என் மலர்tooltip icon

    கால்பந்து

    • ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

     


    போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. போர்ச்சுகல் அணி வெற்றிக்கு ரொனால்டோ முதல் கோல் அடித்து அசத்தினார். மறுபுறம் போர்ச்சுகல் அணி கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா மூன்று பெனால்டி ஷூட்-அவுட்களை தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை எந்த அணியும் இத்தனை முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
    • பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.

    எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இரண்டாவது பாதியில் எந்த அணி கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் போராட்டத்தில் தீவிரம் காட்டினர்.

    போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், பெல்ஜியம் வீரர்களின் ஓன் கோல் காரணமாக பிரான்ஸ் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், போட்டி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது. 

    • ஓன் கோல் மூலம் ஜார்ஜியாவுக்கு முதல் கோல் கிடைத்தது.
    • அதன்பின் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 4 கோல்கள் அடித்தனர்.

    ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.

    இன்று இரவு நடைபெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் விளையாடின. இதில் ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜார்ஜியா வீரர் அடித்த பந்தை கோல் விழாமல் தடுக்க முயன்றார் ஸ்பெயின் வீரர் ராபின் லே நோர்மண்ட். ஆனால் பந்து அவர் மீது பட்டு கோலாக மாறியது. இதனால் ஜார்ஜியாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் அடித்தது.

    ஆனால் 39-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி இடது பக்கம் இருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார். 51-வது நிமிடத்தில் ஃபேபியன் ரூய்ஸ், 75-வது நிமிடத்தில் நிகோ வில்லியம்ஸ், 83-வது நிமிடத்தில் டேனி ஆல்மோ கோல் அடிக்க ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்றது. ஸ்பெயின் காலிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. 

    • ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
    • போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    கொலோன்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

    சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.

    இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    • முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
    • 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.

    லாஸ் வேகாஸ்:

    கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 'டி' பிரிவு ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. பிரேசில் அணிக்காக வின்சியஸ் 2 கோலும், சவியோ, லுகாஸ் பகுடோ தலா ஒரு கோலும் அடித்தனர். பிரேசில் பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.

    மற்றொரு போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. 2 வெற்றியுடன் அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.

    • ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார்.
    • இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ஜார்ஜியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டி துவங்கிய 2-வது நிமிடத்தில் ஜார்ஜிாய வீரர் விச்சா குவார்ட்ஸ்கெலியா (khvicha kvaratskhelia) முதல் கோலை அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.

    பிறகு போட்டியின் 57-வது நிமிடத்தில் மிகுடாட்ஸ் ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார். இதன் காரணமாக ஜார்ஜியா அணி 2-0 என்ற அடிப்படையில் போர்ச்சுகலை வீழ்த்தி வரலாற்று பெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் ஏற்கனவே போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    எனினும், ஜார்ஜியா அணியின் வெற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் ரொனால்டோ துவங்கி வைத்த கால்பந்து பயிற்சி மையத்தில் சிறுவர்களாக பயிற்சி பெற்றவர்களில் ஒருவர்தான் குவார்ட்ஸ்கெலியா.

     


    அன்று ரொனால்டோ துவங்கி வைத்த பயிற்சி மையத்தை சேர்ந்த சிறுவன் இன்று ரொனால்டோ அணிக்கு எதிரான போட்டியில் ஜார்ஜியா அணிக்காக விளையாடி உள்ளார். மேலும், தனது அணி வெற்றி பெறவும் காரணமாக விளங்கினார். இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதும் வென்றுள்ளார்.

    இந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு ஜார்ஜிய வீரர் குவார்ட்ஸ்கெலியா போர்ச்சுகவல் வீரரும், கால்பந்து ஜாம்வானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சியை வாங்கிக் கொண்டார். பிறகு, ரொனால்டோவின் ஜெர்சி மற்றும் ஆட்டநாயகன் விருது ஆகியவற்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அதற்கு "கனவு" என தலைப்பிட்டுள்ளார்.

