என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 872 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு பின்தங்கினார்.

    பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடத்தை பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
    • நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதினார்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு [Fencing] வீராங்கனை நாடா ஹபீஸ் [Nada Hafez] 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     

     

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை" என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் சுற்று 16 க்கு முன்னேறினார்.

     

    நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

    • அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.
    • கோவை அணிக்கு சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டி திண்டுக்கல்லில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலத் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. இதில் அமித் (67), துஷார் (55) ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அசுத்து வந்த பாலசந்தர் அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது. முகமது அலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோவை சார்பில் ஷாருக் கான் மற்றும் ஜதாவத் சுப்ரமணியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    201 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜிவி விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பிறகு சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி இணைந்து திருப்பூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க ஆரம்பித்தது. சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாச, முகிலேஷ் 31 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி 185 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை லைகா கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    • பி.வி. சிந்து (இந்தியா)- கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று), பகல் 12.50 மணி.
    • ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று), பிற்பகல் 2 30 மணி.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 6-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

    துப்பாக்கி சுடுதல்:-

    ஐஸ்வரி தோமர், ஸ்வப்னில் குசாலே (ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று), பகல் 12 30 மணி.

    பேட்மிண்டன்:-

    பி.வி. சிந்து (இந்தியா)- கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா), (பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று), பகல் 12.50 மணி. லக்ஷயா சென் (இந்தியா)- ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா) பிற்பகல் 1.40 மணி, எச்.எஸ். பிரனாய் (இந்தியா), டக் பாட் லீ (வியட்நாம்), (ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று), இரவு 11 மணி.

    டேபிள் டென்னிஸ்:-

    ஸ்ரீஜா அகுலா (இந்தியா)- ஜெங் ஜியான் (சிங்கப்பூர்) (பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று), பிற்பகல் 2 30 மணி.

    குத்துச்சண்டை:-

    லவ்லினா போர்கோஹைன் (இந்தியா)- சன்னிவா ஹாப்ஸ்டட் (நார்வே) (பெண்கள் 75 கிலோ தொடக்க சுற்று), மாலை 3.50 மணி. நிஷாந்த் தேவ் (இந்தியா)- ஜோஸ் கேப்ரியல் (ஈகுவடார்) (ஆண்கள் 71 கிலோ 2-வது சுற்று), நள்ளிரவு 12.34 மணி.

    வில்வித்தை:-

    தீபிகா குமாரி (இந்தியா)- ரீனா பர்னாட் (எஸ்தோனியா), (பெண்கள் தனிநபர் பிரிவு) மாலை 3.56 மணி. தருண்தீப் ராய் (இந்தியா)- டாம் ஹால் (இங்கிலாந்து) (ஆண்கள் தனிநபர் பிரிவு) இரவு 9.28 மணி.

    • சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    • இலங்கை சார்பில் மஹேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

    சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி முறையே 10 மற்றும் 39 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே (13), ரியான் பராக் (26) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (25) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இலங்கை சார்பில் மஹேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், வமிண்டு ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், சமிண்டு விக்ரமசிங்கே, அசிதா பெர்னான்டோ மற்றும் ரமேஷ் மென்டிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு வழக்கம் போல பதும் நிசங்கா (26), குசல் மெண்டிஸ் (43) மற்றும் குசல் பெரரா (46) நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது.

    இதனால் போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. சூப்பர் ஓவரில் இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார்.

    3 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இவர் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாச, இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 137 ரன்களை எடுத்தது.

    பல்லகெலே:

    இந்திய அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஓரளவு தாக்குப் பிடித்தார்.

    ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ரிங்கு சிங் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 13 ரன்னில் அவுட்டானார்.

    இதனால் இந்திய அணி 48 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதே ஓவரில் ரியான் பராக் 26 ரன்னில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 25 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது.

    இலங்கை சார்பில் தீக்ஷனா 3 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் ரஹேஜா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாலச்சந்தர் அனிருத் 21 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்துள்ளது. முகமது அலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்றுள்ளது.
    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பல்லகெலே:

    இந்திய அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இலங்கைபவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

    • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
    • ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் கோல் மழையால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான்-முகமது அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-13 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம்.
    • நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

    ஐசிசி 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

    ஆனால் அந்தத் தொடரில் நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா கூறிவருகிறது. ஏனெனில் 2008-க்குப்பின் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் வாரியம் ஒருவேளை வரவில்லையெனில் இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை நடத்தத் தயாராகியுள்ளது.

    இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவில் தங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதையும் தாண்டி இந்தியாவில் 2016 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாக சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடினமான நேரங்களிலும் நாங்கள் இந்தியாவுக்கு பலமுறை சென்றுள்ளோம். இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

    எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் பாகிஸ்தான் வாரியமும் அரசும் இந்தியா செல்வதற்கான வழியை துவங்கின. அதே போல இந்தியா விரும்பினால் வரலாம். ஆனால் விரும்பவில்லையெனில் பாதுகாப்பு என்பதை அவர்கள் சாக்காக பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு சாகித் அபிரிடி கூறினார்.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியின் 2 கோல்களையும் ஹர்மன்பிரித் சிங் அடித்து அசத்தினார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இந்த இரண்டு கோல்களையும் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் அடித்தார்.

    இதன்மூலம் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    • ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறினார்.
    • மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்து கொண்டார்.

    முதல் செட்டில் 1-1 என சமனிலை வகித்தது. 2வது செட்டில் 3-1 என இந்தோனேசிய வீராங்கனை முன்னிலை வகித்தார். 3வது செட்டில் 3-3 என சமனிலை வகித்தனர். 4வது செட்டில் பஜன் கவுர் 5-3 என முன்னிலை பெற்றார். 5வது செட்டில் 7-3 என கைப்பற்றி வென்றார்.

    இதன்மூலம் ரவுண்டு ஆப் 32 சுற்றுக்கு இந்திய வீராங்கனை பஜன் கவுர் முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு வீராங்கனையான அங்கிதா பகத் தோல்வி அடைந்தார்/

    ×