என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் நிதிஷ் ரெட்டி 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

    பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    8வது விக்கெட்டுக்கு இணைந்த வாஷிங்டன் சுந்தர்-நிதிஷ் ரெட்டி ஜோடி 127 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சில நிமிடங்களில் நிதிஷ் குமார் 114 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், போலண்ட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    செஞ்சுரியன்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் அரை சதம் கடந்து, 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. பாபர் அசாம் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. 19 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறியது.

    மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் 121 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்கா அணியும், 7 விக்கெட்களை வீழ்த்தினால் பாகிஸ்தானும் வெற்றி பெறும் என்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் நிதிஷ் ரெட்டி சதமடித்தார்.
    • நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமராவதி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

    பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்த இந்திய அணியை இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர்-நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தியது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    நிதிஷ் ரெட்டிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது முதலாவது சதமாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் டெஸ்ட் சதமடித்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ் ரெட்டி படைத்தார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

    இந்நிலையில், முக்கியமான தருணத்தில் மெல்போர்னில் சதமடித்து அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    நிதிஷ் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 425 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ரஹமத் ஷா இரட்டை சதமடித்து அசத்தினார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 154 ரன்னும், கேப்டன் கிரெய்க் எர்வின் 104 ரன்னும் எடுத்தனர். பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் கர்ரன் 74 ரன்னிலும், கைடனோ 46 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 3 விக்கெட்டும், நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரஹமத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

    ரஹமத் ஷா இரட்டை சதமடித்தும், ஹஷ்மதுல்லா சதமும் அடித்து அசத்தினர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்துள்ளது. ரஹமத் ஷா 231 ரன்னும், ஹஷ்மதுல்லா 141 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 361 ரன்கள் சேர்த்துள்ளது. நேற்று முழுவதும் ஜிம்பாப்வே அணியால் ஒரு விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை.

    • 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரை செய்தது.
    • இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரேயங்கா பாட்டீல் பெயரும் அடங்கும்.

    துபாய்:

    ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஐ.சி.சி.வழங்கி வருகிறது.

    இதேபோல் ஒவ்வொரு வருடமும் இளம் வீராங்கனைகளின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு அவர்களுக்கு 'வளர்ந்து வரும் வீராங்கனை விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு 4 பேர் அடங்கிய பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

    அதில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்து வீராங்கனை பிரேயா சார்ஜென்ட், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அன்னெரி டெர்க்சன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    • சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்ஷயா சென், சீன வீரரான ஹூ ஜே ஆன் உடன் மோதினார்.

    இதில் சென் 19-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேரினார்.

    • நிதிஷ் ரெட்டியிடம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆட்டம்.
    • நிதிஷ் இந்த தொடரின் முதல் போட்டியிலிருந்து தனது பொறுமை, நிதானம் ஆகியவற்றால் என்னை இம்ப்ரெஸ் செய்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 105 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்சமயத்தில் 116 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா போராடினால் வெல்லலாம் என்ற நிலையில் இருக்கிறது.

    இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு நிதிஷ் கை கொடுத்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் அவரை மட்டுமின்றி தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரையும் சேர்த்து பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிதிஷ் ரெட்டியிடம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆட்டம். அவர் இந்த தொடரின் முதல் போட்டியிலிருந்து தனது பொறுமை, நிதானம் ஆகியவற்றால் என்னை இம்ப்ரெஸ் செய்தார். இன்று அவர் அதை உச்சமாக எடுத்துக் கொண்டு இந்த தொடரின் முக்கியமான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அவருக்கு அற்புதமான திறமையுடன் வாஷிங்டன் சுந்தர் ஆதரவு கொடுத்தார். நன்றாக விளையாடினீர்கள்.

    என்று சச்சின் கூறியுள்ளார். 

    • நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தது.
    • இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் முன்னிலையை 116 ரன்னாக குறைத்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடி ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 221 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் நிதிஷ் குமார் ரெட்டியுடன் ஜோடி சேர்ந்து வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 127 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி 105 ரன்னுடனுன் களத்தில் உள்ளார்.

    தற்போது வரை ஆஸ்திரேலியா 116 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை சிராஜை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ரெட்டி எவ்வளவு ரன் விளாசினார் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் நாங்கள் வலுவான நிலையில் உள்ளோம் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து போலண்ட் கூறுகையில் "நாங்கள் 116 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளோம். நாங்கள் மிகவும் வலுவான நிலையில் உள்ளோம். உண்மையிலேயே இன்னும் சற்று கூடுதல் சிறப்பாக இருந்திருக்கனும். ஆனால், டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் ஏற்றம் இறக்கம் இருக்கும் என நினைக்கிறேன்.

    நாளை காலை விரைவாக ஒரு விக்கெட்டை வீழ்த்தி, சிறப்பான முன்னிலை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்பிறகு ஆட்டம் எப்படி செல்கிறது என பார்க்க வேண்டும்" என்றார்.

    • மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
    • தொடரானது சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்திருந்தது. நிதிஷ் 105 ரன்னிலும் சிராஜ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்னும் இந்திய அணி 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் அல்லது போட்டி டிரா ஆகும் பட்சத்தில் உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணி 3-வது மற்றும் 4-வது போட்டிகளில் வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. இதன் காரணமாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்திய அணி 4-வது போட்டியில் தோல்வியடைந்து 5-வது போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு கணக்கில் சமநிலையில் முடியும். அப்படி நடந்தால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.26 ஆக இருக்கும்.