    கடந்த பத்து நாட்களுக்கு முன், "போட்டிக்கு பிறகு கிறிஸ்டியானோவிடம் அவரது ஜெர்சியை கேட்கலாமா? ஏன் கேட்க கூடாது? அவர் எனது ரோல்மாடல். அவரிடம் அதை தெரிவிப்பேன். இதனால் எங்களால் அவரை வீழ்த்த முடியாது என்றில்லை," என்று பதிவிட்ட குவார்ட்ஸ்கெலியோ நேற்றைய போட்டியில் வெற்றியை பெற்றதோடு ரொனால்டோவின் ஜெர்சியையும் வாங்கிக் கொண்டுள்ளார். 

    • நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
    • நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.

    ஹம்பர்க்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. குரூப் எப் பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    ஒரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-2 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. அந்த அணிக்காக குவரட்ஸ் கெலியா (2-வது நிமிடம்), மிகுடாட்ஸ் (57-வது நிமிடம், பெனால்டி) கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் ஜார்ஜியா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி சுற்று இருந்தது. அந்த அணி 6 புள்ளியுடன் எப் பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

    இதே பிரிவில் ஹம்பர்க்கில் நடந்த மற்றொரு போட்டியில் துருக்கி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசுவை வீழ்த்தியது. துருக்கி அணிக்காக சல்ஹா னோக்லு (51-வது நிமிடம்) டாசுன் (94-வது நிமிடம்) ஆகியோரும், செக் குடியரசு அணியில் தாமஸ் சவுசக்கும் (66-வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த வெற்றி மூலம் துருக்கி 6 புள்ளிகளு டன் 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. செக் குடியரசு 1 புள்ளியுடன் வெளியேறியது.

    முன்னதாக இ பிரிவில் ருமேனியா- சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெல்ஜியம்- உக்ரைன் அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    'இ' பிரிவில் 4 அணிகளும் 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் ருமேனியா, பெல்ஜியம், சுலோவாக்கியா முறையே முதல் 3 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறின. உக்ரைன் வெளியேற்றப்பட்டது.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.

    • மோதிய இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    • சிலி, கனடா, பெரு அணிகள் காலிறுதிக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் கடுமையாக போராடும் நிலை.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா- சிலி அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டம் முடியும் தருவாயில் அர்ஜென்டினா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை கிடைத்தது. அந்த அணியின் மார்ட்டினேஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் "ஏ" பிரிவில் அர்ஜென்டினா இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கனடா 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    3 அணிகளின் காலிறுதி வாய்ப்பு

    சிலி ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது. பெரு ஒரு தோல்வி, ஒரு டிரா உடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கின்றன.

    அர்ஜென்டினா பெருவை எதிர்கொள்கிறது. கனடா சிலியை எதிர்கொள்கிறது. கனடாவுக்கு எதிராக சிலி வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முன்னேற முடியும். டிரா செய்தால் கனடா முன்னேறி விடும்.

    அதேபோல் அர்ஜென்டினாவுக்கு பெரு அதிர்ச்சி அளித்து, கனடா தோல்வியடைந்தால் சிலி, பெரு இடையே கோல் அடிப்படையில் காலிறுக்கு முன்னேறும் போட்டி நீடிக்கும்.

    கனடா- பெரு போட்டி

    மற்றொரு போட்டியில் கனடா- பெரு அணிகள் மோதின. இதில் கனடா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பெரு வீரர் மிகுயேல் அராயுஜோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் பெரு 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கனடா 74 நிமிடத்தில் கோல் அடித்தது. ஜோனாதன் டேவிட் இந்த கோலை அடித்தார்.

