
- யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.
இதில் குரூப் E பிரிவில் ஸ்லோவாக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியின் மைகோலா 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன்பின் 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக் இன்னொரு கோல் அடித்தார்.
இதன்மூலம் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி உக்ரைன் வெற்றி பெற்றது.
இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால் அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
- முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
அட்லாண்டா:
உலககோப்பை கால்பந்து, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியாகும்.
வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டி பழமையானதாகும். 1916-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடைசியாக 2021-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.
48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இந்திய நேரடிப்படி இன்று காலை அமெரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இன்று காலை நடந்த தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா-கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
49-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரசும், 88-வது நிமிடத்தில் லாடரோ மார்டினெசும் கோல் அடித்தனர்.
- இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் 'சி' பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் மோர்டன் ஹூல்மண்ட் ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
- ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
- இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "பி"-யில் இடம் பிடித்துள்ள இத்தாலி- ஸ்பெயின் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி ஒரு கோல் அடித்தார்.
இதன்பின் இத்தாலி அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- கடைசி நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி செர்பியா கோல் அடித்தது.
யூரோ 2024 கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "சி"-யில் இடம் பிடித்துள்ள ஸ்லோவேனியா- செர்பியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களாகும் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை.
இறுதியாக ஸ்லோவேனியா 69-வது நிமிடத்தில் கோல் அடித்தது. கோல் கம்பத்திற்கு இடது புறத்தில் இருந்து பாஸ் செய்த பந்தை ஜான் கார்னிக்னிக் கோலாக்கினார். இதனால் ஸ்லோவேனியா 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பின் 90 நிமிடம் வரை செர்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் நிறுத்தம் மற்றும் இன்ஜூரிக்கான நேரமாக கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
95-வது நிமிடத்தில் செர்பியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை லூகா ஜோவிக் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
ஸ்லோவேனியா அணிக்கு 4 கார்னர் வாய்ப்பும், செர்பியா அணிக்கு 9 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. இரு அணிகளும் கோல் கம்பத்தை நோக்கி தலா 4 முறை டார்கெட் செய்தனர். செர்பியா வீரர்கள் 586 பாஸ் செய்த நிலையில், ஸ்லோவேனியா வீரர்கள் 347 பாஸ் செய்தனர்.
- ஹங்கேரி அணிக்கு எதிராக 3-1 என சுவிட்சர்லாந்து அபார வெற்றி.
- ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டயில் ஸ்காட்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற அபார வெற்றியை பெற்ற சுவிட்சர்லாந்து, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.
மறுபுறம் ஸ்காட்லாந்து அணியும் வெற்றி முனைப்பில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் ஸ்காட் மெக்டொமினே அடித்த கோல் காரணமாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.
இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டிய சுவிட்சர்லாந்து அணிக்கு ஷகிரி 20 யார்ட்களில் இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில இருந்தன.
இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் இன்னொரு கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடிவில் 1-1 என்ற வகையில் போட்டி சமனில் முடிந்தது.
- ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
- அந்த அணி முதல் கோலை அடித்தது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
முந்தைய போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற்ற நிலையில், ஹங்கேரியை வீழ்த்தும் முனைப்பில் ஜெர்மனி அணி விளையாடியது. போட்டியின் முதல் பத்து நிமிடங்களில் ஜெர்மனி களத்தில் செட் ஆகும் வரை மட்டும் ஹங்கேரி வீரர்கள் ஆதிக்கம் இருந்தது. திடீரென இந்த நிலையில், மாற்றம் ஏற்பட்டது.
ஜெர்மனி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், ஜெர்மனி அணி முதல் கோலை அடித்தது. இதைத் தொடர்ந்து ஹங்கேரி அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோலில் முன்னிலை வகித்தது.
எனினும், இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கும் முனைப்பில் ஜெர்மனி தீவிரம் காட்டியது. அந்த வகையில் ஜெர்மனி வீரர் குண்டோகன் தனது 19 வது சர்வதேச கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போட்டி முழுக்க ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஜெர்மனி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹங்கேரி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதல் பாதி நேரத்தில் அல்பேனியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
- ஓன் கோல் கிடைத்ததால் குரோசியா 2 கோல் அடித்தது.
