என் மலர்
விளையாட்டு
- ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பாலாஜி, வரேலா ஜோடி அமெரிக்க ஜோடியுடன் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 74-வது இடத்தில் உள்ள பாலாஜி அவரது மெக்சிகன் ஜோடியான மிகுவல் ரெய்ஸ்-வரேலா மற்றும் அமெரிக்க ஜோடியான லெர்னர் டியென்- அலெக்சாண்டர் கோவாசெவிக் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்க ஜோடியான லேர்னர் டியென் மற்றும் அலெக்சாண்டர் கோவாசெவிச்சை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் பாலாஜி மற்றும் ரெய்ஸ்-வரேலா நான்காவது நிலை வீரர்களான ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் மற்றும் அர்ஜென்டினாவின் ஹொராசியோ செபாலோஸுக்கு எதிராக 2-வது சுற்றில் மோதவுள்ளனர்.
- சுப்மன் கில் 269 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- இங்கிலாந்து தரப்பில் பஷீர் 3 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வாஷிங்டன் சுந்தர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பவுண்டரிக்கு பறக்க விட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அரை சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டர் சுந்தர் 41 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் 269 ரன்களில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பஷீர் 3 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இதில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவாக் ஜோக்கொவிச் (செர்பியா) மற்றும் டேனியல் எவன்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் 6-3, 6-2, 6-0 என்ற கணக்கில் கோக்கோவிச் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
- இங்கிலாந்தில் தனி நபராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார்.
அதன்படி SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இதன்மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவான்களை சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
23 வயது 39 நாட்கள் - எம்.ஏ.கே. பட்டோடி vs இங்கிலாந்து, டெல்லி, 1964
25 வயது 298 நாட்கள் - சுப்மன் கில் vs இங்கிலாந்து, எட்ஜ்பாஸ்டன், 2025
26 வயது 189 நாட்கள் - சச்சின் டெண்டுல்கர் vs நியூசிலாந்து, அகமதாபாத், 1999
27 வயது 260 நாட்கள் - விராட் கோலி vs மேற்கு ஆப்பிரிக்கா, நார்த் சவுண்ட், 2016
இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் தனி நபராக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்:-
சுப்மன் கில் 222 பர்மிங்காம் 2025
சுனில் கவாஸ்கர் 221 ஓவல் 1979
ராகுல் டிராவிட் 219 ஓவல் 2002
சச்சின் டெண்டுல்கர் 193 லீட்ஸ் 2002
ரவி சாஸ்திரி 187 ஓவல் 1990
மினூ மங்காட் 184 லார்ட்ஸ் 1952
- இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது.
- ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
- இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம்.
- ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் சக வீரர் மறைவுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். இப்போதுதான் திருமணமும் செய்து கொண்டார். ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்.
என கூறினார்.
- 11 ரன்னில் சதத்தை ஜடேஜா தவறவிட்டார்.
- இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விளையாடிய ஜடேஜா அரைசதமும் கில் 150 ரன்களும் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இதனையடுத்து 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 168 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஜூலை 9, 2024 நியமிக்கப்பட்டார்.
- கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் 3-வது வரிசையில் நிலையான வீரரை விளையாட வைக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஜூலை 9, 2024 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார்.
கம்பீரின் தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பல மோசமான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. அவரது பயிற்சியாளர் பதவியில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (0-3) தோல்வியடைந்தது. இது இந்தியாவின் முதல் முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடர் தோல்வியாகும். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் 3-வது வரிசையில் நிலையான வீரரை விளையாட வைக்கவில்லை.
அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 3-வது வரிசையில் பட்டிக்கல் களமிறங்கினார்.
2-வது டெஸ்டில் சுப்மன் கில், 3-வது டெஸ்டில் கில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து கேஎல் ராகுல், மீண்டும் கில் 3-வது வரிசையில் இறங்கினார்.
அதனை தொடர்ந்து இங்கிலாந்து எதிரான தொடரில் 3-வது வரிசையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய சுதர்சன் களமிறங்கினார். முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் 2-வது டெஸ்ட்டில் கருண் நாயர் அந்த வரிசையில் களமிறங்கினார்.
இப்படி கடந்த 7 டெஸ்ட் போட்டியில் ஒரு நிலையான வீரரை 3-வது வரிசையில் களமிறக்கியதில்லை.
அவரது முதல் ஆறு மாதங்களில், இந்திய அணி 26 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 14 வெற்றிகள், 10 தோல்விகள், ஒரு டிரா மற்றும் ஒரு டை பெற்றது.
- 2-வது டெஸ்டில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
- ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
பிர்மிங்காம்:
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. சாய் சுதர்சன், பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதன்மூலம் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் குல்தீப் யாதவ் இல்லாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி தங்களின் சிறந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது. இதுவே இந்தியாவுக்கு வெற்றி பெற சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி ரன்களைக் குவித்தால், அது வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.
பிட்ச்சில் சிறிது சுழற்சி இருக்கும் நிலையில், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாதது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.
என்று கங்குலி கூறினார்.
- லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
- 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்குப் பிறகு போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.
கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- என்ன செய்ய வேண்டும் என்பதில் கில் தெளிவாக இருக்கிறார்.
- நாங்கள் எங்கள் அணுகு முறையில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
பர்மிங்காம்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமல் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் பும்ரா ஆகியோருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் இடம் பெற்றனர். முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்து இருந்தது.
கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்தார். அவர் 114 ரன்னுடனும், ஜடேஜா 41 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ஜெய்ஸ்வால் (87ரன்), கே.எல். ராகுல் (2), கருண் நாயர் (31)ரிஷப் பண்ட் (25) , நிதீஷ் குமார் ரெட்டி (1) ஆகியோர் அவுட் ஆனார்கள்.
கேப்டன் பதவியில் தொடர்ந்து 2-வது சதத்தை பதிவு செய்த 4-வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். இங்கிலாந்து மண்ணில் அசாரூதீனுக்கு பிறகு கேப்டன் பதவியில் தொடர்ந்து 2-வது சதத்தை சுப்மன் கில் அடித்துள்ளார்.
சுப்மன் கில் அற்புதமான கேப்டன் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு ஜெய்ஸ்வால் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சுப்மன் கில் பேட்டிங் செய்யும் விதம் அற்புதமாக உள்ளது. நம்ப முடியாத வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு கேப்டனாக அவர் அற்புதமாக செயல்படுகிறார். என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். மேலும் நாங்கள் எங்கள் அணுகு முறையில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எந்த குழப்பமும் இல்லை.
நாங்கள் பேட்டிங்கை ரசிக்கிறோம். ஆட்டத்தை நீண்ட நேரம் எடுத்து செல்ல தயாராக இருப்பவர்களுக்கு தான் இந்த யோசனை. நாங்கள் அனைவரும் ஒரே மன நிலையில் இருக்கிறோம். லீட்ஸ் ஆடுகளத்தை ஒப்பிடுகையில் இங்கு வேகப்பந்தின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது.
சதம் அடிக்க முடியாமல் வெளியேறியது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.
ஜெய்ஸ்வால் 13 ரன்னில் சதத்தை தவறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப் அணியில் இடம்பிடித்துள்ளார்.
- பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டெய்ன் தனது எக்ஸ் பதிவில், "போர்ச்சுகல் அணியில் உலகத்திலேயே தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் ரொனால்டோ தான். ஆனால் அவர்கள் அவரையே அணியில் விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். இது பைத்தியக்காரத்தனம். அதேபோல இந்தியாவும் பும்ராவை அணியில் வைத்துகொண்டே விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். எனக்கு இது குழப்பமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.






