என் மலர்
விளையாட்டு
- நிதிஷ் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க் என மஞ்ரேக்கர் கூறியிருந்தார்.
- 4-வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் சதம் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்தும் நிதிஷ் குமார் ரெட்டி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சை மஞ்ரேக்கர் கூறியிருந்தார். நிதிஷ் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க் எனவும் அவர் கூறியிருந்தார்.
அவர் பேசுகையில், நிதிஷ் குமார் ரெட்டியை முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க். அவர் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்கான ஸ்பார்க்கை காட்டிவிட்டார். ஆனால் நிதிஷ் குமார் ரெட்டியை பிளேயிங் லெவனில் சேர்ப்பதால், இந்திய அணியின் பேலன்ஸ் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று கூறியிருந்தார். அவரால் 100 ரன்களுக்கு மேல் அடிக்க முடியுமா எனவும் கூறினார்.
இவரது விமர்சனத்துக்கு இந்த போட்டியில் சதம் அடித்து நிதிஷ் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது எக்ஸ்தள பதிவுக்கு பூமா ஸ்போர்ட்ஸ் பதிலளித்துள்ளது.
அதில், பூமா விளம்பரத்தின் போது நிதிஷ் குமார் ரெட்டி போட்டோஷூட் நடத்தினார். அப்போது நிதிஷ் வாயில் கையில் வைத்தப்படி இருக்கும் போட்டோவை வைத்து பூமா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
- இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
- அதிகபட்சமாக நிதிஷ் குமார் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி சதம் விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் விளாசிய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும் 8-வது வரிசையில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிதிஷ் குமார் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்:-
1. சச்சின் - 18 வயது 256 நாட்கள்
2. ரிஷப் பண்ட் - 21 வயது 92 நாட்கள்
3. நிதிஷ் ரெட்டி - 21 வயது 216 நாட்கள்
4. தத்து பட்கர் - 22 வயது 46 நாட்கள்
- பதும் நிசங்கா, குசல் மெண்டீஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது.
- ஒரு கட்டத்தில் இலங்கை அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்திருந்தது.
மவுண்ட் மவுங்கானுய்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.
இதில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராபின்சன் 11 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து மார்க் சாம்ப்மென் 15, க்ளென் பிலிப்ஸ் 8, மிட்செல் ஹே 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 62 ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன்னிலும் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் பினுரு பெர்னாண்டோ, மகேஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குசல் மெண்டீஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. குசல் மெண்டீஸ் 46 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த குசல் பெரேரா 0, கமிந்து மெண்டீஸ் 0, அசலங்கா 3, ராஜபக்சா 8 என வெளியேறினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிசங்கா 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 3 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே தேவை பட்ட நிலையில் அடுத்து 20 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் ஜகாரி ஃபௌல்க்ஸ், மட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது.
- உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள்.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 2-வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
3-ம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நிதிஷ் குமாரின் தந்தையிடம் சதம் குறித்து வர்ணனையாளர் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நிதிஷ் குமாரின் தந்தை கூறியதாவது:-
எங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த தினம். இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. 14-15 வயது முதலே நன்றாக ஆடி வந்தான். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுகிறான். உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள், சிறப்பான உணர்வைத் தந்த நாள். என்றார்.
உடனே கில்கிறிஸ்ட், 99 ரன்களில் இருந்த போது உங்கள் உணர்வுகள் என்ன என்றார்.. அதற்கு நிதிஷின் தந்தை, "ஒரே டென்ஷன் டென்ஷன் டென்ஷன் என்றார். ஒரு விக்கெட்தான் இருந்தது, நல்ல வேளை சிராஜ் நின்றார்" என்றார் நெகிழ்ச்சியுடன்
- பண்ட் விளையாடியது முட்டாள்தனமாக ஷாட் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
- இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை அடித்துள்ளது.
மெல்போர்ன்:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து இருந்தது. ரிஷப் பண்ட் 6 ரன்னிலும் ஜடேஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், 3 நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட், ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் வித்தியாசமான ஷாட் அடித்து லியான் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டனார்.
அப்போது கமெண்ட்ரியில் இருந்த சுனில் கவாஸ்கர், பண்ட் விளையாடியது முட்டாள்தனமாக ஷாட் என்று கடுமையாக விமர்சித்தார்.