    • குரூப் டி-ல் ஆஸ்திரியா அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
    • குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - போலந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதன் மூலம் குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதியது. 6-வது நிமிடத்தில் ஆஸ்திரியா தனது முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து நெதர்லாந்து 47-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவும் 75-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியிம் கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

    அடுத்த சிறிது நேரத்தில் (80-வது நிமிடம்) ஆஸ்திரியா ஒரு கோல் போட்டு அசத்தியது. இறுதி வரை நெதர்லாந்து அணியால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. மேலும் குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    • பிரேசில் வீரர்கள் 695 முறை பந்தை பாஸ் செய்தனர்.
    • 9 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய நேரப்படி இன்று காலை கோஸ்டா ரிகா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

    பிரேசில் அணி டார்கெட்டை நோக்கி மூன்று முறை முயற்சித்தது. ஆனால் மூன்று முறையும் அதிர்ஷ்டம் கைக்கூடவில்லை. கோஸ்டா ரிகா ஒருமுறை கூட டார்கெட் நோக்கி பந்தை அடிக்கவில்லை.

    பிரேசில் வீரர்கள் 695 முறை பந்தை பாஸ் செய்தனர். கோஸ்டா ரிகா வீரர்கள் 249 முறைதான் பந்தை பாஸ் செய்தனர். பிரேசில் ஒரு மஞசள் அட்டையும், கோஸ்டா ரிகா 2 முறை மஞ்சள் அட்டையும் பெற்றது. பிரேசில் அணிக்கு 9 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கோஸ்டா ரிகாவுக்கு ஒருமுறைதான் கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா- பராகுவே அணிகள் மோதின. இதில் கொலம்பியா 2-1 என வெற்றி பெற்றது. 32-வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் கோல் அடித்தார். 42-வது நிமிடத்தில் ஜெஃப்பர்சன் லெர்மா கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் கொலம்பியா 2-0 ன முன்னிலை பெற்றிருந்தது.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் பாராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ 69-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கொலம்பியா 2-1 என வெற்றி பெற்றது.

    • குரேஷியா மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
    • ஸ்பெயின் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று குரூப் பி-யில் முதல் இடத்தில் உள்ளது.

    யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் குரேஷியா மற்றும் இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஸ்பெயின் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று குரூப் பி-யில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. 3 போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வி 1 டையுடன் உள்ளது. அல்பேனியா, குரேஷியா அணிகள் இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை.

    • அமெரிக்கா பொலிவியாவை 1-0 என வீழ்த்தியது.
    • உருகுவே 3-1 என பனமா அணியை எளிதாக வீழ்த்தியது.

    தென்அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரான கோபா அமெரிக்கா தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் அமெரிக்கா- பொலிவியா அணிகள் மோதின. இதில் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது இடத்தில் கிறிஸ்டியன் புலிசிக் முதல் குாலை பதிவு செய்தார். 44-வது நிமிடத்தில் ஃப்ளோரியன் பலோகன் 2-வது கோலை பதிவு செய்தார். இதனால் பாதி நேர ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என முன்னிலை பெற்றது, 2-வது பாதி நேரத்தில் பொலிவியா அணியால் பதில் கோல் போட முடியவில்லை. இதனால் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் உருகுவே- பனமா அணிகள் மோதின. இதில் உருகுவே 3-1 என வெற்றி பெற்றது. முதல் நேரத்தில் 16-வது நிடமிடத்தில் உருகுவே முதல் கோலை பதிவு செய்தது. மேக்சிமிலியானோ இந்த கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல்பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேரத்தில 84-வது நிமிடம் வரை கோல் விழவில்லை. 85-வது நிமிடத்தில் உருகுவே வீரர் டார்வின் நுனேஸ் கோல் அடித்தார். அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரம் வழங்கப்பட்டதில் உருகுவே 91-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தது. மத்தியாஸ் வினா இந்த கோலை அடிக்க உருகுவே 3-0 என முன்னிலைப் பெற்றது.

    94-வது நிமிடத்தில் பனமா ஆறுதல் கோல் அடித்தது. மிக்கேல் அமிர் முரில்லா இந்த கோலை அடிக்க உருகுவே 3-1 என வெற்றி பெற்றது.

    இதுவரை ஏ, பி, சி பிரிவுகளில் உள்ள அணிகள் தலா ஒரு போட்டிகளில் விளைாடியுள்ளன. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்க கோஸ்டா ரிகா அணியை எதிர்கொள்கிறது.

    ×