யூரோ 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெற்ற போட்டியில் "பி" குரூப்பில் இடம் பிடித்துள்ள குரோசியா- அல்பேனியா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் அல்பேனியா முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணியின் குவாசிம் லாசி இந்த கோலை அடித்தார். அதன்பின் இரண்டு அணி வீரர்களால் முதல் பாதி நேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அல்பேனியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்து.
2-வது பாதி நேர ஆட்டத்தில் குரோசியா வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். நீண்ட நேர முயற்சிக்குப்பின் 74-வது நிமிடத்தில் வாய்ப்பு கிடைத்தது. அன்ட்ரெஜ் கிராமாரிக் கோல் அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் குரோசியாவுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.
அல்பேனியா கோல் கம்பம் அருகே குரோசிய வீரர் கோல் அடிக்க முயற்சி செய்து பந்தை உதைத்தார். அதை அல்பேனிய வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது கிளாஸ் ஜாசுலாவின் காலில் பந்து பட்டு கோலாக மாறியது. இதனால் குரோசியாவிற்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் குரோசியா 2-0 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் அல்பேனியா வீரர்களை கோல் அடிக்க விடாத வகையில் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 90 நிமிடம் வரை அல்பேனியா வீரர்களால் கோல் அடிக்கமுடியவில்லை. காயத்திற்கான நேரம் என 6 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.
அதில் 95-வது நிமிடத்தில் ஓன் கோல் கொடுத்த கிளாஸ் ஜாசுலா சிறப்பான முறையில் கோல் அடித்தார். சக வீரர் கோல் கம்பம் அருகே பந்தை கடத்தி இவருக்கு பாஸ் செய்ய குரோசிய வீரர் அதை தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவரை கடந்து ஜாசுலாவிடம் வந்தது. அவர் எளிதாக அதை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
ஓன் கோல் கொடுக்கவில்லை என்றால் அல்பேனியா வெற்றி பெற்றிருக்கும். இறுதியில் போட்டியில் டிராவில் முடிந்ததால் அல்பேனியா ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.
- கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
- செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெற்ற க்ரூப் எஃப் பிரிவு போட்டியில் போர்ச்சுகல் மற்றும் செக் குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியில் போர்ச்சுகல் நாட்டின் இளம் வீரர் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
21 வயதான போர்ச்சுகல் வீரர் எல்லை கோட்டின் அருகில் வைத்து அடித்த ஷாட்-ஐ செக் குடியரசு வீரர்களால் சரியாக தடுக்க முடியாமல் போனது. இது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் போர்ச்சுகல் அணி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.
துவக்கம் முதலே போர்ச்சுகல் அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனினும், போராடிய செக் குடியரசு வீரர்கள் கடும் போட்டியை ஏற்படுத்தினர். கிடைக்கும் இடங்களில் கோல் அடிக்கும் முயற்சியில் செக் குடியரசு வீரர்கள் ஈடுபட்டனர். இதன் பலனாக போட்டியின் 60-வது நிமிடத்தில் செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.
இதைத் தொடர்ந்து செக் குடியரசு வீரர் ராபின் ரனாக் செய்த தவறு காரணமாக எதிரணிக்கு ஒரு கோல் கிடைத்தது. இரு அணிகளும் ஒரு கோல் என்ற நிலைக்கு வந்ததும், போட்டி சமனில் முடிய கூடாது என்ற எண்ணத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர்.
பிரபல வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 6-வது யூரோ கோப்பை தொடரில் களமிறங்கி விளையாடி வருகிறார். எனினும், நேற்றைய போட்டியில் அவரது ஷாட்கள் எதையும் கோலாக மாறாமல் எதிரணி கோல் கீப்பர் ஜின்ட்ரிச் ஸ்டானெக் பார்த்துக் கொண்டார். இதனால் போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.
இதையடுத்து இரு அணி வீரர்களும் தங்கள் அணிக்கு ஒரு கோல் அடிக்க போராடினர். எனினும், போர்ச்சுகல் அணியின் கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை கொடுத்தது.
- லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
- மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர்.
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் இளம் வீரர் அர்டா குலெர் லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் துருக்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது.
இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 25-வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்துர் வேகமாக அடித்த ஷாட் கோலாக மாறியது. மேலும், போட்டியில் துருக்கி அணிக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தது.
மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக ஜார்ஜியா அணி போட்டியன் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதையடுத்து போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த சமனில் இருந்தன.
போட்டியின் இரண்டாம் பாதி எந்த அணி இன்னொரு கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியது. இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். முடிந்த வரை போட்டியில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கி வீரர்கள், இடையில் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றும் முயற்சியிலும் இறங்கினர்.

அந்த வகையில், போட்டியின் 65-வது நிமிடத்தில் துருக்கி அணிக்காக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் அர்டா குலெர் யாரும் எதிர்பாரா நிலையில் கோல் அடித்தார். இதன் மூலம் துருக்கி அணி 2-1 என்ற வகையில் போட்டியில் முன்னிலை பெற்றது. போட்டி முடிவில் துருக்கி அணி 3 கோல்களை அடித்து இருந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற வகையில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் துருக்கி வீரர் அர்டா குலெர் கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். யூரோ கால்பந்து வரலாற்றின் அறிமுக போட்டியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை அர்டா குலெர் பெற்றிருக்கிறார்.
முன்னதாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 19 வயது 128 நாளில் முதல் கோல் அடித்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் கோல் அடித்த அர்டா குலெர் தனது 19 வது 114-வது நாளில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
- ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர்.
- FIFA-ன் சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டிருந்தது.
விளையாட்டு உலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவரான டோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த டோனியை அவரது ரசிகர்கள் 'தல' என்று அன்பாக அழைத்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து டோனியின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மீம்கள் மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் மூலம் thala for a reason என பரப்பப்பட்டது. இப்போது இந்த தல என்ற வார்த்தை கால்பந்து உலகக் கோப்பையிலும் தடம் பதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டோனியின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக புகழ்பெற்ற FIFA-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர். அவரையும், கிரிக்கெட் ஜாம்பவான் டோனியையும் பெருமை சேர்க்கும் விதமாக ஃபிபா உலகக் கோப்பை 'தல' என்ற இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
ஃபிபா உலகக் கோப்பை பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்ட ரொனால்டோவின் கேப்ஷனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், கமெண்டில் ரொனால்டோவில் ஜெர்சி எண்ணும் 7, டோனியின் ஜெர்சி எண்ணும் 7 எனவே இருவரும் எங்களுக்கு தலதான் என்று பதிவிட்டு வருகின்றனர்.
- ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் மே மாதம் 25-ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
- நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் போட்டியில் செல்சி அணியை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் பிரிமீயர் லீக். இந்த தொடரின் 2024-25 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போட்டி ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனெடெட், புல்ஹாம் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி 18-ந்தேதி செல்சி அணியை எதிர்கொள்கிறது, லிவர்பூல் 17-ந்தேதி இப்ஸ்விச் அணிக்கெதிராக விளையாடுகிறது. சனிக்கிழமையான அன்று ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மே 25-ந்தேதி வரை பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெறும். இதில் 20 அணிகள் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தங்களுடைய மைதானத்தில் (Home Ground) ஒருமுறை, எதிரணி மைதானத்தில் (Away Ground) ஒருமுறை என இரண்டு முறை மோத வேண்டும். லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
2023-24 சீசனில் மான்செஸ்டர் சிட்டி 28 வெற்றிகள், 7 டிரா, 3 தோல்விகள் மூலம் 91 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது. அர்செனல் 28 வெற்றி தலா 5 டிரா, தோல்விகள் மூலம் 89 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
லிவர்பூல் (82), 3-வது இடத்தையும், அஸ்டோன் வில்லா (68) 4-வது இடத்தையும், டோட்டன்ஹாம் (66) 5-வது இடத்தையும் பிடித்தன. மான்செஸ்டர் யுனைடெட் 60 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தது.