அப்போது கமெண்ட்ரியில் பேசிய அவர், "இந்தியா தற்போது இருக்கும் சூழலில் இப்படியா விக்கெட்டை பறிகொடுப்பது? நிலைமையை புரிந்து விளையாட வேண்டும். இதுதான் எனது இயல்பு என்றெல்லாம் கூறமுடியாது. இது உங்கள் அணியை பிடித்து கீழே இழுப்பதுபோல் உள்ளது" என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை அடித்துள்ளது. நிதானமாக விளையாடிய நிதிஷ்குமார் சதம் அடித்து அசத்தினார்.
- பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.
- நிதானமாக விளையாடிய வாசிங்டன் சுந்தர் அரை சதம் அடித்து அசத்தினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.
சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாசிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.
இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாசிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் அடித்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் படைத்துள்ளார்.
3 ஆம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72, சாம் கோன்ஸ்டஸ் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதான இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாகினார். அவர் மீது விராட் கோலி மோதலில் ஈடுபட்டார். அதற்காக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் விதித்தது.
இந்நிலையில், தங்களுடைய நாட்டைச் சேர்ந்த இளம் வீரரை வேண்டுமென்றே இடித்து தள்ளிய விராட் கோலியை மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிகை முகப்பு பக்கத்தில் கோமாளியை போல் சித்தரித்து மோசமாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில், விராட் கோலியை கிண்டலடித்து மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிகை மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதற்கு "கர்மா: கோமாளி கோலியின் மோசமான நாள்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
விராட் கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்ததையும் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வாலை ரன் அவுட் செய்ததன் மூலமாகவும் கோலிக்கு இது ஒரு மோசமான நாளாக அமைந்தது என்று அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு கார்ல்சனுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நார்வே நாட்டு செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து போட்டியில் பங்கேற்க வந்ததற்காக உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேக்னஸ் கார்ல்சன் 2ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தார். போட்டியின் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு கார்ல்சன் மறுப்பு தெரிவித்த நிலையில் போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக FIDE தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார்.
- இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
- உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.
மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது ரிஷப் பண்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். அந்த சமயத்தில் அவர் தேவையற்ற ஷாட் அடித்து அவுட் ஆனதாக விமர்சனம் எழுந்துள்ளது.
போலண்ட் வீசிய 56வது ஓவரில் 3-வது பந்தை ரிஷப் பண்ட் லாப் ஷாட் அடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தார். அடுத்த பந்திலும் அவர் அதே போலத் தான் ஆடுவார் என போலண்ட் பந்து வீசினார். அது போலவே ரிஷப் பண்ட் கீழே குனிந்து ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பேட்டில் டாப் எட்ஜ் ஆன பந்து தேர்டு மேன் திசையில் நின்று இருந்த நாதன் லயனிடம் கேட்ச் ஆனது.

இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பிட்ட 2 பீல்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த இடத்தில் ரிஷப் பண்ட் பந்தை அடித்தார். இது முட்டாள்தனமானது. அந்த சமயத்தில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
இது உங்கள் இயல்பான விளையாட்டு அல்ல. அது ஒரு முட்டாள் ஷாட். இது உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.
- நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
- சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
மெல்போர்ன்:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.
சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் 82 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாசிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பாக்ஸிங் டே டெஸ்டில் அரை சதம் கடந்ததை 'புஷ்பா' ஸ்டைலில் நிதிஷ் குமார் கொண்டாடினார்.
தற்போதுவரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 69 ரன்களிலும் வாசிங்டன் சுந்தர் 34 ரன்களிலும் களத்தில் ஆடி வருகின்றனர்.
- முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவித்தது.
- சீன் வில்லியம்ஸ், எர்வின், பென்னெட் ஆகியோர் சதமடித்தனர்.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கைடனோ 46 ரன்னில் அவுட்டானார்.
சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் மற்றும் பென்னெட் ஆகியோரும் சதம் கடந்து அசத்தினர்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.
- சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், உலக தர வரிசையில் 12-ம் இடம் வகிக்கும் இந்தியாவின் லக்ஷயா சென், உலக தர வரிசையில் 17-ம் இடம் வகிக்கும் ஹாங்காங்கின் ஆங்கஸ் இங் கா லாங் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை சென் இழந்தார். இதனால் சுதாரித்த சென் அடுத்த இரு செட்களைக் கைப்பற்றினார்.
இறுதியில் லக்ஷயா சென் 10-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் சீன வீரரான ஹூ ஜே ஆன் (18) என்பவருடன் சென் மோதுகிறார்.