    ஒருவேளை இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல தகுதி பெறாது. இரண்டிலும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிடும்.

    இந்த தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் போதும்.

    சமநிலையில் அப்படி இல்லையெனில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும். இப்படி இந்திய அணி மற்ற அணிகளின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    • நிதிஷ்குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
    • தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி 21 வயதில் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்தார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 164/5 என்ற மோசமான நிலையில் இருந்தது.

    இதனையடுத்து நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டு எடுத்து வந்தனர். சுந்தர் 50 ரன்னில் அவுட்டாகி வெளியேறினாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி 21 வயதில் முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்தார்.

    நிதிஷ்குமார் சதத்தை பார்த்த அவருடைய தந்தை ஆனந்த கண்ணீர் சிந்திய அதேநேரத்தில், வர்ணனைபெட்டியில் இருந்த ரவிசாஸ்திரியின் கண்களும் கண்ணீரில் மூழ்கியிருந்தன.

    நிதிஷ் ரெட்டி சதமடித்த போது இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் மற்றும் டிவி தொகுப்பாளர் ஜதின் சப்ரு ஆகியோர் வர்ணனை பெட்டியில் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ரவி சாஸ்திரியின் கண்கள் ஈரமாகின, அந்த தருணம் குறித்து பேசிய ரவிசாஸ்திரி "இந்த நேரத்தில் நிதிஷின் தந்தை மட்டுமல்ல, போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து இந்திய ரசிகர்களுன் கண்களில் கண்ணீர் இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • ஸ்பெயின் அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்தியது.
    • இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மிகப்பெரிய கால்பந்து தொடரான யூரோ 2024 ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளும், அதேபிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடம் பிடித்த முதல் நான்கு அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

    அதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் அந்த வகையில் காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை (1-1) பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    துருக்கியை 2-1 என வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஜெர்மனியை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    போர்ச்சுக்கலை (0-0) பெனால்டி சூட்அவுட்டில் 5-3 என பிரான்ஸ் வீழ்த்தி காலிறுதிக்க முன்னேறியது.

    முதல் அரையிறுதியில் இங்கிலாந்து- நெதர்லாந்து- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஸ்பெயின்- பிரான்ஸ் இடையிலான போட்டியில் ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

     ஜூலை 15-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினர். இதனால் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 47-வது நிமிடம்) ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. நிக்கோ வில்லியம்ஸ் இந்த கோலை பதிவு செய்தார்.

    பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்தது. அந்த அணியின் கோலே பால்மேர் கோல் அடிக்க போட்டி 1-1 என சமன் ஆனது.

    ஆனால் ஸ்பெயின் வீரர் மிகெல் ஒயர்சபால் 86-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஸ்பெயின் 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணியை கோல் அடிக்கவிடாமல் தடுக்க, 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி யூரோம் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றது.

    • முதல் நாள் ஆட்டத்தில் சான் கோன்ஸ்டாஸை முதல் 2 ஓவர்களுக்குள் 6-7 முறை வீழ்த்தியிருப்பேன்.
    • ஆனால் அன்றைய நாளில் அது நடக்கவில்லை.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.

    முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் நம்பர் ஒன் பவுலராக திகழும் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த வீரராக அவர் சாதனை படைத்தார். அத்துடன் பும்ராவுக்கு எதிராக ஒரே ஓவரில் (18) ரன்கள் குவித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

    அதன தொடர்ந்து பும்ராவை இனிமேல் தொடர்ந்து தாம் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என்று அவர் கூறினார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒருநாளும் புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது போன்ற பல அனுபவங்களை நான் பார்த்துள்ளேன். சாம் கான்ஸ்டாஸ் ஒரு சுவாரஸ்யமான பேட்ஸ்மேனாக தெரிகிறார். எந்த சூழ்நிலையிலும் நான் ஆட்டத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன். ஒருநாளும் ஆட்டத்தில் இருந்து தள்ளி இருப்பதாக நினைக்கவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் சான் கோன்ஸ்டாஸை முதல் 2 ஓவர்களுக்குள் 6-7 முறை வீழ்த்தியிருப்பேன்.

    ஆனால் அன்றைய நாளில் அது நடக்கவில்லை. கிரிக்கெட் விளையாட்டே அப்படிதான். சில நேரங்களில் சாதகமாகவும், சில நேரங்களில் பாதகமாகவும் அமையும். அதனால் சிறந்த வீரர்களை கூட விமர்சிக்க வேண்டிய சூழல் நிகழும். எந்த நேரத்தில் சவாலுக்காக தான் காத்திருக்கிறேன். ஒருநாளும் புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை.

    விக்கெட்டுகள் கிடைப்பது சில நேரங்களில் நம் கைகளில் இருக்காது. டி20 கிரிக்கெட்டை அதிகளவில் விளையாடி இருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 கிரிக்கெட்டை தான் விளையாடி வருகிறேன். அதனால் நாம் மிகச்சிறப்பாக பவுலிங் செய்யும் போது கூட நமக்கு விக்கெட் கிடைக்காது. ஆனால் சில சமயம், துல்லியத்தில் சிக்கல் உண்டாகும் போது கூட விக்கெட் கிடைக்கும்.

    என்று தெரிவித்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் பும்ரா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×